நீண்ட நாட்களாக மனதில் புரண்டு கொண்டிருந்த ஆவலை கடந்த சனி, ஞாயிறுகளில் தீர்த்துக் கொண்டேன். நண்பர்கள் இருவருடன் கூடங்குளம், இடிந்தகரை சென்றிருந்தேன். கூடங்குளம் பகுதியில் இருக்கிற ஒரு பொறியியல் கல்லூரியில்தான் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் கணிப்பொறியியல் படித்தேன். அதனால் அந்தப் பகுதியின் நிலவமைப்பு எனக்கு ஏற்கனவே அறிமுகமான ஒன்றுதான். மிகவும் வறண்ட பூமி. அரிதாகத் தென்படும் மரங்கள், உரத்து வீசும் காற்று, 150 மீட்டர் உயர வெள்ளைக் கொக்குகளாக நிற்கும் காற்றாலைகள், வெளிநாடுகளில் வேலை பார்க்கும் ஆண்கள் - இவை இந்தப் பகுதியின் பொதுவான அடையாளங்கள். படித்தவர்கள் என்ணிக்கை அதிகமாக இருந்தாலும், மிகவும் பிற்போக்கான பகுதி. சாதி வெறியும், மதவெறியும் ஒப்பீட்டளவில் இங்கு அதிகம்.
நான்கு ஆண்டுகள் அந்தப் பகுதியில் படித்த அனுபவத்திலிருந்து யோசிக்கும்போது, தற்போது நடைபெறும் போராட்டத்தில் சிறுவர் முதல் முதியவர் வரை ஆண், பெண் பேதமின்றி கலந்து கொள்கிறார்கள் என்பது மிகவும் வியப்பான செய்திதான். ஆறுமாதமாக போராட்டம் நடைபெறுகிறது என்றால் வருமானத்திற்கு என்ன செய்வார்கள் என்ற கேள்வி மனதிற்குள் இருந்தது. அங்கு போனபோதுதான் அந்தப் போராட்டத்தின் திட்டமிட்ட செயல்பாடுகள் பெரிய ஆச்சரியமாக விரிந்தது. ஆண்கள் வழக்கம்போல் வேலைக்குச் செல்கிறார்கள். பெண்கள்தான் உண்ணாநிலை இருக்கிறார்கள். கைக்குழந்தைகளை முன்னால் படுக்க வைத்து, கையில் பீடி சுற்றியவாறு காலையிலிருந்து மாலை வரை உண்ணாநிலை மேற்கொள்கிறார்கள். ஆண்களில் பெரும்பாலும் முதியவர்கள்தான் அங்கு இருக்கிறார்கள். முற்றுகைப் போராட்டம், பேரணி போன்ற நாட்களில் மட்டும் - போராட்டக் குழு எடுக்கும் முடிவின்படி - ஆண்கள் வேலைக்குச் செல்லாமல் முற்றுகையில் கலந்து கொள்கிறார்கள்.
அந்த மக்களிடம் சொல்வதற்கு நமக்கு ஒன்றுமில்லை... கற்றுக் கொள்வதற்குத்தான் ஏராளம் இருக்கிறது. மக்களுக்காக உழைப்பது என்பது நமது வாழ்க்கையின் ஒரு பகுதி என்றால், நாம் நிச்சயம் போய் கற்றுக் கொள்ள வேண்டிய இடம் கூடங்குளம்.
காவல் துறை போட்ட வட்டத்திற்குள்ளேயே போராட்டம் நடத்தி பழக்கப்பட்ட நமக்கு, 'மக்களின் அனுமதி இல்லாமல் எஸ்.பி. கூட இடிந்தகரை போராட்ட இடத்திற்குள் நுழைய முடியாது' என்ற உண்மை அதிர வைத்தது.
