தொடர்புடைய படைப்புகள்

http://www.vinavu.com/2015/10/05/lottery-mafia-santiago-martin/

மே பதினேழு இயக்கத் தோழர்கள் குறித்த அவதூறுகளை செய்தியாக்கி கட்டுரையை வடிவமைத்து ம.க.இ.க வெளியிட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. ஒரு புரட்சிகர இயக்கத்தின் எந்த ஒரு சனநாயகத் தன்மையுமற்று, அவதூறுகளை ஆதாரங்களாக ஒரு செய்தியைக் கட்டமைப்பதும், தினமலர் போன்ற மூன்றாம் தர பத்திரிக்கைகளின் செய்தித்தன்மையும் வேறுவேறானதல்ல. தினமலரினைப் போலல்லாமல் ஒரு சனநாயக புரட்சிகர செயலுக்கான இயக்கமாக ம.க.இ.க தலைமைக்குழு கருதுமானால், மே பதினேழு இயக்கத்தின் மீது வைத்த அவதூறுக்கான ஆதாரத்தினை வெளியிடுவது அதன் கடமையாகிறது. ம.க.இ.கவின் தோழர்களே! உங்களின் புரட்சிகர நேர்மையை வெளிப்படுத்துங்கள்.

- மே பதினேழு இயக்கம்

Comments

13 comments

13
அறிவுச்செல்வன்
மே 17 இயக்கத்தவர்கள் உண்மையில் சித்த தெளிவுடன்தான் பேசுகிறார்களா? பாலியல் வன்புணர்வுக்கு ஆதாரம் கேட்ட எஸ்.வி.சேகர் போல இருக்கிறது, மே 17 இயக்கம் ம.க.இ.க.விடம் ஆதாரம் கேட்பது. சாட்சிகளை வைத்துக் கொண்டா காசு வாங்கியிருப்பார்? லாட்டரி மாபியா மார்ட்டினின் மகனுடன் திருமுருகன் காந்தி மேடை ஏறியிருக்கிறார். இதற்கு புகைப்பட ஆதாரம் வினவு கட்டுரையில் இருக்கிறது. இருவருக்கும் நட்புறவு இருந்தது என்பதையும், திருமுருகன் 50 லட்சம் பணம் வாங்கியிருக்கிறார் என்பதையும் திருமுருகனுக்கு நெருக்கமான நண்பராகவும், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகவும் இருந்த உமர் சொல்லியிருக்கிறார். உமர் சொல்லி இரண்டு மாதத்திற்கும் மேலாகிறது. இதுவரை திருமுருகன் இந்தக் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், ம.க.இ.க. மீது மே 17 பாய்கிறது. ம.க.இ.க. தாங்களே இதைக் கண்டுபிடித்ததாக சொல்லவில்லை; உமர் சொல்லியதைத்தான் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். இதற்கு ஆதாரத்தை ம.க.இ.க.விடம் கேட்டால் எப்படி? திருமுருகன் குற்றமற்றவர் என்றால் ஒன்று உமர் மீது வழக்கு தொடுத்திருக்க வேண்டும். அடுத்து, தனது மற்றும் தன்னைச் சார்ந்தவர்களின் சொத்து விவரங்களையும், வங்கிக் கணக்கு விவரங்களையும் வெளியிட்டு, தன்னை நிரூபித்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாமல் கள்ள மவுனம் காப்பது, சந்தேகத்தை வலுப்படுத்தவே செய்யும்.
புதுநிலா
செய்திகள் ஏதும் கட்டமைக்கப்படவில்லை,அறிவுச்செல்வன் குறிப்பிட்டது போல லாட்டரி மாபியா மார்ட்டினின் மகனுடன் திருமுருகன் காந்தி மேடை ஏறியிருக்கிறார் . இதற்கு புகைப்பட ஆதாரம் வினவு கட்டுரையில் இருக்கிறது. இருவருக்கும் நட்புறவு இருந்தது என்பதையும், திருமுருகன் 50 லட்சம் பணம் வாங்கியிருக்கிற ார் என்பதையும் திருமுருகனுக்கு நெருக்கமான நண்பராகவும், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர ்களில் ஒருவராகவும் இருந்த உமர் சொல்லியிருக்கிற ார். உமர் சொல்லி இரண்டு மாதத்திற்கும் மேலாகிறது. இதுவரை திருமுருகன் இந்தக் குற்றச்சாட்டிற் கு மறுப்பு தெரிவிக்கவில்லை.மே 17 உங்க நேர்மை ஊர் சிரிக்கிறது.ம.க.இ.க வின் நேர்மை தெளிவாக உள்ளது.
