எரிக் ஹாப்ஸ்பாமின் Primitive Rebels எனும் நூல் தமிழில் ரகு அந்தோணி மொழிபெயர்ப்பில் கலகக்காரர்கள்எனும் தலைப்பில் என்.சி.பி.எச் வெளியீடாக விரைவில் வெளிவரவுள்ளது.

வரலாற்றில் கொள்ளையர் உருவாகும் சமூகச்சூழல்

robin hoods 450அரசு கட்டமைப்பு இல்லாத சமூகங்களில் சமூகச்சட்டங்கள் இரத்தப் போட்டியை உருவாக்குகிறது. அங்குக் கொல்லப்படுபவர் சமூகச் சட்டத்தினை உடைப்பவர். அவர்கள் மக்களின் சட்டப்படி (public law)) தண்டிக்கப்படுவர். நாட்டுப் புறங்களில்  விவசாயமும், வேளாண்தொழிலும், உலோகத்தொழிலும் நுட்பத்துடன் வளரும்போதும்  நகரங்களில் ஆவணப்படுத்துதலின் அடிப்படையில் அலுவலகங்கள் வளரும்போதும் கொள்ளையர்கள் தம்மை தனிக்கூட்டமாகக் கருதுகின்றனர். செல்வந்தர் களிடமிருந்தும், அதிகாரமிக்கவர்களிடமிருந்தும் தம்மைப் பிரித்துப் பார்க்கின்றனர். காரணம், சமூகத்தின்மீதான ஒருவித வெறுப்பு.  சமூகவியல் ரீதியாக கொள்ளையர் வரலாறு மூன்று கட்டங்களாக அமைந்துள்ளது. அவர்களின் தோற்றம்; அதற்கு முன்பு உருவான அமைப்பு; வர்க்க சமூகத்திலும், அரச கட்டமைப்பு சமூகத்திலும் உருவானபோது. இதன் உருமாற்றம் தோன்றிய காலத்திலும், வட்டார, உலக அளவிலான மாற்றத்தில் இருந்தும் எழுந்தது. இது அரச கட்டமைப்பிற்கும், சமூகக் கூட்டங்களுக்கும்  இடையில் உருவான முரண்.  அதாவது, நிலைத்த  வேளாண்குடிகளுக்கும், அலைகுடிகளான ஆயர் குடிகளுக்கும் இடையிலான முரண். நகர்ப்புறம், ஊர்ப்புறம் இரண்டிற்குமான சமூக வெடிப்பு.

Balkan, Anatolia பகுதிகளில் சமூகக் கொள்ளையருக்கு அலைகுடிகளின் இன உறவுக் கூட்டங்களே ஆதரவாக இருந்தன. 19 ஆம் நூற்றாண்டில்  Argentina வில் கால்நடை வளர்க்கும் சமூகம், சமூகக்கொள்ளையர்களுடன் ஊரகத் தலைவர்கள்  (Rural Chieftains) துணை நின்று நகரம் சார்ந்த பூர்சுவா சட்டங்களை எதிர்த்தனர். இருபதாம் நூற்றாண்டில் Colombia வில் காப்பித்தோட்டக்காரர்கள் கொள்ளையருக்குப் பாதுகாப்பளித்தனர்.

சமூகக்கொள்ளையர் இயக்கத்தின் இரண்டாம் கட்ட வர்க்கம், சொத்து, அதிகாரம் என்ற பின்னணியில் வேளாண்சமூகத்தில் முகிழ்த்த ஒன்று.  கிராம்ஷியின் கூற்றுப்படி அவர் வசித்த தீவில் 20ஆம் நூற்றாண்டில் வர்க்கப்போராட்டம் புதுமாதிரியான போராட்டங்களைக் கொண்டிருந்தது.   ஆள்கடத்தல், நாடுகளுக்கு தீவைத்தல், பெண்களைக் கடத்தல், குழந்தைகளைக் கடத்தல், நகராட்சி அலுவல கங்களைத் தாக்குதல், வழி பறிக்கொள்ளை போன்ற கூறுகளைக் கொண்டிருந்தது. 

மூன்றாம்கட்ட சமூகக்கொள்ளை, பசியால் எழுந்த ஒன்று.  19-20 ஆம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவ வேளாண்பொருளியலில் உருவானதே சமூகக் கொள்ளையர் கூட்டம்.   இது USA, Australia,USA, Australia,Argentina  போன்ற நாடுகளில் எழுந்தது. சமூகக் கொள்ளைத் தளங்களாக விளங்கிய மத்தியதரைக்கடல் வட்டாரங்கள் இடைக்காலத்திலும் நவீன காலத்திலும் தொடர்ந்து பஞ்சத்தில் உழன்றன. வயிற்றுப்பசியின் உறுமல்களே, வழி பறிக் கொள்ளையின் உறுமலாயின. 1877-78களில் பிரேசிலில் வறட்சியின் காரணத்தால் கொள்ளையர் கூட்டம் உருவாயினர்.  இவர்கள் 1919 வரை இயங்கினர். இவர்களின் செயலுக்கு ஒரு சீனப்பழமொழி பொருந்தும் : பசியால் சாவதைவிட சட்டத்தினை மீறுவது மேல்.

கொள்ளையரின் இயல்பு

மலைப்பகுதிகளில் உள்ள கொள்ளையர்: 1860 களில் இத்தாலியின் தென்பகுதியில் உள்ள கொள்ளைக் கூட்டத்தலைவரில் பலர் கால்நடைகள் மேய்ப்பவர், ஆடு மேய்ப்பவர், பசு மேய்ப்பவர், நிலமற்ற கூலிகள், முன்னாள் ராணுவத்தினர் என்று பலரும் இருந்தனர்.

நிலச்சுவான்தார்களும் அவர்களின் அடியாட்களும் தாம் விரும்பியபடி வேளாண்குடி பெண்களிடம் நடந்து கொண்டனர்.  இச்சூழலில் பழிவாங்கும் கொள்ளையர் உருவாயினர். இப்பழிவாங்கும் கொள்ளையர் சமூகக்கொள்ளையராக மாறமாட்டார். அவர்கள் கிராமத்தின் காவலர்களாக இயங்குவர்.  நிலப்பிரபுவிற்கு சிப்பாயாக மாறுவர். ஆனால், இவர்களே பிறகு ஆயுதமேந்திய பூர்சுவாவாக மாறுவர். அதாவது, சிசிலியில் உள்ள மாபியா போன்று.  சட்டத்தினை மீறும் இவரைப்போன்றவர்கள் பற்றி கதாநாயகர்கள் என்றும், சாதனையாளர்கள் என்றும், பழிதீர்ப்பவர்கள் என்றும் கதைப்பாடல்கள் உண்டு.  இவ்வகையில் தனித்த கலகக் காரர்களும் உண்டு. அவர்களை அரசியல்ரீதியாக பொருளியல்ரீதியாக கணிக்க இயலாது.  இவை யெல்லாம் ஏழ்மையின் வெளிப்பாடு.