உளவுத் துறையினர் உள்ளே நுழைந்தால் சிறிது நேரத்தில் சுற்றி வளைத்துப் பிடித்து விடுவார்களாம். பின்பு அவர்கள் கெஞ்சிக் கேட்டு, தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுவார்களாம். போராட்டக்குழு ஆதரவாளர்கள் என்றால், வாஞ்சையுடன் அரவணைத்துக் கொள்கிறார்கள். அவர்களின் மனவுறுதி, போர்க்குணத்திற்கு முன் நாராயணசாமியும், மன்மோகன் சிங்கும் நடுநடுங்கிக் கிடப்பதில் ஆச்சரியமில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றிலும் இருக்கிற கிராமங்களில் உண்மையிலேயே மக்களின் ஆட்சி நடக்கிறது. அந்தப் பகுதி முழுவதும் எளிய, அதே நேரத்தில் போர்க்குணம் மிக்க மக்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
ஈழப் பிரச்சினை, மூவர் உயிர் காப்பு அனைத்திலும் தேர்தல் கட்சித் தலைவர்களின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, தொண்டர்கள் தங்களது உணர்வுகளை அடக்கிக் கொள்வதை சென்னையில் பார்த்திருக்கிறோம். ஆனால், அங்கு நிலைமை அப்படியல்ல.. போராட்டத்திற்கு எதிராக கருணாநிதி பேசியதும், அத்தனை திமுக தொண்டர்களும் தங்களது கரை வேட்டியை எரித்திருக்கிறார்கள். நாங்கள் போயிருந்தபோது திமுக கொடி, அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்தது. இத்தனைக்கும் பெரும்பாலோனோர் காலம்காலமாக திமுக தொண்டர்களாக இருந்தவர்கள்.
மறைந்த சுற்றுச்சூழல் போராளி அசுரன் மூலமாக தோழர் உதயகுமார் அமெரிக்காவில் இருந்தபோதே கீற்று இணையத்தை வாசித்திருக்கிறார். அதை அவர் பகிர்ந்துகொண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது.
மதியம் முழுவதும் இடிந்தகரையில் இருந்துவிட்டு, மாலையில் கூடங்குளம் அணு உலை பக்கமாகச் சென்றோம். தூரத்தில் 40, 50 போலீஸ்.. நமது கையில் காமிரா, வாய்ஸ் ரெக்கார்டர் எல்லாம் இருந்ததால் கொஞ்சம் நடுக்கமாக இருந்தது. பக்கத்தில் போனால் அத்தனை போலிசுக்கும் முன்னால் நாலைந்து போராட்டக்குழுவினர் (பெரும்பாலோனோர்க்கு 50 வயது) கைலி கட்டிக்கொண்டு, கால் மேல் கால் போட்டுக்கொண்டு ரவுசு விட்டுக் கொண்டிருந்தார்கள். போனால் போகிறது என்று போலிசுக்காரங்களை இந்த இடத்திலே விட்டிருக்கிறோம் என்பதுபோல் இருந்தது அவர்களது தோரணை. அசந்துவிட்டோம். கூடங்குளம் அணுமின் நிலைய வாயிலில் இரண்டு செக்போஸ்ட்கள். ஒன்று போலீஸ் செக்போஸ்ட். மற்றொன்று கூடங்குளம் மக்களின் செக்போஸ்ட். மக்களின் செக்போஸ்ட்டைத் தாண்டி, அணுமின் நிலையத்திற்குள் வேலை பார்க்க யாரும் போய்விட முடியாது. முன்பு பத்தாயிரம் வேலை பார்த்த இடத்தில், இப்போது பராமரிப்பு பணிகளுக்காக 90 பேரை மட்டுமே உள்ளே அனுமதிக்கிறார்கள் மக்கள்.
