பிச்சைப் பாத்திரத்தை
நிறைப்பவள்
சின்னஞ்சிறு
குழந்தையொன்று
என்னைச்
சிநேகிதியாய் ஏற்றுக் கொண்டு
பிரியம் காட்டத் தொடங்கிய
அற்புத நொடியில்தான்,
குழந்தையிடம்
அட்சயப் பாத்திரத்தையும்
என்னிடம்
பிச்சைப் பாத்திரத்தையும்
புன்னகையோடு
வழங்கிச் சென்றிருந்தார் கடவுள்
Pin It