கொள்ளையர் பற்றி வேறுவேறு விளக்கங்களும் உண்டு: கொள்ளையர் என்போர் பணிய மறுப்போர்.  அதிகாரத்திற்கு அப்பாற்பட்டோர், தீரத்துடன் செயல்படுவோர். ‘Bandito’ என்ற இத்தாலியச் சொல்லிற்கு சட்டத்திற்கு புறம்பாக இயங்குபவர் என்று பொருள் (Man placed outside the law). அதாவது சட்டத்திற்கு கட்டுப்படாதவர் என்று பொருள்.   எனவே, எளிதில் கொள்ளையராவது ஆச்சரியமன்று.    15 ஆம் நூற்றாண்டிலிருந்தே கொள்ளையர் பற்றிய கணிப்பு இருந்து வந்தது. Bandalora என்ற கொள்ளையரைக் குறிக்கும்சொல் Cataloria என்ற வட்டாரத்தில் உள்ள ஆயுதம் தாங்கிய பிரிவினை வாதிகளைக் குறிக்கும். இந்தப் பண்டலோராக்கள்

15-17 ஆம் நூற்றாண்டுகளில் இயங்கினர்.  இவர்கள் இயல்பாகவே கொள்ளையராக மாறிக்கொண்டனர்.    Ottoman பேரரசில் Celalis என்ற பெயரில் அறியப்பட்ட கொள்ளையர்கள் 16-17 ஆம் நூற்றாண்டுகளில் இயங்கினர்.  இப்பெயரினை அவைதீக இஸ்லாமிய கலகக்காரரைக் குறிக்கும் Seyh-celel என்ற சொல்லில் இருந்து பெற்றனர்.

இனக்குழு வெடிப்பினால் உருவான கொள்ளையர் கூட்டம்

ஒரு பழங்குடிச்சமூகம் இரத்த உறவினை அடிப்படையாகக் கொண்டு பரிணாம வளர்ச்சி யுறும்போது இதுபோன்று வரலாற்றுப்போக்கு நிகழும்.  நவீன முதலாளியம் தொழிற்சாலை சமூகமாக மாறும்போதும் நிகழும்.  இரத்த உறவுச்சமூகம் (kinshipkin ship society) உடைபட்டு வேளாண்சமூகம் முதலாளிய சமூகமாக மாறும்போதும் நிகழும்.  இவ்வகைச் சமூகத்தின் உள்கட்டமைப்பு கலகலத்து அமையும் போது கலகக்காரர்கள் கொள்ளையராக மாறுவர்.

கொள்ளையரும் வர்க்கமும்

வேளாண்குழுக்களில் இருந்து உடைந்து வந்த கொள்ளையர் குழுக்கள் வேட்டைச்சமூகத்தையும், மேய்ச்சல் சமூகத்தையும் திடீர் திடீர் என்று தாக்கினர்.  இதனால் இவர்களுக்குள் வர்க்கமுறை உருவானது.  பொருள் குவியக் குவிய கொள்ளையர் கூட்டங்கள் பல்கிப்பெருகின. இதுபோன்ற கொள்ளையர் கூட்டங்கள் 15-18 ஆம் நூற்றாண்டுகளில் Ottoman பேரரசில் உருவாயின.  19ஆம் நூற்றாண்டில் Sardania,Sardania,Hungary போன்ற வட்டாரங்களில் இது போன்ற கொள்ளையர் கூட்டங்கள் உருவாயின. வரலாற்றின் மறுமுனையில் முதலாளிய மயமான வேளாண் சமூகத்தில், குறிப்பாக மரபுரீதியான வேளாண் சமூகத்தில் சமூகக்கொள்ளையர்கள் உருவாவது முடிவிற்கு வந்தது. ஆனால், நிலையான முதலாளிய மயமான நாடுகளான USA, Australia, Argentina போன்ற நாடுகளில் இம்மாற்றம் நிகழவில்லை.

அரசும் கொள்ளையரும்

17 ஆம் நூற்றாண்டில் கொள்ளையர் பற்றிய ஒரு கருத்தாக்கம் உருவானது.  அவர்கள், நெடுஞ்சாலைத் திருடர், நெடுஞ்சாலைக்குற்றவாளி என்று அறியப் பட்டனர். 18 ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவில்  நாடுமுழுக்க கொள்ளைகள் நடந்தன. 1861 இல் பண்ணையடிமைகள் ஒழிக்கப்பட்டவுடன் அரசு தொடர்ந்து பல ஆணைகளை கொள்ளையருக்கு எதிராக வெளியிட்டது. இறுதியாக 1864இல் ஓர் ஆணை வெளியிட்டது. சீனாவின் மேற்கில் ஹெனென் மலைப்பகுதியில் கொள்ளையர் கிராமங்கள் இருந்தன.  சீன வரலாற்றில் எப்போதெல்லாம் அரசு வீழ்ந்ததோ அப்போதெல்லாம் கொள்ளையர் எழுந்தனர். 1920 களில் ஜப்பான், சீனா, மஞ்சூரியா போன்ற நாடுகளில் கொள்ளையர்கள் படையில் சேர்க்கப்பட்டனர்.  அப்போது மஞ்சூரியாவின் மக்கள்தொகையில் 0.5% லிருந்து 0.8% வரை கொள்ளையர் இருந்தனர்.   சீனம் முழுவதும் கொள்ளையர் கூட்டத்திலிருந்து 1.5% சதம் பேர் போர் வீரர்களாக தெரிவு செய்யப்பட்டனர். உலகம் முழுவதும் வேளாண்சமூகமும், மேய்ச்சல் சமூகமும் ஒருங்கிணைந்து காணப்படும் இடங்களில் சமூகக் கொள்ளையர்கள் இயங்கியுள்ளனர்

கடவுளும் களவாணியும்

சமூகம்சார் கொள்ளையரை இனம்காண இயலுமா? அவர்கள் அன்றாட மனிதர் உடையில் எளிதில் கண்டுபிடிக்கமுடியாமல் உலவி வருவர்.  அதிகாரத்தில் இருப்பவ்ருக்கு தட்டுப்படமாட்டார். இத்தாலியின் தெற்கிலுள்ள கொள்ளையர் போப், அரசர் போன்றோரின் ஆசிபெற்றவராவர். அவர்கள் கன்னி மேரியின் பாதுகாப்பில் உள்ளவர் என்று அறியப் பட்டனர்.  பெரு நாட்டின் கொள்ளையர் Our Lady ofOur Lady ofLoren என்ற கடவுளுக்குப் பாத்திரமானவர் என்று அறியப்பட்டனர்.  பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் கொள்ளையர் ஒரு சாதுவினால் ஆசீர்வதிக்கப் பட்டிருந்தனர்.