இத்தனை போலிசு இருக்காங்களே பயமில்லையா என்று கேட்டபோது ஒரு பெருசு பதில் சொன்னார்: "இவங்க எத்தனை பேரைச் சுடுவாங்க... அதுவுமில்லாம அணு உலை திறந்தா எப்படியும் கொஞ்சம் கொஞ்சமா சாகப்போகிறோம். அதுக்கு துப்பாக்கி குண்டுலே ஒரே தடவையா நிம்மதியா போயிருலாம்"
வெறும் உயிருக்குப் பயந்து மட்டும் அவர்கள் போராடவில்லை. "யுரேனியத்திலிருந்து மின்சாரம் எடுத்தபின்பு, புளுடோனியம் கிடைக்கும். அதை வச்சி அணு குண்டு தயாரிப்பாங்க.. எங்கோ ஒரு நாட்டுலே அதைப் போடப் போறாங்க.. அங்கேயும் மக்கள்தான் சாகப் போறாங்க.. அதற்கு எங்க ஊரைப் பயன்படுத்துறதை எப்படி அனுமதிக்கிறது?" என்று அவர்கள் கேட்டபோது அவர்களது மனிதநேயம் நெகிழவைத்தது. மாற்று எரிபொருள், மின்பகிர்மானம், பன்னாட்டு நிறுவனங்கள், வல்லரசு நாடுகள், காங்கிரஸ் அரசின் யோக்கியதை, ஈழத் தமிழர்களை காங்கிரஸ் கொன்றது என அவர்கள் அரசியல் அறிவும், தகவல் அறிவும் நிரம்பியவர்களாக இருக்கிறார்கள்.
'எங்க மக்களிடம் பேசுங்கள்' என்று மத்திய அரசின் குழுவையும், மாநில அரசுக் குழுவையும் உதயகுமார் கேட்பதற்கு காரணமில்லாமல் இல்லை. போராடும் மக்களின் பிரதிநிதிகளாகத்தான் உதயகுமார், புஷ்பராயன், மனோ தங்கராஜ் உள்ளிட்டவர்கள் இருக்கிறார்கள். அனைத்து முடிவுகளும் மக்களிடம் கலந்தாலோசித்தே எடுக்கப்படுகிறது. பிரதிநிதிகளை சமாதானப்படுத்தி காரியத்தை சாதித்துவிடலாம் என்று நினைத்தால் அது நடக்காது. அந்த மக்கள் கேட்கும் கேள்விகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் பதில் சொல்லியாக வேண்டும்.
போராட்டத்தின் தளகர்த்தர்களாக பெண்கள் இருக்கிறார்கள். பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை என்றால் அரசு, வன்முறையைக் கட்டவிழ்க்கத் தயங்காது என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள். பெண்கள் சொல்கிறார்கள்.. "ஆம்பளைங்க பின்னாடி இருக்கட்டும்.. அவங்க செத்து, சோத்துக்கு வழியில்லாம நாங்க தவிக்கிறதை விட, நாங்களும், பிள்ளைகளும் குண்டடிபட்டு சாகிறோம்.. அடுத்து அவங்க போராடட்டும்.. கை, கால் ஊனமா பேரப் புள்ளைங்க பிறக்கிறதைப் பார்க்கறதைவிட, மொத்தமாக போராடி சாகலாம்" என்று தீர்க்கமாக சொல்கிறார்கள்.
அந்த எளிய மனிதர்களின் சொல்லாடல்களில் நாராயணசாமி, மன்மோகன் சிங், அப்துல் கலாம், கருணாநிதி, சு.சுவாமி எல்லாம் அடிக்கடி வந்துபோகிறார்கள். அற்பப் புழுக்கள் என்பதைத் தாண்டி அவர்களுக்கு ஒரு மரியாதையும் இல்லை..