Krishnan
ஐ.நா., அமெரிக்கா பற்றியெல்லாம் புட்டு, புட்டு வைக்கும் திருமுருகனுக்கு 'லாட்டரி' மார்ட்டினின் மகன்தான் டைசன் என்பது தெரியாது என்று சொல்கிறதா மே 17 இயக்கம்? தெரிந்துதான் பழகியிருக்கிறார் என்பது உமரின் நீண்ண்ண்ண்ட கட்டுரையைப் படிக்கும்போது நமக்குத் தெரிகிறது. இதற்கு மே 17 இயக்கம் தன்னிலை விளக்கம் கொடுக்காமல், ம.க.இ.க.வைக் குறை சொல்வது சரியல்ல...
ராஜன்
தினமலர் வழியில் ம.க.இ.க. என்பதை விட, கருணாநிதி வழியில் திருமுருகன் என்பது சரியாக இருக்கும். கருணாநிதி அப்பாவுக்கு தோஸ்த்.. .திருமுருகன் புள்ளைக்கு தோஸ்த்...
venkatesh
சரியா பேசினாலே ம.க.இ.க.காரங்க அதுக்குள்ளே ஆயிரம் குறை கண்டுபிடிச்சி பேசுவாங்க.. இதுலே மே 17காரங்க ஒரு பாராவை மட்டும் எழுதி, அதுலே ஆயிரம் ஓட்டையை விட்டுட்டு போயிருக்காங்க... போட்டு கும்மப் போறாய்ங்க...
அகரன்
வினவு கட்டுரை எந்த அடிப்படைல ஒரு அவதூறான குற்றச்சாட்டை ஆதாரமா வைக்குதுன்னு கேள்விக்கு பதில் சொல்லுங்கப்பா?...உமரும், திருமுருகனும் நண்பருங்க.. உமரே கட்டுரை போட்டுட்டாரு , அதனால அது உண்மைன்னு சொல்றதுக்கு பேருதாய்யா தினமலர் ஸ்டைல் கட்டுரை... இதுல எங்கய்யா புரட்ச்ச்ச்சிகரம் வருது... மகஇகவைப் பத்தி, மருதையனை பத்தி ஆயிரம் கட்டுரை, புத்தகம் வந்திருக்கு...இதையெல்லாம் ஆதாரமா வச்சி கட்டுரை எழுத முடியும்?... உமரோட கட்டுரையை வாசிச்சா வாந்தி தான் வரும்.. திருமுருகனை மட்டுமல்ல பலரோட தனிப்பட்ட தகவலை விளக்கமா எழுதி போட்டுருக்காரு... போலீஸ்காரனுக எழுதுற குறிப்பு மாதிரியே இருக்கு... 50 லட்சம் வாங்குனாரு, 50 கோடி வாங்குனாருங்கரதுக்கு ஆதாரத்த உமர் கொடுத்து அதை எடுத்து நீங்க பயன்படுத்துனா அதுல ஒரு புரட்சிகரத்த பாக்கலாம்..எல்லாரும் சேர்ந்து மே17 இயக்கத்த அம்பலப்படுத்தலாம்... . 50 லட்சத்துக்கு அவரும் ஆதாரம் தரல.. நீங்களும் தரல.. திருமுருகன் மேல , மே17 மேல குற்றச்சாட்டு வைக்கனும்னா அரசியலா வையுங்க..அதுக்கு பதிலா ரெண்டு சட்டை சேர்த்து வாங்கினாரு, பைக்ல அளவுக்கு அதிமா பெட்ரோல் போட்டாருன்னு தினமலர்தனமா தான் எழுதி இருக்கு வினவு.. முதல்ல கேட்ட கேள்விக்கு ஆதாரத்த உமர் கிட்ட வாங்கி வினவுல போடுங்க.. மகஇகல வாய்சவடால் தான் .. ஆகஸ்ட் 30ல டாஸ்மார்க் கடைய அடைக்கலைன்னான்னு சீமான் மாதிரி பஞ்ச் டயலாக் பேசுன கட்சி தான மக்கள் அதிகாரம்.. இப்போ செப்டம்பர் 30 கடந்து அக்டோபர் 30ம் சீக்கிரம் வரப்போவுது... டயலாக் என்ன ஆச்சு?.. .. சினிமாக்காரன் மாதிரி டயலாக் பேசுர புரட்சியாளர்களே.. போய் வேலையப்பாருங்கய்யா