கொள்ளையரும் தீயசக்தியும்

கொள்ளையர்கள் தீய சக்தியோடு ஒருவித உடன்படிக்கை கொண்டிருந்தனர் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் திருடர்கள் தீய சக்தியோடு உடன்படிக்கைக் கொண்டிருந்தனர் என்று நம்பப்பட்டது. இன்றும்கூட இந்த நம்பிக்கை உண்டு.  வேளாண் கொள்ளையர்கள் அவைதீகர்கள் அன்று.  அவர்கள் அன்றாடம் வேளாண்மக்களோடு புழங்கினர்.   அவர்கள் இயல்பான உணர்வுகளுடன்  இயங்கினர்.  ஆனால், மத்திய ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பா போன்ற பகுதிகளில் செமிட்டிக் இனத்தினருக்கு எதிராக இயங்கினர்.

கொள்ளையரும் மந்திரவாதியும்

தெற்காசிய, தென்கிழக்காசிய நாடுகளில் கொள்ளையர்கள் மந்திரச்சொற்கள் அறிந்தவராக அறியப்பட்டனர். ஜாவாவின் Rampok கொள்ளையர்கள் பரம்பரையான மந்திரமும், மாயமும் அறிந்தவராகக் கருதப்பட்டனர். இந்தோனேசியக் கொள்ளையரின் மந்திரத்தன்மைகள்  பொதுமைப்படுத்தப்பட்டன.   அவர்களின் மந்திரத்தன்மை அவர்களுக்கு ஆன்மவியல் அறிதேற்பினைத் தந்தது. இந்தோனேசியக் கொள்ளை யர்கள் மாயவித்தைகளையும் காட்ட வேண்டியிருந்தது.

காட்டிக்கொடுக்கப்பட்ட கொள்ளையர்

இவர்கள் கதைப்பாடல்களில் காட்டிக் கொடுக்கப் பட்டதாக பல செய்திகள் உள்ளன. இது 20ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. Robert Ford என்பவர் Jesse James என்ற கொள்ளையரைகாட்டிக் கொடுத்தார். Patgarrest என்பவர் Billy the kid என்பவரைக் காட்டிக் கொடுத்தார். Jim Murphy என்பவர் Sam Bass என்பவரைக் காட்டிக்கொடுத்தார். Oleksa Doubus என்ற 18 ஆம் நூற்றாண்டின் Carpathian கொள்ளையர் StephenStephenDzvinkaணீ என்ற விவசாயினால் காட்டிக் கொடுக்கப் பட்டார்.

கொள்ளையர் ஏன் நல்லவர் என்று நம்பப் படுகின்றனர்.

Jesse James என்ற கொள்ளையர் ஒருபோதும் விதவைகளை, அநாதைகளை, சமய பிரசங்கிகளை, முன்னாள் குற்றவாளிகளை கொள்ளையடித்ததில்லை.  இவற்றுக்கெல்லாம் மேலாக  இவர் ஒரு தேவாலயத்தில் இசையாசிரியராகப் பணியாற்றினார்.  ஞானஸ்நானம் செய்விக்கும் பணியினையும் செய்துள்ளார்.

சமூகம்சார் கொள்ளையர்கள் இறப்பிற்குப் பிறகு தெய்வத்திற்கும் மனிதனுக்கும் இடையிலான தன்மை யினைப் பெறுவர். அர்ஜெண்டினாவில் கொள்ளையர் தலைவர்களின் கல்லறைகளைச் சுற்றி பல வழிபாட்டுமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.     இவர்கள் பெரும்பாலும் 19 ஆம் நூற்றாண்டின் உள்நாட்டுப்போரில் பங்குபற்றி பின் கொள்ளையராக மாறினர். இவர்களுக்கு பொதுமக்கள் பெரிதும் உதவினர். பெரும்பாலும் இவர்கள் துரோகத்தால் காட்டிக்கொடுக்கப்பட்டனர்.  

கொள்ளையரும் பெண்களும்

கொள்ளையர்கூட்டத்தில் பெண்கள் காதலி என்ற நிலையில்தான் இயங்கினர். சமூகத்தின் anti-social bandits பெண்களைக் கற்பழிக்கப் பயன்படுத்து கின்றனர். ஆனால், Lampiao என்ற கொள்ளையர் கூட்டத்தில் கற்பழிப்பில் ஈடுபடக்கூடாது என்பது சட்டமாக இருந்தது. கொரில்லா கூட்டத்தில் ஒருவர் கற்பழிப்பில் ஈடுபட்டால் தண்டனையுண்டு.    காதலிகளின் வீடுகளுக்கு கொள்ளையர்கள் வந்து போவது வழக்கமாயிருந்தது. இப்பழக்கம் தொடர்ந்து கொள்ளையரின் பலதாரமுறைக்கு வழிவிட்டது.  பொதுவாகக் கொள்ளைக்கூட்டத்தில் பெண்கள் வெளியாருடன் உறவு கொள்வது வழக்கில் இல்லை.  அவர்கள் பொதுவாக துப்பாக்கி ஏந்துவதில்லை.  சண்டைகளில் பங்குபெறுவதில்லை. 

Bavaria வின் Schattinger எனும் பெண் கொள்ளையர் 200 ஆண்டுகளாகக் குற்றம் செய்யும் குடும்பத்திலிருந்து வந்தவர்.  அவரின் குடும்பத்தினர், தந்தை, சகோதரி அனைவரும் சிறையிலடைக்கப் பட்டனர், அங்கேயே கொல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் வேளாண்குடிகளிடமிருந்து கருணை, இரக்கத்தினை எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், நேர்மையான மக்களை கொள்ளையர்கள் எதிரிகள் என்றும் ஒடுக்குவர் என்றும் அதிகாரத்தால் பாதிக்கப்பட்டவர் என்றும் கருதினர்.

