*
திட்டிய வசவுகளின் மீது
நிறங்கள் வழிகின்றன
ஒரு மழைத் தூறல் சாத்தியமாக்க முடியாத
ஈரத்தை அவை உற்பத்தி செய்கின்றன
மறுபேச்சு தீர்ந்து போகும் நொடிகளை
காலம் எவ்வேப்போதும் தந்து உதவுவதில்லை
வசவுகள் புறப்படும் திசைகளின்
பருவநிலை பெரும்பாலும் கோடையாகவே தகிக்கிறது
அது
அபூர்வமாக கொண்டுவரும் பனிக்காலம்
தன்னிச்சையாக அமைய நேர்வது
நள்ளிரவின் ஆழ்ந்த இருளாகிறது
ஒவ்வொரு எழுத்தின் குளிர்ந்தத் தன்மையும்
அப்போதும் கொண்டிருக்கிறது
பாலைக் கோடையின் நிழலுக்குள்
ஒளிந்திருக்கும் ஒரு பகலின் வெப்பத்தை
திட்டும் வசவுகளின் மீது
வழியும் நிறங்கள்
நான் அறிந்திராத ஒரு மௌனக் கணத்தில்
அமைதியாக வெளியேறி விடுகிறது
சரியாக சாத்தாத ஜன்னலின் வழியே
*****
--இளங்கோ (