1
பனியாலானதுன்
விழிப்பு

பனியாலானதுன்
புன்னகை

பனியாலானதுன்
சொற்கள்

பனியாலானதுன்
வாழ்வு

2
புல்லிதழ்
நுனித் திரள்
பனிப் புன்னகை
காற்றின்
மென் சுழிப்பில்
தீண்டித் தெறித்து
மண் மறையுங் கணத்தில்
கார்த்திகை.
நீ
ஆனாலும்
அய்ப்பசிக்குக் குறைவில்லை.

3

இரவு பகல்
எதிரெதிரே
நிலவுத் தாயத்தில்
துவக்குகிறாய்
சொற்
பருவச் சூதினை.
விரி வான்
நிறைத்துக் கிடக்கிறது
உன்னிடம் மட்டுமே
வெட்டுப்பட்ட
பனியூறிய
நட்சத்திரங்கள்.

4

பனியிதழ்
ருசிக்க
 பகற்கம்பளி
விலக்கும் இரவுக்கு
பறக்கும் முத்தங்களைப்
பரிசளிக்கிறாய்.
உன்
முத்த
(வாழ்வின்)
மகத்துவத்தை
மார்கழிக்கும்
கொஞ்சம்
விட்டு
வை

Pin It