அகரன்
சரியா பேசினாலே ம.க.இ.க.காரங்க அதுக்குள்ளே ஆயிரம் குறை கண்டுபிடிச்சி பேசுவாங்க.. // அவிங்க குறைய ஆயிரம் பேரு எழுதி இருக்காங்க .. புஸ்தகமே நிறைய வந்துருக்கு.... கொக்கோ கோலா போராட்டத்துல மகஇகஓடிப்போன மேட்டரு இன்னும் நெல்லை டவுன்ல பேமஸ் ... விடுதலைப்புலிகள் பத்தி பக்கம் பக்கமா எழுதுவாங்க.. இப்போ என்னடான்னா சவுண்டக் காணோம்.. சிங்களக்காரன் காசு கொடுக்கறத நிறுத்திட்டானோ?... ரயகரன், தமிழ்சர்க்கிள் எல்லாம் எங்க போனாங்க?... சிங்களம் செய்யுற அட்டூழியத்தக்கூட எழுதவேணாம், புலிகள் பத்தி எழுதுன அளவுக்கு இந்திய உளவுத்துறைய பத்தி என்னிக்காச்சும் எழுதி இருப்பாங்களா?... மக இகவே இந்திய உளவுத்துறையின் கைக்கூலின்னு நிறைய கட்டுரை இருக்குங்க வெங்கடேஸ்... என்னிக்காச்சும் இந்தியாவுக்கு எதிரா குரல் கொடுத்து இருப்பாகளா மக இக.. புலிகள் மேல ’சோ’ மாமாவுக்கு என்ன வெறுப்பு இருக்கோ அதவிட ரெண்டு மடங்கு மருதையன் மாமாவுக்கு வெறுப்பு உண்டு.... 2011வரைக்கும் புலிகள் பாசிசம் பத்தி பக்கம் பக்கமா எழுதுன மக இக , ஏன் ரணில், மைத்ரி, சந்திரிகா, பொன்சேகா, இந்தியாவோட அதிகாரிகள் பத்தி மூச்சுவிட மாட்டேங்குது?... மருதையன் குடுமியும், தமிழ்நாட்டு பாப்பான் குடுமியும் ஒரே இடத்துல மாட்டி இருக்குன்னு எழுதலாமா?.. மார்டின் குற்றவாளி, அப்ப்டின்னா மார்டின் பையனும் குற்றவாளின்னா, மருதையன் அப்பா பார்ப்பான், அதுனால மருதையனும் பார்ப்பானா?... கருமம்யா... மார்டினப் பத்தி எழுதுனா சரி.. அவன் பையன் தப்பு பன்னுனா அதையும் எழுது... அவர் பையன் இதுக்கு முன்னாடி நாம் தமிழர்ல இருந்தார்ல, சீமானுக்கு காசு கொடுத்தாரா?.. சீமான் எப்படி மார்டின் பையன் மாதிரி நீ சொல்ற மாதிரி பணக்கார ’கரவைப் பசு’வ விட்டுருப்பாரு.. அதை உமரும் எழுத மாட்டாரு, நீயும் கேக்க மாட்டே... உனக்கு புலி ஆதரவாளர் பத்தி அவதூறு எழுதுனும்னா அது அல்வா சாப்டரமாதிரி... சிங்கள அரசப் பத்தி மட்டும் எழுத கை வராது.. ஏன்?... சிங்கள-இந்திய கைக்க்கூலித்தனத்த எழுதுனா வினவு எடிட்டருக்கு கைகால் விளங்காமா போயிருமா என்ன?... காசுய்யா எல்லாம் காசு... சிங்களவன் இங்க இருக்குற பத்திரிக்கைக்கு எவ்வளவு காசு கொடுத்தான்கிரது எல்லாருக்கும் தெரியும்...
