அரசியலில், அரசியல் கட்சிகளுக்கு வெற்றி மட்டுமே பிரதானமென்பது உண்மை தான்.

stalin 450 copyஅதேசமயம், அப்படிப்பட்ட வெற்றி பல அரசியல் கட்சிகளைக் காணாமலடித்திருக்கிறது. அதையெல்லாம் உடைத்தெறிந்து மக்களோடு மக்களாக, மக்களுக்காகப் பல தோல்விகளுக்குப் பின்பும் நிமிர்ந்து எழுந்து  திமுகவால் நிற்க முடிகிறது என்றால் அதற்கு காரணம் திமுகவின் தோற்றம். அதற்கு அண்ணாவும் கலைஞர் அவர்களுமே கொள்கை என்கிற உரமிட்டு வளர்த்தார்கள்.

இப்படி நான் எழுதுவதற்குக் காரணம், மிகப்பெரிய பேரழிவிலிருந்து தமிழக மக்களைக் காக்க தற்போது திமுக எடுத்திருக்கும் முயற்சி. ஏதோ போகிற போக்கில் நன்றி மட்டும் சொல்லிவிட்டுப் போவதற்காக அல்ல.

சுயநலமில்லா பலநூறு அறிஞர்கள், சுயநலமில்லா பல இயக்கங்கள், பல அரசியல் கட்சிகள்கூட, கூடங்குளம் அணு உலை என்பது தமிழகத்திற்கு வேண்டவே வேண்டாம். அணு உலை என்பது பாதுகாப்பானதல்ல.  பலநாடுகள் மக்களின் நலன்கருதி அணுஉலைகளைக் கைவிட்டு விட்டன என்று தன்னால் இயன்ற அளவு குரல் கொடுத்து வந்தது நாம் அறிந்த ஒன்றுதான்.

துவக்கத்தில் திமுக இந்த விடயத்தில் சற்றுப் பின்தங்கியே இருந்தது என்பது உண்மை தான் என்றாலும், தற்பொழுது, நான் பலநூறுமுறை எழுதியிருக்கிறேன் திமுக என்பது மக்களுக்கான இயக்கம் என்று. அதற்குச் சான்றளிக்கும் விதமாக தளபதி அவர்கள்  கூடங்குளம் அணு உலை என்பது துவக்கத்தில் இருந்தே பல பிரச்சனைகளைச் சந்தித்து வந்திருக்கிறது.

தரமில்லாத உபகரணங்களை உபயோகித்த காரணத்தால் இன்றுவரை அடிக்கடி பழுது ஏற்பட்டு,

அதன் கொடூரங்கள் மறைக்கப்பட்டு வந்ததைத் தளபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதும்,

அதன் தீவிரத்தை உணர்ந்த தளபதி அவர்கள் அணு உலை 1 & 2 இவற்றின்  நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி இருப்பது கண்டு, அரசியலும் அரசும் தலையிடாவண்ணம், அணு உலை பற்றி அறிந்த விஞ்ஞானிகள்,

அரசு சாரா அறிஞர்கள்குழு பரிசோதிக்க வேண்டும் என்று, சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சர் அவர்களுக்குக் கடிதம் எழுதி, அதற்கு மேலும் முக்கியத்துவம் கிடைக்கும் வகையில் மாநிலங்களவை உறுப்பினர்கள் போற்றுதலுக்குரிய திரு.திருச்சி சிவா,ஆலந்தூர் திரு.பாரதி அவர்கள்  தலைமையில் நேரடியாக எதிர்கட்சித் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் கடிதத்தை கொடுத்து தங்களின் வேதனையை, மக்களின் பயத்தை, தமிழக மக்கள் சார்பாக அளித்திருக்கிறார்கள்.

எத்தனையோ இயற்கைப் பேரிடர்கள் வந்திருக்கின்றன. மக்களும் பாதிப்படைந்திருக்கிறார்கள். அதையெல்லாம் கூட அந்தந்த அரசுகள் சமாளித்திருக்கின்றன.

ஆனால் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டிருக்கின்ற இந்த கூடங்குளம் அணு உலையில் அணு உலையால் பாதிப்பு ஏற்பட்டால் காக்கை, குருவி ஏன் புல் பூண்டு கூட மிஞ்சாது.

இந்த நிலையறிந்த தளபதி அவர்கள், அதுவும் அடுத்து ஆட்சி அமைக்கப் போகும் நிலையில், முதல்வராகப் பொறுப்பு ஏற்க இருக்கும் நிலையில், இதன் முக்கிய காரணகர்தா பூவுலகின் நண்பர்கள் மற்றும் எம் போன்றோர் கத்திய கதறலுக்குச் செவிமெடுத்திருப்பது ஒரு திருப்பு முனையே ஆகும். இதுகூட தளபதி அவர்களைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக அல்ல. தமிழகம் ஒரு மிகப்பெரிய பேராபத்திலிருந்து  காப்பாற்றப்படப் போகிறது என்கிற உள்ளார்ந்த நன்றியின் வெளிப்பாடே.

திமுக  சப்தமில்லாமல் செய்திருக்கும் இந்தச் செயல்  இந்த மண்ணையும், மக்களையும் நேசிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை ஊட்டியிருக்கிறது.

ஏனெனில் ஆபத்தை எல்லோராலும் அறிந்து கொள்ள முடியாதுதான். கூடங்குளம் அணு உலையால் என்னென்ன, எந்தெந்த விதத்தில் ஆபத்துக்கள் வருமென்பதும், அதைத் தடுக்க எந்த மனித சக்தியாலும் முடியாதென்பதால் அதன் தீவிரம் அறிந்து நடவடிக்கைகளை எடுத்திருக்கிற திமுக இன்றல்ல என்றும் மக்களின் காவலனே. சிங்கராயர் போன்றவர்கள் மட்டுமல்ல தமிழ்தாயும்  வாழ்த்துவாள்.

தளபதி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

 

Pin It