அடையாளங்களைத் தொலைத்துவிட்டதாக
அறிக்கையொன்றினை
வெளியிட்டிருந்தானவன்
அறிக்கைகளின் நெகிழ்வும் நொய்மையும்
அறியாதவனல்லன் அவன்

காலங்களில் சுழல்முறை நிகழ்கிறது
கனத்த அடையாங்களூடே
அடையாளங்களற்றவன் என அவன்
நம்பிக்கைகளில் பொய்க்கும்படி
அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறோம்
நாம்
சில நேரங்களின் குறு பொழுதுகளில்
நம்மோடு அவனும்

- ந.செந்தில்குமார்

Pin It