நாற்பது ஆண்டுகளுக்கு முன் வேலூரில் உள்ள கிறித்தவ ஆற்றுப்படுத்தல் மையத்தில் (Christian Counselling Centre) சமூக வளர்ச்சியில் மனித வளர்ச்சியில் (Human Development in Community Development) என்ற ஒரு மாதப் பயிற்சி வகுப்பில் பங்குபெறும் வாய்ப்புக் கிடைத்தது. அப்பொழுது மார்க்சியம், பெரியாரியம் பற்றிய முறையான அறி முகமே எனக்கு இல்லாமலிருந்தது. முழுக்க முழுக்கக் காவியாக இல்லாவிட்டாலும் அக்கருத்தியலின் செல் வாக்கில்தான் இருந்தேன்.

அப் பயிற்சிவகுப்பில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மராட்டிய மாநிலங்களில் இருந்து சுமார் 40 பேர் பயிற்சிபெற வந்திருந்தார்கள். வகுப்பறையில் பாடத்தைப்பற்றி மட்டுமே பேச முடியும். ஆனால், உணவுக் கூடத்தில் பொதுச் செய்திகளைப்பற்றிப் பேசு வோம். மொழியாக ஆங்கிலம் பயன்பட்டுக் கொண் டிருந்தது.

அப்படிப் பேசும்பொழுது ‘கருவுற்ற பெண்’ என்பதற்கு மலையாளத்தில் ‘கர்ப்பஸ்திரீ’ என்று சொல்வார்கள் என்று கேரளாவிலிருந்து வந்திருந்த பாதிரியார் ஒருவர் கூறினார். உடனே கருநாடகாவில் இருந்து வந்திருந்த பார்ப்பனத்தி ஒருவர் அது மலையாளச் சொல் அல்ல என்றும், சமற்கிருதச் சொல் என்றும் கூறினார். அதற்கு விடையளித்த அந்தப் பாதிரியார் மலையாளத்தில் சமற்கிருதச் சொற்கள் மிகுதியாகக் கலந்துள்ளன என்றும், ஆகவே அம்மையார் சொல்வது சரியாக இருக்கலாம் என்றும் கூறினார்.

ஆனால், அந்த அம்மையார் விடுவதாக இல்லை. தனக்குச் சமற்கிருதம் தெரியுமென்றும், மலையாளம் பேசுவதையும் கேட்டிருப்பதாகவும், ஆனால் அதில் சமற்கிருதம் மிகுதியாக இல்லை என்றும் கூறினார்.

அந்தப் பாதிரியார், தான் சமற்கிருதம் படிக்கவில்லை என்றும், ஆகவே அந்த அம்மையாருக்கு விடையளிக்க முடியவில்லை என்றும் கூறி விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப் பார்த்தார். ஆனால், அந்தப் பார்ப்பனத்தி விடாமல், தனக்குச் சமற்கிருதம் தெரியுமென்று அந்த இரவு உணவுநேர வேளையில் சுமார் பத்துப் பதி னைந்து முறை கூறிவிட்டார்.

அடுத்த நாள் காலையில் நான் அந்தப் பார்ப்பனத்தி யிடம் அவர் சமற்கிருதத்தை எதுவரையில் படித்திருக் கிறார் எனக் கேட்டேன். அவர், தான் சமற்கிருதம் படித்திருப்பதாகக் கூறினார். நான் மீண்டும் அதே கேள்வியைச் கேட்க மீண்டும் மீண்டும் அதே விடையையே அவர் அளித்தார். அதற்கு நான், “நான் சமற்கிருதத்தை ‘விசட்சண’ வரை படித்திருக்கிறேன்.நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். உடனே அவர் அதிர்ச்சி அடைந்துவிட்டார். முகமெல்லாம் மாறிவிட்டது.

சிறிதுநேரம் கழித்து, சுதாரித்துக் கொண்டு, “நீங்கள் பார்ப்பனர் இல்லையா?” என்று கேட்டார். நான் “இல்லை” என்று கூறியவுடன் அவர் முகம் மேலும் சுருங்கிவிட்டது. (பார்ப்பனர்கள் மட்டுமே சமற்கிருதம் படிக்கமுடியும் என்பதும், அப்படிப் படித் தவர்களும், சமற்கிரும் படிக்காதவர்கள்; படித்திருப்ப தாகப் பொய் செல்லுவதைக் கண்டுகொள்ளக்கூடாது என்பதும் அவாளிடைய உள்ள ஒப்பந்தம் போல் இருக்கிறது.)

