உன் மேல்
உமிழ்கிற அளவிற்கு
கேவலமானதில்லை
எனது எச்சில்

தேய்ந்து போன
எனது செருப்புகளும்
உன்மேல் மோதி
சிறப்பை இழக்காது

முகம் சுளித்தபடி
அள்ளி வீசுகிற
என் வீட்டு நாயின்
அசிங்கங்களைவிட
அருவருப்பானது
உனது செயல்

உன்னைப் பற்றி
சிந்திக்கிற நிமிடங்களில்
உதிர்ந்து போன எனது
முடிகளை சேகரிக்கலாம்

உயிர்ப் பலிகளை
அடுக்கி அடுக்கி நீ
அமர்ந்திருக்கிற இடம்
தரைமட்டமாகிற நிமிடத்தில்
விலங்குகளும் சிரிக்கும்

பலரும்
மகிழ்கிற விதமாய்
நிகழ்கிற உனது
மரணத்திலிருந்து தொடங்கும்
எனது அத்தியாயம் .
Pin It