Lampiao என்ற கொள்ளையரின் மனைவி MariaMariaBonita என்பவர் தையல்வேலை, பூவேலை, சமையல், பாட்டு, நடனம் போன்றவற்றில் கவன மாயிருந்தார். Lampiao வின் Lieutenant Corisio என்பவரின் மனைவி தமக்கென ஒரு கொள்ளை குழுவினை வைத்திருந்தார். ஒரு பெண் சிறைபட்டிருந்த தம் கணவனை மீட்பதற்காக கைநிறைய பணம் தரத் தயாராய் இருந்தும் அவளின் கணவனை Lampiao கொன்றார். ஒரு மூதாட்டியை சித்திரவதை செய்தார். தண்டனையாக, சாகும்வரை ஒரு பெண்ணை நிர்வாணமாக நடனமாட வைத்தார்.  ஆனால், தாம் பெண்களிடம் sexual moralityயை பின்பற்றுபவராக இருந்தார்.  இவருடைய கொள்ளைக் கூட்டத்தில் பெண்பித்தர்கள் (women seducers) ஆண்மை நீக்கம் செய்யப்பட்டனர்; கற்பழிப்பது தடை செய்யப் பட்டிருந்தது. துரோகம் செய்த பெண்களின் தலை மொட்டையடிக்கப்பட்டு நிர்வாணமாக இழுத்து வரப்படுவது பொதுமக்களால் கண்டிக்கப்பட்டது.   பல்கேரியாவின் ஒரு கதைப்பாடல்படி Stoian என்ற கொள்ளையர் ஒரு கிராமத்தினை கொள்ளையிட்டார்.  அப்போது ஒரு மூதாட்டி அவரை அவமதித்தார்.  எனவே, இப்பெண் கடத்தப்பட்டார்.  வேலைக் காரியாக்கப்பட்டார்.  அவர் தலை துண்டிக்கப்பட்டது.

பொதுவாக, பெண்களை வைத்துக்கொண்டு கொள்ளையர் கூட்டம் ஒழுக்கமாக இயங்காது என்பதால் கொள்ளைக் கூட்டத்தில் பெண்கள் பங்குபெறுவது தடைசெய்யப்பட்டது.

கொள்ளையரும் புரட்சியும்

ஒரு லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதியில் இயங்கிய ஆயுதம் தாங்கிய குழுவினரின் இயக்கத்தால் பிரேசில் இடர்பாடின்றி காலனிய நுகத்தடியிலிருந்து விடுதலை பெற்றது.   ஆயுதம் ஏந்திய அந்தக் குழுவே அங்கு அரசமைத்தது.  இது 1960-1970களில் A national symbol of resistance and even revolution என்று வருணிக்கப்பட்டது. ஜாவாவில் இயங்கிய KenAngrok என்ற கொள்ளையர் Modjopairஎன்ற அரசகுடும்பத்திற்கு அடித்தளம் இட்டார்.

கொள்ளையரும் அரசும்

அரசியல் ரீதியாக சமூகக்கொள்ளையர் பற்றிய வரலாறு ஒரு நாடகத் தன்மை வாய்ந்தது. அரசர்கள், பேரரசர்கள்கூட கொள்ளையராகத்தான் வாழ்க்கை யினைத் தொடங்கினர். எத்தியோப்பியாவின் பேரரசன் (Tewodros) Theodre II (1855-1858) மஞ்சூரியாவின் Chang-T-Solin (Zhang-Zuolin) போன்றோர் இதற்கு காட்டாகும். உருகுவே என்ற சுதந்திர நாட்டினை உருவாக்கிய Jos-Antonio Artigas என்பவர் ஒரு கொள்ளையராகவே தம் வாழ்க்கையினத் தொடங்கினார்.

கொள்ளையரும் கூலிகளும்

1863 Italy இல் Calabriaவில் நடந்த நீதிமன்றத்து வழக்கில் கொள்ளையர் என்ற பெயரில் விசாரிக்கப் பட்டவர்களில் பலர் கூலிகள், விவசாயிகள், வேளாண் குடிகள், கைவினைஞர்கள். இச்சூழலில் இவர்கள் இன்னொரு வகையில் பணம் திரட்டநினைப்பது இயல்பு. இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக கொள்ளையராவதில்லை. குமரப்பருவத்தினைத் தாண்டி திருமணவயதினை எட்டும் நிலையில் உள்ளவர்களே குழுவாக இணைந்து இயங்குவர். குடும்பப் பிரச்சினையினை தாங்கும் முன் இதுபோல் நிகழும்.    வேளாண்சமூகத்தின் இளைஞர்கள் சுதந்திரமாகவும், ஊக்கமான கலகக்காரர்களாகவும் இயங்குவர். ஒத்த வயதுடைய இவர்கள் குழுவாக, தெரிந்தும் தெரியாமலும், முறையாகவும் முறையற்றும் ஒரு வேலையினை விட்டு மறுவேலைக்குச் செல்வதும் சண்டைபோடுவதும் என இயங்குவர்.  ஹங்கேரியின் சமவெளியில் உள்ள ஏழைப் பையன்கள் (poor lads)) தனித்திருக்கும்போது பிரச்சினையற்று இருப்பர்; இருபது, முப்பது பேராக இணையும்போது கொள்ளையராவர். 

கொள்ளையரின் வயது

சீனத்தில், திருமணத்திற்கு முன்னதாகவே, இளம்பிராயத்தினரை கொள்ளைக்கூட்டத்திற்கு என்று ஆள் எடுப்பர். எனவே, கொள்ளையருக்கு முப்பது வயது என்பது முக்கியமான காலகட்டம். அவ்வயதில் கொள்ளை வாழ்வினை விடுத்து திருமண வாழ்வினைத் தொடருவர்.  கொள்ளையர் கூட்டத்தில் சேராமலும், திருமணமாகாமலும் இருக்கும் இளைஞர், அக்கூட்டத்தில் இருந்து  விளிம்புநிலைக்கு தள்ளப்பட வேண்டியிருக்கும்.  பெண்குழந்தைகள் கொல்லப் படுவதால் கொள்ளையரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால், சீனாவில் பெண்களைவிட ஆண்களின் எண்ணிக்கை 20% அதிகரித்தது. பிரேசிலின் வடகிழக்குப்பகுதியில் புகழ்பெற்றிருந்த Lampiao என்ற கொள்ளையர் தம் தொழிலை 18 வயதில் தொடங்கினார்.  மஞ்சூரியாவில் கொள்ளையர்கள் தம் தொழிலை 1920களில் தம் 25-26 வயதுகளில் தொடங்கினார்.   

