உ.பி., பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் சில செய்திகளையும்,சில பாடங்களையும் கொண்டு வந்துள்ளன.
உ.பி.யிலும், உத்தரகாண்டிலும் பா.ஜ.க பெற்றுள்ள பெரும் வெற்றியைக் குறைத்து மதிப்பிட்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. வாக்கு இயந்திரத்தில் ஏதோ செய்து விட்டார்கள் என்று மாயாவதி சொல்வதெல்லாம் நம்பக் கூடியதன்று. அவ்வாறெனில், பஞ்சாபில் மட்டும் இயந்திரங்களைத் தங்கள் விருப்பத்திற்கு மாற்ற முடியாமல் போய்விடுமா என்ன?
குடும்பத் சண்டையும், கூட்டணிச் சண்டையும்தான் தோல்விக்குக் காரணம் என்கிறார் பிஹார் முதலமைச்சர் நித்திஷ் குமார். அதில் ஒரு உண்மை இருக்கவே செய்கிறது. தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னால் உ.பி.யில் அப்பா, பிள்ளை, சித்தப்பா இடையே நடந்த குடுமிபிடிச் சண்டையின் நெடி இந்தியா முழுவதும் வீசியது.
அரசியல்வாதிகளின் மீதே ஓர் அருவருப்பை அது கொண்டுவந்தது. இவர் அவரை நீக்குவதும், அவர் இவரை நீக்குவதுமாகச் சிறுபிள்ளை விளையாட்டு அங்கு நடைபெற்றது. அக்கட்சியின் ஆதரவாளர்களே முகம் சுழிக்கும் அளவுக்கு அந்தக் கலவரங்கள் அங்கு நடைபெற்றன. சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சியின் கூட்டணி தோல்வி அடைந்ததற்கு அது ஒரு முதன்மையான காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
நிதிஷ் குமார் சொல்வதை போல, பெரும் கூட்டணி உருவாகாமல் போனதும் இன்னொரு காரணம்தான். பிஹாரில் நிதிஷ், லாலு, காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டதால்தான் வெற்றி கிடைத்தது. ஆனால், உ.பி.யில், முலாயம், மாயாவதி இருவரும் ஒன்று சேரவே இல்லை. அதனால் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகள் பிரிந்தன. அது பா.ஜ.க. விற்கு நல்லதாகப் போய்விட்டது.
மேலே சொல்லப்பட்டுள்ளவை உண்மையான காரணங்கள்தான் என்றாலும், இவை சில இடங்களில் வெற்றியைத் தீர்மானிப்பதற்கு உதவியிருக்கலாம். அல்லது, வாக்குகள் வித்தியாசத்தைக் கூட்டுவதற்குப் பயன்பட்டிருக்கலாம். அவ்வளவுதானே தவிர, இத்தனை பெரிய வெற்றிக்கு அவை மட்டுமே காரணம் என்று சொல்லி விட முடியாது. நான்கில் மூன்று பங்கு வெற்றியை ஒரு கட்சி பெற வேண்டும் என்றால் அது ஒரு அலை, சுனாமி அலை என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வளவு பெரிய அலை வீசுவதற்கு என்ன காரணம்?
உத்தரகாண்ட் மாநிலம் தனிப் போக்குடையது. உ.பி.யிலிருந்து பிரிக்கப்பட்டு, இந்தியாவின் 27ஆவது மாநிலமாக, 2000 நவம்பரில் அது உருவெடுத்தது. அங்கு பார்ப்பனர்களும், ராஜ் புத்திரர்களும் எண்ணிக்கையில் மிகுதி. வருண அதர்மம் அங்கு பெரும்பான்மையோரால் ஏற்கப்பட்ட ஒன்று. ஒரு கோடியே ஒரு லட்சம் மக்களை மட்டுமே கொண்டுள்ள சிறிய மாநிலமான உத்தர்காண்டில் இந்தி ஆட்சி மொழி, சமற்கிருதம் இணை ஆட்சிமொழி. பார்ப்பனர்களால் ‘தேவபூமி’ என்று அழைக்கப்படும் மாநிலமும் உத்த்ரகாண்ட்தான். எனவே அங்கு பா.ஜ.க. பெற்றுள்ள வெற்றியைப் புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும், அவ்வளவு பெரிய வெற்றிக்கு என்ன காரணம் என்று சிந்தித்தல் நல்லது.
சென்ற தேர்தலில் (2012), அங்கு காங்கிரஸ், பா.ஜ.க.இரண்டு கட்சிகளும் சமமான இடங்களை பெற்றிருந்தன. காங்கிரஸ் 32 இடங்களிலும், பா.ஜ.க. 31 இடங்களிலும் வென்றன.யாருக்கும் பெரும்பான்மை இல்லை. இறுதியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் 2016 மார்ச்சில் காங்கிரசின் 9 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்த்தினர். பிறகு ஆட்சி கலைக்கப்பட்டதும், உயர்நீதி மன்றம், உச்ச நீதி மன்றம் என்று வழக்குகள் நடந்ததும் நாம் அறிந்தவையே. இந்தக் குழப்பங்களும், காங்கிரஸ் கட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்ததற்குக் காரணங்களாக இருக்கலாம்.