போராட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என்று ஆளும் வர்க்கமும், ஆளும் வர்க்கத்தை நக்கிப் பிழைப்பவர்களும் கூறிக்கொண்டிருக்க, உண்மை வேறுவிதமாக அப்பட்டமாக காட்சி அளிக்கிறது. வெளிநாடுகளில் இருந்து பணம் திரட்டும் அளவிற்கு அங்கு செலவு ஏதும் பெரிதாக இல்லை. ஒரு மீனவர் சொன்னார்: "சொன்னா நம்ப மாட்டீங்க... ஒரு நாளைக்கு போராட்டத்திற்கு ஆகுற செலவு என்ன தெரியுமா? 25 லிட்டர் வாட்டர் கேன் 2, 3 தான். நாங்க போராட்டம் நடத்துற சர்ச் எங்க கட்டடம். போட்டிருக்கிற கொட்டகை எங்க கொட்டகை. அதனாலே ஒரு நாளைக்கு 100 ரூபாய் செலவு ஆகிறதே அதிகம்தான். போராட்டக்குழு வெளியூர் போகும்போதுதான் கொஞ்சம் செலவு ஆகும். நாங்க சம்பாதிக்கிறதுலே பத்திலே ஒரு பங்கை போராட்டத்திற்குக் கொடுத்திட்டு வர்றோம். எங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து காசு வருதுன்னு சொல்றவன் தைரியமிருந்தா எங்க மக்கள் முன்னாடி வந்து சொல்லட்டும்"
மீனவ மக்கள் தற்சாற்புடைய மக்கள். யாருடைய கையையும் நம்பி வாழ்கிறவர்கள் அல்ல. அதனால் யாருக்கும் அஞ்சுபவர்கள் அல்ல. அடித்தால், திருப்பி அடிக்கும் குணம் உடையவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்தகரை மீனவர்களுக்கு குடைச்சல் கொடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரை நையப்புடைத்திருக்கிறார்கள். பிறிதொரு முறை போலீஸ் ஒருவரின் துப்பாக்கியைப் பிடுங்கி, அவர் நெஞ்சிலேயே வைத்து, 'ரொம்ப வாலாட்டுனே.. ஊரைத் தாண்டிப் போயிற முடியாது' என்று மிரட்டியிருக்கிறார்கள். அப்படி இருந்த மக்கள்தான் இன்று உதயகுமாரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, அமைதி வழியில் போராடி வருகிறார்கள். ஈ, காக்கை கூட அவர்களின் அனுமதியில்லாமல், போராட்ட இடத்திற்குள் நுழைந்துவிட முடியாது. அந்த மக்களை மீறி உதயகுமாரை யாரும் நெருங்கிவிட முடியாது.
எலியும் பூனையுமாக பகையுடன் இருந்த ஊர்கள்தான் இடிந்தகரையும், கூடங்குளமும். சாதியால் பிளந்திருந்த மக்களின் மனதை உதயகுமார் தனது தன்னலமற்ற தொண்டால் இணைத்திருக்கிறார். எங்க ஊர் காமராசர் என்கிறார்கள் மக்கள்.
இங்கே சிலர் கீறல் விழுந்த ரெக்கார்ட்டைப் போல திரும்பத் திரும்ப ஒன்றை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், 'மக்களின் அச்சத்தைப் போக்கிவிட்டு, அணு உலையைத் திறக்க வேண்டும்' என்று. ஏதோ அந்த மக்களிடம் குழப்பமும், தேவையில்லாத பயமும் இருப்பதாகக் கருதிக் கொண்டு சொல்கிறார்கள். அவர்கள் அத்தனை விபரங்களையும் முழுக்க அறிந்திருக்கிறார்கள். அவர்களிடம் அச்சமில்லை. மிகவும் தீர்க்கமாகக் கூறுகிறார்கள் 'அணு உலையை மூட வேண்டும்'. அவர்களிடம் பிரசங்கம் நடத்தி ஏமாற்றி விடலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை. 'அணு உலையை எடுத்திட்டு, அதே கட்டடத்தில் மாற்று வழியில் மின்சாரம் தயாரிக்கட்டும். நாங்களே அவர்களுக்கு முழு உதவியையும் செய்கிறோம்' என்கிறார் கூடங்குளப் பெரியவர் ஒருவர்.