விளிம்புநிலையும் கொள்ளையரும்

சமூகத்தில் தனித்துவிடப்பட்ட நபர்கள், விளிம்பு நிலைக் கூட்டத்தினருடன் சேரும்நிலை உருவானது.  பழைய ரஷ்யாவில்  மக்கள் எளிதில் கடக்க இயலாத, குறைவான மக்கள்தொகை கொண்ட விளிம்பு நிலப்பிரதேசத்தில் Rasbioniki என்ற கொள்ளைக்கூட்டம் உருவானது. இவர்கள், பெரும்பாலும் தனித்து விடப்பட்ட விளிம்புநிலை மனிதர்கள், புலம் பெயர்ந்தவர்கள்.  ரஷ்யாவின் தெற்கு மற்றும் கிழக்குப்பகுதிகளில் இவர்கள் இயங்கினர். அங்கு நிலப்பிரபுக்களோ, அடிமைமுறை அரசோ நுழையமுடியவில்லை.  இவர்களே, பிறகு புரட்சியினை உருவாக்கினர். Land of freedom என்ற அமைப்பினை உருவாக்கினர். (அவர்கள் அலைகுடிகளாகவும் வாழவேண்டியிருந்தது). இந்த அமைப்பில் தப்பிவந்த அடிமைகள், வாழ்ந்து கெட்ட தனிமனிதர்கள், செல்வந்தரின் பிடியினின்றும் ஓடிவந்தவர்கள், சிறையினின்றும் தப்பியோர், கோயில் மடங்களில், படையில், கப்பற்படையில் இருந்து தப்பியோர் இருந்தனர். இவர்களுடன் குருமார்களின் வாரிசுகள் ஒன்றிணைந்து இக்கொள்ளையர் கூட்டத்தினை உருவாக்கினர். இவர்கள் எல்லைப்புறங்களில் இயங்கிவந்த கூட்டத்தோடு கலந்தனர்.  இதுபோன்ற விளிம்புநிலைக் கூட்டத்தில் ராணுவவீரர், முன்னாள் படை வீரர், படையினின்றும் ஓடிவந்தோர் முக்கியமாக பங்காற்றினர். இவர்கள் எளிதில் கொள்ளையராயினர். 

1860 களில் இத்தாலியின் தென்பகுதியில் அவ்வப்போது எழுந்த கொள்ளைக்கூட்டத் தலைவர்கள்  Bourborn Armyயில் பணியாற்றிய முன்னாள் ராணுவத்தினர் என்றும், நிலமற்ற கூலித்தொழிலாளிகள் என்றும் அறியப்பட்டனர். இக்கொள்ளையர் கூட்டத்தின் முன்னாள் ராணுவத்தினர் கிராமத்து இளைஞர்களுக்கு கல்வி போதிப்பவராக இருந்தனர். புரட்சிப்படையின் பள்ளிகள் இவர்களைப் பயன்படுத்தின. ஓடிவந்த முன்னாள் ராணுவத்தினர் வேளாண்சமூகத்துடனும் இருந்தனர். ஓய்வான நேரங்களில் பிற வேலைகளைச் செய்தனர். சிலவேலைகளுக்கு ரகசியக் குழுக்கள் அமர்த்தப்பட்டன. இவர்கள் ஆயுதம் தாங்கிய மனிதராகவும், தோட்டக் காவலராகவும், வண்டி யோட்டிகளாகவும், பாணர்களாகவும் பணியாற்றி யுள்ளனர். பொதுமக்கள் புழங்கமுடியாத மணற் பகுதிகளில் சுற்றித்திரிந்தனர். அங்கு, கொள்ளையர்கள் கால்நடை மேய்ப்பவருடன் கலந்து திரிந்தனர்.

குடியானவரும் கொள்ளையரும்

அரசியலில் கொள்ளையர் நுழைவது மரபுவாதிகள் புரட்சியாளர் ஆவதுபோலாகும். கொள்ளையர்கள் புரட்சியாளராக மாறுவது வேளாண்சமூகத்தின் உள்ளீடாகும். கொள்ளைத்தொழில் ஒருவகையான சுதந்திரம். ஆனால், வேளாண்குடியில் ஒருசிலர் மட்டுமே சுதந்திரமாக இருக்கலாம். அவர்கள் பெரும்பாலும் ஒருவகையில் நிலப்பிரபுக்களாகவும் இன்னொருவகையில் கூலித்தொழிலாளிகளாகவும் பிணைக்கப் பட்டுள்ளனர்.  வேளாண்குடிகள் அதிகாரத்தின்பிடியில் பலியாகின்றனர். அவர்கள் தன்னிறைவு பெறவும் இல்லை. புலம் பெயரவும் இயலவில்லை.

குடியானவர் திருமணமானவுடன் மனைவி மக்களுடன் கட்டுண்டு பணிபுரியும் இடத்தினைவிட்டு நகரமுடியாமல் இருக்கிறார். வளர்ந்த குடியானவன் கொள்ளையனாக மாறுவதற்கு வாயுப்பு உண்டு. இது ஓர் ஆண்டுச்சுழற்சி. கோடைகாலம், வசந்தகாலம், பனிபொழியும் காலம் என்று மாறி மாறி கொள்ளை நடக்கும். 

வேளாண்சமூகத்தினின்றும் கொள்ளையர் உருவாகும் சூழல்

வளமற்ற நிலப்பகுதியிலும் மேய்ச்சல் நிலப்பகுதியிலும் உள்ள வேளாண்குடிகள் உபரி உழைப்பாளர்கள் வேலையின்றி இருப்பதால் அவர்கள் கொள்ளையராக மாறும் சூழல் உருவாகும். இதுபோன்று ஆல்ப்ஸ் மலைகள், அல்ஜீரியாவின் Kabyk மலைகள், Albania, Switzerland, Corsica, Naples போன்ற பகுதிகளில் இவ்வாறு கொள்ளை நடந்தது. இதனால், சிக்கனமாக குடும்பத்தினை நடத்த வேண்டியிருந்தது.   அது mini feudalism என்ற சொல்லால் அழைக்கப்பட்டது.  இதனால், நிலமற்ற நிலை விரும்பப்பட்டது.   வேலையில்லாதவர் வாழ்க்கையைத்தேடி ஓடிக் கொண்டிருந்தனர். வேளாண்குடிகள் அப்படியில்லை.   மலைகளும், மேய்ச்சல்வட்டாரங்களும் கொள்ளையரின் களங்களாயின.

கொள்ளையின் விளைவு

கொள்ளையர்கள் ஆட்சியரின் தவறுகளைத் திருத்தினர்.  அநீதியினை சரி செய்தனர். எளிய மனிதனுக்கும், தனிமனிதனுக்கும் இடையிலான உறவினையும் சரிசெய்தனர்.   இது, நல்ல நோக்கமாக இருந்தது. செல்வந்தன் ஏழையை சுரண்டுவது நின்றது. கொள்ளைச்சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழக்கூடிய வேளாண்குடிகளின் புரட்சிக்கு அடித்தளமாக அமையும்.  கடந்த இரு நூற்றாண்டுகளில் முதலாளிய பொருளியல் சமூகத்தில் பெரும் மாற்றத்தினை உருவாக்கியது. இது, முற்றாக வேளாண்சமூகத்தினை அழித்து கொள்ளையர் உருவாக வழிவிட்டது. 19-20 ஆம் நூற்றாண்டுகளில் உலகம் முழுவதும் பரவலாக சமூகக்கொள்ளைகள் நிகழ்ந்தன.   இன்றைக்கு முற்றிலும் ஒழிந்தன என்றாலும் சில இடங்களில் நிகழ்கின்றன. இன்னும் ஐரோப்பாவில் ஸ்காண்டினேவியன் மேட்டு நிலப்பகுதிகளில் கொள்ளை யர்கள் இயங்குகின்றனர்.