உத்தர்காண்டில் இஸ்லாமியர்களின் வாக்குகள் குறைவு. ஆனால் உ.பி.யில் ஏறத்தாழ 21 விழுக்காடு இஸ்லாமியர்களின் வாக்குகள் உள்ளன. பிறகு ஏன் சமாஜ்வாதி, கங்கிரசுக்கு உ.பி.யில் இவ்வளவு பெரிய வீழ்ச்சி? முத்தலாக் விவகாரத்தில், இஸ்லாமியப் பெண்கள் ஏமாந்து, பா.ஜ.க வை நம்பியிருக்கக் கூடும் என்று ஒரு கருத்து சொல்லப்படுகிறது. அதனால் இஸ்லாமியப் பெண்களின் வாக்குகளில் ஒரு பகுதி அங்கு சென்றிருக்க வாய்ப்புள்ளது. அது குறித்த ஆய்வும் தேவைப்படுகின்றது..
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை ஏழை, எளிய மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. அது நடுத்தட்டு மக்களைத்தான் பெரிதும் பாதித்தது. ஆனால் நடுத்தட்டில் உள்ள இளைஞர்கள் பலர் இன்னும் மோடி மயக்கத்திலிருந்து விடுபடாமல் உள்ளனர் என்ற உண்மையையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.
அதே நேரத்தில் பஞ்சாபில் காங்கிரஸ் பெற்றுள்ள மகத்தான வெற்றியையும், பா.ஜ.க அடைந்துள்ள மகத்தான தோல்வியையும் அலட்சியப்படுத்த வேண்டியதில்லை.சென்ற முறை ஆளும் கட்சியாய் இருந்த பா.ஜ.க இப்போது அங்கு மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அகாலிதளக் கூட்டணிக்கு 18 இடங்கள் கிடைத்துள்ளன என்ற போதிலும், பா.ஜ.க பெற்றுள்ள இடங்கள் வெறும் மூன்று மட்டும்தான். கோவாவில் அக்கட்சி முதல் இடத்தை இழந்துள்ளது. எனவே, பா.ஜ.க. வின் வெற்றியினால் நாம் விரக்தி அடைந்து விடும் எல்லைக்கும் செல்ல வேண்டியதில்லை.
எனினும் சில பாடங்களைப் பல கட்சிகளும் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. முதலில் காங்கிரஸ், தன் உட்கட்சி சண்டையை ஓரளவுக்கேனும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். தங்களைத் தவிர மற்ற எல்லாக் கட்சிகளையும் ‘சம தூரத்தில்’ வைத்துப் பார்க்கும் ‘தனிப்பெரும் சித்தாந்தத்தை’ச் சற்று ஒதுக்கி வைத்து, பொதுவுடமைக் கட்சிகள், பொது எதிரியை வீழ்த்தும் குறிக்கோளை முன்னெடுக்க வேண்டும். பொது மக்களை மோடி மாயையிலிருந்து முற்றுமாக வெளிக்கொண்டு வர வேண்டும்.
இந்த உறுதிகளை எடுத்துக்கொண்டு அனைவரும் பணியாற்றவில்லை என்றால், காவிப்படையினர் நாட்டை மலிவு விலைக்கு, ‘கார்ப்பொரேட்’ முதலாளிகளிடம் விற்று விடுவார்கள். அம்பேத்கார் சொன்ன, ‘பார்ப்பனியம், முதலாளித்துவம்‘ ஆகிய இரு சமூகத் தீமைகளும் இங்கு சலங்கை கட்டி ஆடுவதை வேடிக்கை பார்ப்பதைத் தவிர நமக்கு வேறு வழியிருக்காது!
1960களின் முற்பகுதிவரை இந்தியாவில் பாரளுமன்ற ஜனநாயகம்(PD) என்றொன்று இருந்தது. முதலாளித்துவ ஜனநாயக சீர்திருத்தங்கள ை மேற்கொள்வதற்கு இது(PD) நிறையவே உதவியுள்ளது. ஆனால் 60களில் இந்திய முதலாளித்துவம் நிதிமூலதனத்தின் ஆதிக்கத்தின் கீழ் செல்லத் தொடங்கியது. உலகளாவியளவிலான சம்தர்ம கட்டுமானத்தின் வீழ்ச்சி இவ் நகர்வை வேகப்படுத்தியது . இந்திய முதலாளித்துவம் நிதிமூலதனத்தின் எடுப்பார் கைப்பிள்ளையானது . 1990வரையான கட்டம் இந்திய “தேசிய முதலாளித்துவம்? ?” காப்ரேட் முதலாளித்துவமாக மாறுவதற்கான மாறுநிலைக் கட்டமாகும். மன்மோகன் சிங்கின் புதிய பொருளாதரக் கொள்கையானது முழுமைபெற்ற காப்ரேட் முதலாளித்துவத்த ை தோற்றுவித்தது. காங்கிரஸ் கட்சியும், பிஜேபியும் இம் முதலாளித்துவத்த ை மூர்க்கமாக வளர்த்துவருகிறார்கள்.