காவல் துறை சொல்கிற இடத்தில், சொல்கிற நேரத்திற்குள்ளாக ஆர்ப்பாட்டம் செய்து, எந்தத் தீர்வையும் எட்டாமலேயே போராட்டங்கள் முடிந்து விடுவதைப் பார்த்துப் பார்த்து வெறுத்துப் போயிருக்கும் நமக்கு கூடங்குளம் போராட்டம் மிகப் பெரிய மலையாக உயர்ந்து நிற்கிறது. மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைத்துக் கட்சியினரும், இயக்கத்தவர்களும் கூடங்குளம் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. வெறுமனே அங்கு போய் ஆதரவு கொடுப்பது என்பதோடு மட்டுமல்லாமல், எப்படி மக்களைத் திரட்டுவது, எப்படி மக்களுக்குக் கற்பிப்பது, எப்படி போராடுவது என்பதையெல்லாம் கற்றுக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும். நம் சமகாலத்தில் தமிழகத்தில் இப்படி ஒரு போராட்டத்தை யாரும் பார்த்ததில்லை என்பதுபோல் கூடங்குளம் போராட்டம் உள்ளது. இந்தப் போராட்டத்தின் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் ஆவணமாக்க வேண்டிய அவசியம் நம் எல்லோருக்கும் உள்ளது. அது, அடுத்து போராட வரும் தலைமுறையினருக்கான வேதநூலாக இருக்கும்.
- கீற்று நந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
மனிதர்களின் கண்டுபிடிப்புகள ் மகத்தானவை. அவற்றால் பாதிப்புகளும் கூட ஏற்படும்.. ஏன்? ஒரு உயிர் வாழ்வதே சூழலில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், உயிர்ச்சூழல் உயிர் வாழும் சூழலாகவே நீடிப்பது மனிதனுக்கும் அவசியம்.
மனிதனின் செயல்பாட்டால் உயிர்ச்சூழலுக்க ுப் பாதிப்பு வரும் என்றால், அதனைச் சரிசெய்துகொள்ள வேண்டும். மனித இனம் தொடர அது அவசியம்.
சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாமல் மின்சாரம் உற்பத்தி செய்ய எண்ணற்ற வழிகள் இருக்கின்றன. சில கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். ஏன் ஒரு இடத்தில் மின்சாரம் உற்பத்தி செய்து அதனை நாடு முழுவதும் அனுப்ப வேண்டும்? காற்று, சூரிய சக்தி, இயற்கை கரிமப்பொருட்கள் (மரம்), நீர் போன்றவற்றைப் பயப்டுத்தி ஏன் தாலுகா அளவில் மின்னுற்பத்தி செய்துகொள்ள முடியாது? அது இயற்கையின் மீது அணு போல, நிலக்கரி போல கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாதே? ஏன் அவ்வாறு யோசிக்க மறுக்கிறார்கள்?
அணு மின் சக்தியின் விலை என்னவென்பதை,மூல தனம், இயக்கச் செலவுகள், கழிவுகளை (சில பத்தாயிரம் ஆண்டுகளுக்கு) பராமரிக்கும் செலவு என்பதையெல்லாம் கூட்டி கணக்குப் பார்க்க வேண்டும். அப்போது 1 யூனிட் மின்சாரத்தின் விலை குறைந்தது சில 100 நூறு ரூபாய்களை விட அதிகமாக இருக்கும்.
அப்புறம் எப்படி அணு மின்சாரம் மலிவு என்று சொல்கிறார்கள்?
அணு மின் உலை தொழிலில் உள்ள உலக முதலாளிகளின் எச்சில் காசுக்கு அலைகிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள். அவ்வளவுதான். இந்த உண்மை உங்களுக்குக் கசக்கலாம். கலாம் போன்றவர்களுக்கு க் கசக்கத்தான் செய்யும்.