என் வினாவிற்கு விடையளிக்கும் விதமாக, வீட்டில் சுலோகம் சொல்லி வணங்குவதாகவும், அந்த வகையில் தனக்குச் சமற்கிருதம் தெரியும் என்றும் கூறினார்.

நான் விடாமல் “அப்படி என்றால் சுலோகங்களின் பொருள் புரிந்து சொல்வீர்களா?” என்று கேட்டதை இடைமறித்து, “சுலோகங்களின் பொருளைப் புரிந்து கொள்ள முயலக்கூடாது” என்று கூறிவிட்டார். அதன் பின் தனக்குச் சமற்கிருதம் தெரியும் என்பதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

மார்க்சு, பெரியார், அம்பேத்கரின் தத்துவங்களைப் புரிந்துகொண்ட நிலையில் இன்று அந் நிகழ்வை நினைத்துப் பார்க்கிறேன். 1920ஆம் ஆண்டுக்கு முன்னாள் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்குச் சமற்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற விதியின் பொருள் உண்மையில் சமற்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக அல்ல; மருத்தும் படிக்கப் பார்ப்பனராக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான். பார்ப்பனராக இருந்தால் சமற்கிருதம் தெரியும் என்று அவாள் சான்று அளித்துவிடுவார்கள். வேறு யாரும் அதைச் சரிபார்க்க முடியாதல்லவ்h?

பிறகு, பனகல் அரசரின் ஆட்சியில் இவ் விதி நீக்கப்பட்ட பின்னர், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களும் மருத்துவக் கல்வியைப் பெறமுடிந்தது. இந்தியர்களில் - இந்துக்களில் பார்ப்பனர்கள் மட்டுமே மருத்துவக் கல்வி பெற்ற காலத்தில் தலைசிறந்த மருத்துவர்கள் யாரும் தோன்றாமல் போனதும், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களும் மருத்துவக்கல்வி பெற்ற காலத்தில் பூ. பழனி யப்பன், வடமலையான், ஏ.ஏ. ஆசீர்வாதம், கே.என். வாசுதேவன் போன்ற மருத்துவ மேதைகள் நமக்குக் கிடைத்ததும் ஏதோ தற்செயலானது அல்ல.

அனைத்து நிலை அறிவும் திறனும் கொண்ட மக்கள், அனைத்து வகுப்பு மக்களிலும் உள்ளனர். பார்ப்பனர்கள் / உயர்சாதிக் கும்பலினரை மட்டுமே தேர்ந்தெடுத்த நிலையில், அறிவும் திறனும் குறைந் தவர்களையும் தேர்ந்தெடுப்பது தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது. அனைத்து வகுப்பு மக்களையும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கும்போது அந்தந்த வகுப்பில் உள்ள அறிவும் திறனும் மிகுந்தவர்களைத் தேர்ந்தெடுக்க முடிகிறது. ஆகவே, அதிக எண்ணிக்கை யில் திறமைசாலிகள் கிடைக்கின்றனர். இதுவே கல்வி யிலும், தொழில்நுட்பத்திலும் மேதைகள் உருவா வதற்கு வழிவகுக்கிறது.

இதே காரணத்தினால்தான், அதாவது இடஒதுக்கீடு செயல்பட்டு, அனைத்து வகுப்பு மக்களிலும் உள்ள திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்ததனால்தான் இன்று வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநில மாகத் தமிழ்நாடு திகழ்கிறது. இப்படி இடஒதுக்கிடு செயல்படுத்தப்படாமல் பார்ப்பனர்களும், உயர்சாதிக் கும்பலினரும் மட்டுமே உயர்நிலைகளில் இருக்கும், குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற வடஇந்திய மாநிலங்கள் வளர்ச்சியில் இன்றைக்கும் மிகவும் பின்தங்கியே உள்னன.

இதை மாற்றி இந்திய ஒன்றியம் முழுமையிலும் வளர்ச்சி சீராகவும், வேகமாகவும் இருக்கவேண்டும் என்று விரும்பினால் அனைத்து வகுப்பு மக்களும், அவரவர் திறமைக்கு ஏற்பத் தங்கள் பங்கைப் பெறும் விதமாக விகிதாசச்hரப் பங்கீடு முறையைச் செயல் படுத்த வேண்டும்.

பார்ப்பனர்கள் இதற்கு எதிராக எவ்விதச் சூழ்ச்சிகளைச் செய்தாலும் அதை முறியடிக்க வேண்டும்.

- இராமியா

Pin It