Haiduks (ஹய்துக்கள்)

Haiduks என்பது ஒரு சகோதரத்துவ அமைப்பு.   அதாவது Male brotherhood . இதற்கு நல்ல உதாரணங்கள் உண்டு. இவர்கள் இயல்பாகவே ஊக்க மானவர்கள். நோக்கமும், ஆக்கமும் கொண்டவர்கள். அவர்கள் எப்போதும் நிறுவப்பட்ட அலுவலர்களைத் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இவர்கள் robin Hood லிருந்து வேறுபட்டவர்கள்; அகப்பட்டவர்களை பலிபோடுவர்.  Haiduks  என்ற சொல்லிற்கு கால்நடை திருடுபவர் என்று பொருள். இவர்கள் தானாக உருவாகவில்லை. Hungary யின் சிலபகுதிகளில் பிரபுக்களுடன் தொடர்புடையவர்களாக இருந்தனர்.   இவர்கள் free-robber liberation  எனப்பட்டனர்.   இவர்கள் பிரபுக்களுக்கு இலவசமாக சண்டைக்காரர்களை  உருவாக்கித் தந்தனர். இவர்கள் ரஷ்யாவிலும், ஹங்கேரியிலும் அரசு மற்றும் இளவரசர்களிடமிருந்து  நிலம் பெற்றனர். பதிலுக்கு, ஆட்சியாளர்களுக்கு ஆயுதங்களையும், குதிரைகளையும் அனுப்பி பாதுகாப்புப் பணிகளைச் செய்தனர். ரஷ்யாவிலும் ஹங்கேரியிலும் துருக்கியரை விரட்டியடிக்கவே இவ்வேற்பாட்டினைச் செய்தனர்.  இவ்விரு நாடுகளின் எல்லைப்பகுதிகளில் வீரர்களுடன் பணியாற்றினர்.  இவர்கள்பற்றி பலகதைப்பாடல்கள் இருந்தாலும்   அவர்களின் அடிப்படை நோக்கம் பொருளாதாரம் பற்றியது. இவர்களின் பாடல் ஒன்று:

மாரிக்காலம் மோசமானது;

கோடைக்காலம் வறண்டது;

செம்மறியாடுகள் மரிக்கின்றன.

எனவே Stoian, Haiduk  என்று மாறுகிறான்.

இன்னொருவகை ஹய்துக்கள் உண்டு.  அவர்கள் கிறித்தவ ஆட்சியோடு சேர்வதில்லை.  இவர்கள் அரசகுலத்தினரும் அன்று; போர்க்குலத்தவரும் அன்று; துருக்கிக்கு எதிரான கொள்ளையர்கள்.  பழிவாங்கும் கொள்ளையர்.

இவர்கள் விடுதலை விரும்பிகள்.  தொடக்கத்தில் கொரில்லாமுறை போராளிகளாக இருந்தனர்.  இவர்கள் முதலில் 15  ஆம் நூற்றாண்டில் Bosnia, Herzegovina போன்ற இடங்களில் உருவாயினர்.  அடுத்து  Balkan, Bulgaria போன்ற இடங்களில் உருவாயினர். 

முதல் ‘Haidot’ தலைவர் 1454 இல் Bulgaria  ஆவணங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளார். தொடக் கத்தில் இவர்கள் கொள்ளையர். இதுபோன்ற கொள்ளையர் தென்கிழக்கு ஐரோப்பாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் இயங்கினர்.  இந்தோநேசியா, இம்பீரியல்-சீனா போன்ற நாடுகளில் இயங்கினர். இவர்கள் பொதுமக்களின் ஆதரவினைப் பெறுவதற்குப் பல காரணங்கள் உண்டு. அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் இல்லை. அவர்கள் பேசும்மொழி, பின்பற்றும் சமயம் போன்றவை மட்டும், கருத்தியலும் வர்க்க உணர்வுகள் மட்டும் அவர்களைக் கொள்ளை யராகவில்லை.  பல்கேரியாவில் ஒரு ஹைது தலைவர் தன் வரலாறு எழுதினார். 1850களில் அவர்தம் 25வது வயதில் ஒரு துருக்கிய அலுவலருடன் சண்டையிட்டார். பிறகு, ஒரு மணற் பிரதேசத்திற்குச் சென்று ஒளிந்துகொண்டார்.   

ஹய்துக்கள் : கதைஒன்று

Tatuncho என்ற Haidu கொள்ளைத் தொழிலை விட்டு தம் தாய் வேண்டிக்கொண்டதற்கு இணங்க குடும்பவாழ்க்கைக்குத் திரும்பினார். அத்தாய் அவரிடம் சொன்னார்: கொள்ளையன் குடும்பத்தினைக் கவனிக்க மாட்டான். ஆனால், நடந்தது வேறு. அவனைக் கொல்வதற்கு சுல்த்தான்கள் அனுப்பிவைத்த ஆட்களைக் கொன்றான். அவர்கள் பெல்ட்டில் வைத்திருந்த பணத்துடன் வீடு திரும்பினான். இது தாயின் கூற்றுக்கு மாறாக உள்ளது. ஒரு விவசாயியின் வாழ்க்கையைவிட ஒரு கொள்ளையரின் வாழ்க்கை பொருளாதாரரீதியில் வளமானது. இச்சூழலில் நேர்மையான ஒரு சமூகம்சார் கொள்ளையரை எதிர்பார்ப்பது அரிது.

ஹைதுக்களின் கொடூரத்தன்மை யாவரும் அறிந்தது. இவர்கள் வேளாண்குடிமக்களிடமிருந்து நிரந்தரமாக அந்நியப்பட்டவர். இங்கும் அங்குமாக ஓடித்திரிபவர்.  அலைகுடிகளைப்போல் இருந்தனர்.    இவர்களுக்கு தனித்த ஒரு தலைவர் இல்லை.  இவர்கள் Voivode Ordukes என்ற தலைவர்களால் வழிநடத்தப்படு கின்றனர். இத்தலைவர்களே ஹைதுக்களுக்கு

ஆயுதங்கள் வழங்குகின்றனர். ரஷ்யாவில் இதுபோன்ற கொள்ளையரை Jamadars என்ற குழுவினர் வழி நடத்தினர். பதிலுக்கு கொள்ளையில் ஒருபங்கு வசூலித்தனர். 10% தீவர்த்திகளுக்கும், ஆயுதங்களுக்கும் இன்னும் பல பொருள்களுக்கும் கொடுக்க வேண்டியிருந்தது. ஹைதுக்கள் பால்கன் பகுதிகளில் தேசிய கொள்ளையர் (National bandits) என்று அறியப் பட்டனர். சில மரபு சட்டங்களின்படி இவர்கள் கிறித் தவர்கள் சார்பாக நின்று துருக்கியரை பழிவாங்கினர்.  ஒடுக்கப்பட்டவர்களுக்கு சார்பாக சண்டையிட்டனர்.