ஆனால், உயிர்களை நேசிப்பவர்கள், வாழ்க்கையை நேசிப்பவர்கள், நாளை வரும் சந்ததியருக்கு இந்த உலகத்தை விட்டுவைத்துச் செல்ல வேண்டும் என்று யோசிப்பவர்கள் சற்று கூட தயக்கமின்றி மன்மோகன் தேசத் துரோகி என்று சொல்வார்கள்.
கூடங்குளம் மக்கள் படிப்பறிவற்றவர் கள். ஆனால், இயற்கையைப் பற்றி அவர்கள் அறிவார்கள். வாழ்க்கையை அறிவார்கள். திருடர்களையும் அவர்கள் அறிவார்கள்.
அணு உலையை ஆதரிக்கும் அறிவாளிகளுக்கு இரண்டு பிரச்சனை. 1. அறிவில்லை. 2. அறிவில்லை என்ற விவரமும் தெரியாது.
இவர்களைத்தான் தந்தை பெரியார் படித்த முட்டாள்கள் என்று விவரித்தார்.
இராம், யோசித்துப் பாருங்களேன், மனித இனமாக… அதன் எதிர்காலம் குறித்த கவலையோடு..
அன்புடன்,
சி.மதிவாணன்
கடைசியாக ஒரு முக்கிய வேண்டுகோள். அணுமின்சாரம் தொடர்பான இந்த விவாதத்தில் பெரியாரை சாட்சிக்கு அழைக்காதீர்கள். உங்களின் சிகப்புச்சட்டைக ்கும் அவருடைய கருப்புச்சட்டைக ்கும் ரொம்ப தூரம். அவரை விட்டுவிடுங்கள் .
இப்படிக்கு
மனிதனாக மனித இனமாக வாழ முயற்சி செய்யும் ஒரு அறிவிலி
issue,i wish the same to be united in all the issues apart from caste community & partys .
மதிவாணன் அவர்களுக்கு,
தாலுகா அளவில் ஏன் மின்னுற்பத்தி செய்து கொள்ள வேண்டும்? உங்கள் வீட்டு மொட்டை மாடியிலேயே சோலார், காற்றாலை ரெண்டையும் வச்சுடுங்களேன்? ரெண்டு மாடு வளர்த்து கோபர்காஸ் அடுப்பு வெச்சுடுங்களேன் ? குண்டு பல்ப், சிறு குழல் விளக்குகளுக்கு பதில் காடா விளக்கு, அரிக்கன் விளக்கு வெச்சுக்கலாமே? மின்விசிறிக்கு பதில் பங்கா கட்டிக்கலாமே?
இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை விரும்புபவர்கள் , அறிவியல் முன்னேற்றங்களான மின்சாரம், கணினி ஆகியவற்றை வேண்டாமென தவிக்கலாமே? எனவே நன்பர் துரை இளமுருகு கேட்பது போல் இயற்கையை பாதிக்காத மின்சாரம் கிடைக்கும்வரை எங்களுக்கு மின்சாரமே வேண்டாம் என்று சொல்ல தயாரா?
2005 ஆண்டு EPW பத்திரிகையில் வெளியான அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருக்கும் எம்.வி. ரமணா என்ற அணு விஞ்ஞானி அவர்களின் கணக்குப்படி , கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள கைகா அணுமின் நிலையத்தில் இருந்து பெறப்படும் மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 2.10 ஆகும் என்று தெரிவித்துள்ளார ். 2012 ல் விலைவாசி ஏற்றத்தையெல்லாம ் கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட கூடங்குளம் அணு மின் திட்டத்திலிருந் து பெறப்படும் மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு ரூ. 4 ஆகலாம். யூனிட் ஒன்றுக்கு ரூ. 100 எப்படி என்று அணு விஞ்ஞானிகளுக்கு ம் பொறியாளர்களுக்க ும் தெரியாத கணக்கை தெரிந்து வைத்திருக்கும் மதிவாணன் அவர்களே, அந்த கணக்கை கொஞ்சம் விளக்கமாக தரமுடியுமா?
princeton.academia.edu/.../...
