தமிழ்நாட்டிற்கு உரிமையான நிதியை ஒன்றிய அரசு தராமல் இருப்பதனால், முதலமைச்சர் என்ற முறையில் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டில்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இதில் ஊர்ந்து சென்று கால் பிடித்து அரசியல் செய்யும் எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன வந்தது? டாஸ்மாக் அமலாக்கத்துறை சோதனையால், சுயநலத்தோடு டில்லி செல்கிறாராம் முதல்வர்? சொல்கிறார் இந்த சரணாகதிப் பழனிச்சாமி.mk stalin 380பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்பார். மறுநாள் டில்லியில் முக்காடிட்டுக் 'கார்'களில் மாறிமாறிச் சென்று சரணாகதி அடைவார் அமித்ஷாவிடம், பாஜகவுடன் கூட்டணி என்பார். இதில் அவரின் சுயநலம் இல்லையா?

அந்தப் பழனிச்சாமிக்கு ஸ்டாலினைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?

தேர்வு எழுதும் முன் விடை சொல்வதுபோல முதலில் 1000 கோடி ஊழல் என்றார்கள், பிறகு விசாரணை செய்கிறார்கள், என்ன ஆவணங்கள், எவ்வளவு பணம் அல்லது என்னதான் கைபற்றினார்கள் அமலாக்கத் துறையினர் டாஸ்மாக்கிடம் என்று இதுவரை ஒன்றுமே சொல்ல வில்லையே! அதற்குள் துள்ளிக் குதிக்கிறார் பழனிச்சாமி.

சரி! அது கிடக்கட்டும். இன்று பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் எடப்பாடி மோடி, அமித்ஷாவிடம் சொல்லி 'நீட்' தேர்வை ரத்து செய்திருக்கலாம், தமிழ்நாட்டிற்குக் கொடுக்க மறுக்கும் நிதியையாவது பெற்றுத் தரலாமே, ஏன் அதை அவர் செய்யவில்லை? அவரும் செய்ய மாட்டார், அடுத்தவரையும் செய்யவிட மாட்டார்.

ஒரு எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருப்பவர் தரமான அரசியல் பேசவேண்டும்.

எடப்பாடியைப் போல உப்புக்கும், புளிக்கும் உதவாத கதைகளைப் பேசிக்கொண்டு இருக்கக்கூடாது!

ஸ்டாலின் போராடுகிறார், அவர் போராளி!

எடப்பாடி போடுகிறார், சரணாகதி!

- கருஞ்சட்டைத் தமிழர்