Robin hood

Robin hood என்ற கதாபாத்திரம் வேளாண்குடிகளின் கதாநாயகன் என்று அறியப் பட்டாலும் சில நேரங்களில் அவன் தெய்வாம்சம் பொருந்தியவன் என்றும் அறியப்பட்டான்.    எங்கெல்லாம் அரசாங்கத்திற்கும், பிரபுக்களுக்கும் இடையிலான உறவு தெளிவில்லாமல் உள்ளதோ அங்கு இவர் ஒரு சமூகத்தலைவராக எழுவார். ராபின்ஹ¨ட் பற்றிய கதைப்பாடல்கள் 14 ஆம் நூற்றாண்டிலிருந்து கிடைக்கிறது.  ஆனால், 16 ஆம் நூற்றாண்டுவரை இவர் ஒரு கதாநாயகனாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.   இங்கிலாந்தின் தொடக்கக்காலத்திய வரலாற்றில் இதுபோல் ஒருவர் வாழ்ந்தாரா? என்பதனை இங்கிலாந்தின் இடைக்காலத்தினை ஆராயும் ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். 

இக்கதாபாத்திரம் உலகம் முழுக்க புகழ்பெற்றது.   இதற்கு பல கதைப்பாடல்கள் உண்டு.  இருந்தாலும் இப்பாத்திரம் நடைமுறையில் அரிது.   உண்மைக்கும், புனைவிற்கும் இடையிலான இடைவெளி அதிகமன்று.   இதனை இப்படிப் புரிந்துகொள்ளலாம்.  குதிரை வீரனுக்கும்  படைத்தளபதிக்கும் இடையிலான இடைவெளி அதிகமன்று.

ராபின்ஹ¨ட்டின் வரையறுக்கப்பட்ட இயல்புகள்

  1. ஒரு சாதாரண ராபின்ஹ¨ட் தம்முடன் 6முதல் 20 வரையிலான ஆட்களை வைத்திருப்பார். இது நிரந்தரமான நிறுவனம்போல் இயங்கும்.
  2. இவர் மரபுவழிப்பட்ட சமூகக்கொள்ளையர் (Traditional noble robber) என்று அறியப்படுகிறவர். இவர் ஆதிகாலத்திய முறையிலான சமூக எதிப்பினையே வெளிப்படுத்தினார்.

3.இவரை ஒரு தனிப்பட்ட வணங்காமுடி எனலாம். 

4.தம் கிராமத்தில் உள்ளவர் தவிர, பிற இடங்களில் உள்ள ஏழைகளையும், செல்வந்தர்களையும் கொள்ளை யிடுவர்.

5.இவரால் ஒடுக்குமுறையினை அழிக்க முடியவில்லை.  ஆனால், ஏழைநாடுகளுக்கு நீதியினைப் பெற்றுத்தரமுடியும் என்று நம்பினர். 

ராபின்ஹ¨ட் கதாபாத்திரம் தொடர்ந்து உருவாக்கப்படும். அவர், ஏழைகளுக்குத் தேவை.   அவர் நீதியின் அடையாளம். இங்கு Saint Augustine  கருத்தினை மனம்கொள்ள வேண்டும். ‘அரசுகள் பெரிய அளவிலான கொள்ளைக்கூட்டங்கள்’. ஆனால், ராபின்ஹ¨ட்களால் ஒடுக்குமுறையினை அழிக்க முடியவில்லை என்றாலும் அவற்றினை குறைக்க முயன்றனர்.

Diego Carrienses  என்ற (1757-81 noble robber, Andulasia  நிலப்பிரதேசத்தில் இயேசு கிறிஸ்தோடு ஒப்பிடப்பட்டார். ஆனால், காட்டிக்கொடுக்கப் பட்டார். உண்மையில், பல Robin hoods, Noble

robbers இல்லை. Noble robbers  என்ற image உருவாக்கம்  சமூக உறவுகளாலும், வேளாணுறவுகளாலும் உருவானது.    இவர் ஒரு சாதனையாளராக, தவறுகளை சரிசெய்பவராக நீதியைக்கொண்டுவருபவராக சமூகத்தில் சமநிலையினை உருவாக்குபவராக அறியப்படுகிறார். வன்முறையின் நீக்கு-போக்கு பொறுத்து அவற்றினை அளவிடுதல் பொறுத்து ராபின்ஹ¨ட்டின் புகழ் நிர்ணயமாகும்.    இவர், செல்வந்தரை கொள்ளையிடுவார், ஏழைகளுக்கு உதவுவார்; யாரையும் கொல்லமாட்டார். Billy the Kid  என்ற தென் அமெரிக்காவின் ரபின்ஹ¨ட் வெள்ளையரிடம் கொள்ளையடித்து தம் மக்களிடம் கொடுத்ததால் அவர் நல்லவராகப் பார்க்கப்பட்டார். 

18 ஆம் நூற்றாண்டில் France, England, Germany  நாடுகளில் முறையே Dick Tuprin, Cartouche, Schnder hanns போன்றோர் ராபின்ஹ¨ட்களுக்கு இணையாகப் பார்க்கப்பட்டனர் / போற்றப்பட்டனர். ஆனால், அப்போது robin hood seasons முடிந்திருந்தது. Robin hood  என்று ஒருவர் இருந்திருப்பாரேயானால் அவர் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருப்பார்.  ஆனால், 16-17 ஆம் நூற்றாண்டுகளில் அச்சு நூல்கள் வந்த பின்னரே இவர் பற்றிய கதைகள் புகழ்பெற்றன.   Robin hoods எழுத்து ஆவணங்களை விட்டுச் செல்லவில்லை.  19ஆம் நூற்றாண்டின் கொள்ளையர்களால் பிடிக்கப்பட்ட பயணிகள் குறிப்புகள் வழியேதான் அவர்களைப்பற்றி அறிய இயலும். 20 ஆம் நூறாண்டில்தான் Bandoleer கொள்ளையர் பற்றிஒரு பத்திரிகையாளர் செய்தி தருகிறார். 19 ஆம் நூற்றாண்டின் தென்கிழக்கு ஐரோப்பா பகுதியில் பயணிகள் கொள்ளையரால் பிடித்துவைக்கப்பட்டனர். 