நீங்கள் குறிப்பிட்ட எம் வி இரமனாவின் கட்டுரையைப் படித்த பின்புதான் அணு மின்சாரத்தின் விலை பற்றி எழுதினேன். ரமணா அணுக் கழிவுகள் பராமரிப்பு செலவையும் தனது கணக்குச் சூத்திரத்தில் எடுத்துக்கொண்டத ாகக் கட்டுரை சொல்கிறது.
ஆனால், உண்மையை ஓரளவுக்குச் சொல்வது, உண்மையை விரும்பியபடி தொணிக்கும் வகையில் சொல்வதென்று பலவிதமான முறையில் உண்மையைச் சொல்லலாம். அஸ்வத்தாமன் (உரக்க) என்ற யானையை (மெல்லிய குரலில்) கொன்றுவிட்டோம் (மறுபடியும் உரக்க) என்று கூட தர்மமாக நடந்துகொள்வது பற்றி மகாபாரதம் பேசுகிறது.
சரி இரமணா என்ன சொல்கிறார்?
The other component in the case of nuclear power is that of decommissioning the reactor. Though this is an expensive process, because it is done only in many years in the future, its discounted cost will be small…
இது கட்டுரையின் முன் பாதியில் ரமணா சொல்வது. இதிலேயே ஒரு கேள்வி எழுகிறது. செலவு பிடிப்பதாக இருந்தாலும், எதிர்காலத்திய பல வருடங்களில் நிகழ்வதால் செலவு குறைவானதாக (DISCOUNTED என்றாலும்) எப்படியிருக்கும ்? ஒவ்வொரு ஆண்டும் குறைவானதாக ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் என்பதைல் கூட்டுத் தொகை பெரியதாக இருக்கும் என்று எடுத்துக்கொள்வதா?
அல்லது பெரிய தொகையாக, ஆனால் பல பத்தாயிரம் ஆண்டுகளால் வகுக்கப்படும்போ து ஆண்டுச் செலவு குறைவானதாக இருக்கும் என்று எடுத்துக்கொள்வதா?
உருவாக்குதல் இயக்குதல், பராமரித்தல், கழிவு நிர்வாகம் என்பது எத்தனை ஆண்டுகள் நடந்தாலும் அதற்கு என்ன செலவாகுமோ அதனை வைத்துத்தானே கணக்குப் போட வேண்டும். எத்தனை ஆண்டுகளுக்கு (பல்லாயிரம் ஆண்டுகளுக்கு) செலவானாலும் அதனை உற்பத்தியான மின் யூனிட்டுகளின் மதிப்பில்தானே ஏற்ற வேண்டும்?
அப்புறம் கட்டுரையின் கடைசியில் ரமணா மற்றொன்று சொல்கிறார்.
The problem of dealing with radioactive nuclear wastes has been one of the contentious aspects of nuclear power programmes around the world.(NEA 1996 and Berkhout 1991). Since some of the these wastes are extremely long lived, the generations who do not utilize electricity produced in these nuclear reactors but may have to undertake measures to ensure that these radioactive materials do not enter their food chain, water resources and so on. Any attempt at quantifying these costs involved is bound to have ENORMOUS UNCERTAINTIES.
(அடிக்கோடும் பெரிய எழுத்தும் என் கைங்கரியம்) இவ்வளவு உண்மைகளையும் சொல்லிவிட்டு கழிவுகளை ஒரு டப்பாவுக்குள் போட்டு மூடிவைத்துவிடுவ து என்ற முறை பல விவாதங்களுக்கு உட்பட்டது என்றாலும், டப்பாவில் போட்டு மூடிவைக்கும் செலவை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டத ாக ரமணா சொல்கிறார்.
எங்களைப் போன்றவர்கள் எதிர்கால சந்ததியினர் தாங்கள் பயன்படுத்தாத மின்சாரத்திற்கு ச் செய்யப் போகும் செலவையும் கணக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறோம்.