பொருளாதார அரங்கினில் ஏற்பட்ட இந்த மாற்றம் அரசியல் அரங்கையும் பண்பாட்டரங்கையு ம் முற்றாக மாற்றிவிட்டது. அந்த மாற்றம் என்ன? ஒன்று: பாரளுமன்ற ஜனநாயகம் இருந்த இடத்தில் காப்ரேட் பணநாயகம் ஆட்சிக்கு வந்துள்ளது. பாரளுமன்றம் திருடர்கள் குகையாகவும், காப்ரேட்களால் இயக்கப்படும் அரசியல் கட்சிகளின் போலி வாய்த்தர்க்கக் களமாகவும் மாறியது. அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்கும் இடையே நிலவுகின்ற உறவானது வாக்குப் பொறுக்கித்தனமான தாகவும், மக்கள் சுவைகவர்(Populi st) அரசியலாகவும் தரந்தாழ்ந்துவிட ்டது. கட்சிகள் வள்ளல்களாவும் மக்கள் பிச்சைக்காரர்கள ாவும் ஆக்கப்பட்டுவிட் டார்கள். கோட்பாடு, கொள்கை, அரசியல் வேலைத்திட்டங்கள ், விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் ஆகிய இத்தியாதிகளெல்ல ம் வழக்கொழிந்து போய்விட்டன.
இரண்டு: ஆரம்பத்தில் பிரித்தானைய காலனியலாதிக்கத் தை எதிர்த்தும் அதன் பின்னர் ஏகாதிபத்தியங்கள ின் நவ-காலனியல் ஆக்கிரமிப்புக்க ளை எதிர்த்தும், டில்லியின் பார்ப்பனிய-பனிய ார்ஸ் ஆதிக்கத்தை எதிர்த்தும்(அரச ியல், பொருளாதார, சமூக ஆதிக்கங்கள்) நடந்த போராட்டங்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டன. அவற்றின் இடத்தில் நாடு முழுமையும் பல்தர குருதியினவாதங்க ள்(blood related racism)ஆதிக்கம் செலுத்து வருகின்றன. இவற்றின் இந்திய வடிவங்களாவன்: மத குருதியினவாதம், ஆண் குருதியினஅகங்கா ரவாதம், மரபுவழி(மனுநீதி ) குருதியின சாதியவாதம், நிற குருதியின அஹங்காரவாதம், மொழிவளிக் குருதியினவாதம், குருதியின வாதத்தை அடிப்படையாகக் கொண்ட நாட்டுப்பற்றுவா தம்(தேசபக்திவாத ம்), நவீன சாதியவாதம், ஆகியனவே அக்குருதியின வாதங்களாகும். நேரு, சுபாஸ் சந்திரபோஷ், பகவத் சிங், வாஞ்சிநாதன், வ.உ.சி, சுப்ரமணி சிவா, பாரதி, அரவிந்தர், விவின் சந்திரபால் ஆகிய ஏராளமானோரால் அடையாளப்படுத்தப ்பட்ட சுதந்திரத் தேசிய இயக்கம் தொலைந்து போய்விட்டது; அதுபோல், அயோத்திதாஸர், ஐயங்காளி, அம்பேத்கர் ஆகிய பெரும் படையினரால் அடையாளப்படுத்தப ்படும் பார்ப்பனிய எதிர்ப்பு இந்தியத் தேசியமும் தொலைந்துபோய்விட ்டது; அதே போல் “தேசிய முதலாளித்துவ” வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருந்த நிலபிரபுத்துவ விழுமியங்களை வீழ்த்துவதற்காக நாரண குருசாமி, ஈ.வே.ரா பெரியார், இரவீந்திரநாத் தாகூர், ஜோதிலால் பூலே போன்ற பெரும் படையணியால் நடத்தப்பட்டுவந் த பகுத்தறிவுப் போராட்டமும் தொலைந்து போய்விட்டது. இவ் அனைத்து போராட்ட அரங்குகளிலும் போராடிவந்த இடதுசாரிகளும் இன்று தொலைந்து போய்விட்டனரா?
இவற்றை சுருக்கமாகச் சொல்லப்போனால், இந்திய சமூகசிந்தனையும் , இந்திய அரசியலும், இந்திய பண்பாட்டு விழுமியங்களும் பண்பாட்டுத் தேசியவாதம், பணநாயகம் என்ற இரு சிமிழ்களுக்குள் அடைக்கப்பட்டுள் ளன. மக்கள் எப்போது இச்சிமிழுக்குள் இருந்து வெளிவருவதற்கான உணர்வு பூர்வமாக போராட முன்வருகிறார்கள ோ அதுதான் இந்தியப் புரட்சியின் பிரசவக் குரலாக இருக்கும்.
RSS feed for comments to this post