கொள்ளையர் : மதிப்பீடு

கொள்ளையர் பொதுவாக உள்ளூர்க்காரர்களே.  ஒரு வட்டாரத்தில் நிகழும் கொள்ளை இன்னொரு வட்டாரத்தில் இருப்பவர் அறிவதற்கு வாய்ப்பு இல்லை.   ஒரு கூட்டத்தினைச் சார்ந்த ஒருவன் கொள்ளை யடித்தால் சட்டத்திற்குமுன் அவன் கொள்ளையன்.    ஒரு நகரின் மூலைமுடுக்கில் ஒருவன் சம்பளப்பையினை பறித்துக்கொண்டு ஓடினால் இன்றைக்கு அவன் தீவிரவாதி என்று கொள்ளையனை மதிப்பிடுவர்.

சிலர் மானமிகு கொள்ளையர் (Gentleman robbers ) எனப்பட்டனர்.  வேளாண் சமூகத்திலிருந்து தோன்றிய கொள்ளையர் நாகரிகமாதலை வெறுப்பர்.  இடைக்காலத்தில் ஜெர்மனியில் தோன்றிய வீரக் கொள்ளையர்கள் அல்லது கொள்ளைவீரர்கள் (Robber Knights) வேளாண் குடிகளோடு கலப்புற்று இருந்தனர்.   அவர்களை, அரசும் நிலவுடைமையாளர்களும் குற்ற வாளிகள் என்றனர். மக்கள் அவர்களை கதாநாயகள் என்றும், சாதனையாளர்கள் என்றும், பழிதீர்ப்போர் என்றும், நீதிக்காகப் போராடுவோர் என்றும், விடுதலைத் தலைவர்கள் என்றும் போற்றினர்.

ஒருவர் தம் சொந்தமண்ணில் சமூகக் கொள்ளை யராகவும், மலைப்பகுதிகளில் சமவெளிகளில் திருடனாகவும் இயங்குவர். 

என்னதான் கூட்டாகக் கொள்ளையடித்தாலும் கொள்ளையடித்தவற்றை தம் சகபாடிகளுக்கு அவற்றைத் தக்கவைத்துக் கொள்ளும் உரிமையினை தலைவர்கள் வழங்குவது இல்லை. சமூகக் கொள்ளையர்கள் சீர்திருத்தவாதிகள் புரட்சியாளர்கள் அன்று. இருந்தும் இவர்களால் ஓர் இயக்கத்தினை இயக்கமுடியவில்லை. நேபிள்ஸ் நகரில் தோன்றிய கொள்ளையர் அயல் நாட்டவருக்கும் Jacobins  க்கும் எதிராக எழுந்தனர். அவர்கள் போப்பின் பெயரால் புனித நம்பிக்கையின் பெயரால் புரட்சியாளர்களாயினர். 

சமூகக்கொள்ளை என்பது சில சந்தர்ப்பங்களில் சரியாகவும் சில சந்தர்ப்பங்களில் தவறாகவும் புரிந்து கொள்ளப்படுகிறது. கொள்ளையர்கள் குற்றவாளி களாகவும் பார்க்கப்படுகின்றனர்; கொள்ளையர் தலைவராகவும் கருதப்படுகின்றனர். இத்தாலியர்கள் கொள்ளையரை சமாளிக்க Dumas என்ற முகமூடியர்களை காவலர்களாக வாடகைக்கு அமர்த்தினர். மரபுரீதியான சமூகக்குற்றவாளிகள் அதாவது சமூகக்கொள்ளையர்கள் பெரும்பாலும் வெளியாராகக் கருதப்படுவார்.  அவர்கள் தங்களுக்குள் ஒரு சமூக அமைப்பினை உருவாக்கிக் கொள்கின்றனர்.  அவர்கள், அவர்களுக்கான மொழியில் பார்க்கப் படுகின்றனர். அது, குற்றவாளிகளின் மொழி. அது, argot என்ற மொழியாகும். இவர்கள் Gypsies என்ற நாடோடிகளோடு தொடர்பு கொண்டிருந்தனர்.  கொள்ளையர்கள் Gypsies, French, Spanish, ரவுடி கூட்டத்தினின்றும் சில சொற்களைப் பெற்றனர்.   ஆனால், வேளாண் கொள்ளையர்கள் இதுபோன்ற ஒரு கலவை மொழியில் பேசவில்லை; மக்கள்மொழியில் பேசினர்.

கொள்ளையரின் குற்றவகைகள்

இருவேறுவகையான குற்றவகைகள் உண்டு:

(1) தொழில்ரீதியான அடியாள் கூட்டத்தினரின் நடவடிக்கைகள்.  இவர்கள் பொதுவாக திருடர்கள்.

(2) குழுக்களாக ஊர்புகுந்து திடீரென்று கொள்ளை யிடல்.  கொள்ளையர்களும், ஊர்புகுந்து திருடுபவர் களும் வேளாண்குடிகளை தங்கள் இரைகளாகக் கருதினர். ஒரு சமூகக்கொள்ளையன் வேளாண்குடிகளின் விளைச்சலைப் பிடுங்குவது சிந்திக்க இயலாத ஒன்று. அவர்கள் பண்ணையாரின் வேளாண் விளைச்சலைக் கொள்ளையிடுவர். சமூகக் கொள்ளையர்கள் குற்றவாளிகளாகக் கருதப்படாததால் கொள்ளைத் தொழிலை விட்ட பிறகும் மீண்டும் சமூத்தில் இணைந்துகொள்ள அவர்களுக்குத் தடையில்லை. தம் சமூகம் இயங்கும் வட்டாரத்துக்குள்ளேயே அவர்களின் இயக்கம் இருந்தது.

பயன்பட்ட நூல்கள்

1) David Arnold (1979).Dacoity and Rural Crime in1. David Arnold (1979).Dacoity and Rural Crime inMadras,1860-1940, The Journal of Peasant Studies,6:2.140-167.

2)  Fernand Braudel (1995).The Mediterranean and therMediterranean World in the Age of Philip II.Vol.IITranslated from the French [II revised edition,1966(Tr.Sian Reynolds)]. First California Paper PackPrinting.

3) Fernand Braudel (1992).Civilization and Capitalism15-18th century, 3.Vols. (translated from French by SianReynolds) University of California Press.

4) Marc Bloch (1971).Feudal Society: The Growth of Tiesof Dependance,Vol.I.Translated from French byL.A.Mauyon, First English Translation.1961.Reprint in1971.

5)  ----------------(1978).French Rural History: An Essay onits Basic Characteristics. Translated from the French byJanet Sondheimer.

6)  Eric Hobsbawm 1959).Primitive Rebels: Studies in ArchaicForms of Social Movement in the 19th and 20thCenturies.

7) ----------------(1969).Bandits.[First published in GreatBritain.(reprinted in 2012)].Abacus,London.

Pin It