கீற்றில் தேட...


வெட்கத்தின் கண்கள்
கூசிச் சிணுங்க
ஆடை களைந்து
உடலசைக்கிறது மூங்கில்

இரவு தாவி அணைக்க
சிலிர்க்கிறது மேனி
மருதாணி பூசிய மனது
இடையறாது இசைக்கிறது
இனிய கானம் 

ஓவியம் தீட்டுகிறது தூரிகை
மேனியெங்கும்
வளைந்து நெளிந்து
சிலிர்த்து பாய்கிறது 
மாற்று நிறத்தில் உடற்பானம்

கூந்தல் கோதி
காதுமடலோரம்
வசியமொழி இசைக்கும்
தூரிகைக்கிசைந்து
வளைந்தாடுகிறது மூங்கில் 

துளிதுளியாய்
மூங்கிலினுள்ளே நிரப்புது
தூரிகை
பூவில் பிழிந்த சாறதனை

நிரம்பிவழியும்
மூங்கில் வழியே
வெடித்துச் சிரிக்குது
மகரந்த மொட்டுகள்!!!