எப்படியானாலும், தான் சொல்லும் கணக்கில்தான் மின்சாரத்தின் விலை அடங்கும் என்ற ரமணாவே சொல்லத் துணியாது, எதிர்கால சந்ததியினர் செய்யப்போகும் செலவு பற்றிய கவலையுடன் பேசும்போது, அணு தொழில்காரர்கள் சொல்லும் விவகாரங்கள் விவாதத்துக்குரி யவை என்று ஒப்புக்கொள்ளும் போது உங்களைப் போன்றவர்கள் எந்த துணிச்சலில் அணு மின்சாரத்தை ஆதரித்துபேச முடிகிறது?
போராடுபவர்கள் சுற்றும் பீடிகளால் மக்களின் ஆரோக்கியம் மேம்படும் என்று நம்பலாம். அவர்களின் கணவன்மார்கள்பயன ்படுத்தும் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி போன்ற வலைகளால் கடல் மடியிலிருக்கும் ஆழ்கடல் வளங்கள் மேம்பட்டதன் விளைவு தமிழ்நாட்டு மீனவர்கள் இந்திய எல்லை தாண்டி இலங்கைக்கு சென்று மீன்பீடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிற து. இப்படியே உசுப்பேத்திக்கொ ண்டே இருங்தமிழ்நாட்ட ு உருப்பட்டுவிடும ்.
சிவில் சமூகம் , பின் நவீனத்துவம் , மார்க்சியத்தை செழுமைபடுத்துவத ு(!?) , கட்டுடைத்தல், மீள் ஆய்வு , பெருங்கதையாடல் , விளிம்பு நிலை மக்கள் என்று தத்துவ ரீதியாக லட்சக்கணக்கான இளைஞர்களை காயடித்ததும் இவர்கள் தான் . மனித உரிமைகள், சுற்று சூழல் , ஊழல் , சாதி பிரச்சினை , எய்ட்ஸ் , பெண் விடுதலை , ஆணுறை , குழந்தை தொழிலாளர் என என்.ஜி.ஓ க்கள் இல்லாத விடயம் எதுவுமில்லை.இப் போது மீண்டும் ஒரு முறை ஜான் பெர்கின்ஸின் " ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் " படித்து பாருங்கள்...ஜான ் பெர்கின்ஸ் குறிப்பிடும் குள்ள நரிகள் யாரெனப் புரியும் ...
மேலும், திட்டம் துவங்கப்பட்ட நாள் முதல் அது அந்தப் பகுதி மக்களாலும் சிபிஐ எமெல் உள்ளிட்ட கட்சிகளாலும் எதிர்ப்புக்கு ஆளாகிவந்துள்ளது . அந்த எதிர்ப்பினை அரசு கண்டுகொள்ளாத சூழலில் ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை வெடிப்புப் பின்னணியில் கூடங்குளம் உலை இயங்கும் என்ற உடனடி அபாயத்தின் காரணமாக இப்போது இறுதிக்கட்ட போராட்டம் நடந்துவருகிறது.
கவனியுங்கள், உதயகுமார் போன்றவர்கள் மக்களைப் போரடத் தூண்டி போராட்டம் நடக்கவில்லை. மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற அங்கே வேறு அரசியல் கட்சிகள்/ அமைப்புகள் இல்லை என்பதால் இதுபோன்ற நிலையைக் காண்கிறீர்கள். போராட்ட குழுவை கொச்சைப்படுத்து ம் முயற்சிகளால், போராடும் மக்கள் பின்வாங்கிவிடப் போவதில்லை. போராட்டம் சிலரின் தூண்டுதல் இதுநாள் வரை எதிர்ப்புப் போராட்டமேயில்லை என்று நினைத்துக்கொண்ட ிருப்பவர்கள் வலைமனையில் தேடுங்கள். போராட்டங்கள் பற்றிய நிறைய தகவல்கள் கிடைக்கும்.
www.keetru.com/.../
RSS feed for comments to this post