அகரன்
// .....மே 17 இயக்கத்தவர்கள் உண்மையில் சித்த தெளிவுடன்தான் பேசுகிறார்களா? பாலியல் வன்புணர்வுக்கு ஆதாரம் கேட்ட எஸ்.வி.சேகர் போல இருக்கிறது, மே 17 இயக்கம் ம.க.இ.க.விடம் ஆதாரம் கேட்பது. சாட்சிகளை வைத்துக் கொண்டா காசு வாங்கியிருப்பார ்? +++ .....அடேங்கப்பா.. என்னா அறிவு... உமர் இந்திய அரசுகிட்ட காசு வாங்கிட்டு மே17 இயக்கத்த காட்டி கொடுத்திருக்காருன்னு சொல்லப்படுற குற்றச்சாட்டுக்கு என்னய்யா பதில் ?.. இத கட்டுரையா எழுதி வெளியிட்டா அதை வைச்சு ஒரு கட்டுரை போடுவீங்களா... உமர் செஞ்ச காட்டிகொடுத்தல் இந்த களத்துல வேலை செஞ்சவுங்களுக்கு தெரியும்.. சிங்கள அரசு அடக்குமுறைக்கு தப்பி வெளியேறி பணியாற்றியவர்கள், இலங்கைக்குள் இருந்து அரசினை எதிர்த்து வேலை செய்தவர்கள் என எல்லாரையும் உமர் காட்டி கொடுத்தது அவர் கட்டுரைய படிக்கறவனுக்கு தெரியும்..இது அரசியல் செயல்பாட்டுல இருக்குறவங்களுக்கு எளிதில் புரியுற செய்தி... மக இக ஒருவேளை உமரைப் போல இந்திய உளவு நிறுவனத்துக்கு வேலை செய்யுதோ என்னவோ?... மக இக மையக்குழுவ , உமர் கட்டுரைய படிச்சு பாக்கச் சொல்லுங்க காம்ரேட்.. இது என்ன வகையான அரசியல் தத்துவத்தை உமர் கக்கி இருக்காருன்னு அவர் படிச்சு சொல்லட்டும்...
அகரன்
சூறாவளி எனும் தோழர்கள் மக இகவின் சாதி வெறியை பற்றி எழுதிய கட்டுரைகள் இன்றும் உயிரோடு இருக்கிறது... அரசியலாக அவர்கள் எழுப்பிய கேள்விகள் இன்னும் அப்படியே இருக்கிறது.. மக இகவின் அப்பட்டமான பார்ப்பனிய சாதிவெறியை கண்டு சக புரட்சிகர இயக்கங்கள் அடைந்த அறுவறுப்புகள் இன்னும் போகவில்லை காம்ரேட்ஸ்....
அகரன்
· மகஇக என்ற மக்கள் கலை இலக்கியக்கழகம் அமைப்பின் தலைமைக்கு தகுதியானவர் மருதையன்தான்.இவர் பிறப்பால் பார்ப்பனர் என்பதால் அல்ல.அவருக்குத்தான் இயல்பாகவே அந்த அறிவாற்றல் உள்ளது. · கீழைக்காற்று வெளியீட்டகத்திற்கு துரைசண்முகம்தான் தலைமை ஏற்க முடியும்.அவர் வைசியர் என்பதால் அல்ல.அவரிடம் தான் இயல்பாகவே வியாபார ஞானம் இருக்கிறது. சூறாவளி தோழர்கள் எழுதிய மக இகவின் உள்கட்சி பண்பாடு பற்றிய கட்டுரையில் இருந்து ஓரிரு வரிகள்.. ஒருவேளை இதை வைத்து தான் மார்டினின் மகனும் அவரைப்போன்றவர் எனும் சனதான தர்மத்தினை தூக்கி பிடிக்கிறதா மக இக?... உங்களைப்பத்தி எழுதுனா வண்டி வண்டியா கட்டுரைகள் கொட்டுது.. என்ன செய்யலாம்?.. மீள் பிரசுரம் செய்யலாமா?????.. உமர் கட்டுரையை வைத்து எழுதியதைப் போல இக்கட்டுரைகளை அடிப்படையாக வைத்து குற்றச்சாட்டு புலனாய்வு (!!!**##) கட்டுரை எழுதலாமா காம்ரெட்ட்?
selva
முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவர் இயக்கத்தின் மொத்த செயல்பாடுகளையும் குற்றம் சுமத்துகிறார், இயக்கத்தின் அந்தரங்க உரையாடல்களை அம்பலப்படுத்துகிறார், சொல்லப் போனால் காட்டி கொடுக்கிறார். ஒரு பொறுப்புள்ள அரசியல் அமைப்பாக இருந்திருந்தால் மகஇக என்ன செய்திருக்க வேண்டும். உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்களின் செயல்பாடுகளை காட்டி கொடுக்க பட்டிருப்பது அப்பட்டமாக தெரியும் பட்சத்தில் ஒரு பொறுப்பான புரட்சிகர அமைப்பாக மகஇக என்ன செய்திருக்க வேண்டும்?. பொதுவெளியில் வைக்க முடியாத மறுப்பு ஆதாரங்கள் இருக்கிறதா என்று மே 17 ஐ கேட்டிருக்க வேண்டும், அப்படி மகஇக கேட்டு மே 17 தர மறுத்திருந்தால் வினவு கட்டுரையில் ஒரு நியாயம் இருக்கலாம். ஒரு பொறுப்பான தரப்பில் இருந்து எந்த பதிலையும் எதிர்பார்க்காமல் பொறுக்கித்தனமான குற்றச்சாட்டை மட்டும் வைத்துகொண்டு கட்டுரை எழுதியிருப்பதன் மூலம் தாங்கள் பொறுப்பானவர்களா இல்லை போருக்கிதனமானவர்களா என்பதை மகஇக வெளிப்படுத்தியிருப்பதாகவே பார்க்க முடியும்.
selva
மகஇக வுக்கு எவ்வளவோ புரட்சிகர வேலைத்திட்டங்கள் இருக்கு. இந்திய தேசிய புரட்சிய நடத்தனும், பன்னாட்டு முதலைகளை வீழ்த்தனும். இப்படி எவளவோ. இன்னும் தெளிவா வெளக்கனும்னா கடந்த செப்டெம்பர் மாதம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டி அரசியல் ரீதியான போராட்டங்களை சர்வதேச அரங்கில் நிகழ்த்திக் கொண்டிருந்த போது, அதைப்பற்றி ஒரு கட்டுரை கூட தன்னுடைய புரட்சிகர இணைய தளமாம் வினவில் எழுத முடியாத அளவிற்கு, உலகெங்கிலுமுள்ள நூற்றுக்கணக்கான புரட்சிகர வேலைகளை தங்கள் புரட்சிகர கட்டுரைகள் மூலமாக நகர்த்திக் கொண்டிருந்ததென்றால் பாருங்களேன்.. அப்படிப்பட்ட வினவிற்கு சாதாரண லெட்டர் பேடு இயக்கமான மே17 ஐ பற்றி ஒரு மொட்டை கடுதாசி அளவிற்கான ஆதரம் கிடைத்தவுடன் தன்னுடைய இடையயராத புரட்சிகர கட்டுரைகளுக்கு நடுவிலும் மே17ஐ பற்றிய கிசுகிசுகளுக்காக ஒரு கட்டுரை எழுத முடிகிறதென்றால் உண்மையிலேயே இவங்க பெரிய போரட்சிக்காரங்கதான்.. நோ டவுட்.
.இளையோன்.
//ஆகஸ்ட் 30ல டாஸ்மார்க் கடைய அடைக்கலைன்னான்ன ு சீமான் மாதிரி பஞ்ச் டயலாக் பேசுன கட்சி தான மக்கள் அதிகாரம்.. இப்போ செப்டம்பர் 30 கடந்து அக்டோபர் 30ம் சீக்கிரம் வரப்போவுது... டயலாக் என்ன ஆச்சு?.. ..// திரு அகரன்,இது என்ன வகையான பரிசீலனை?. //சூறாவளி எனும் தோழர்கள் // திரு அகரன், இவர்கள் மக்கள் மத்தியில் எத்தனை போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர்?. // கடந்த செப்டெம்பர் மாதம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழினப்படுகொலை க்கு நீதி வேண்டி அரசியல் ரீதியான போராட்டங்களை சர்வதேச அரங்கில் நிகழ்த்திக் கொண்டிருந்த போது, அதைப்பற்றி ஒரு கட்டுரை கூட தன்னுடைய புரட்சிகர இணைய தளமாம் வினவில் எழுத முடியாத அளவிற்கு, // திரு செல்வா, இந்த மாத பு.ஜ.தலையங்கம் உங்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழினப்படுகொலை க்கு நீதி வேண்டி அரசியல் ரீதியான போராட்டங்களை சர்வதேச அரங்கில் நிகழ்த்திக் கொண்டிருந்தவர்களுக்கும்.படியுங்கள்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.