நீ
வரும் வழியில்
பூத்தூவக் காத்திருக்கிறேன்
இலைகளின் நுனியில்
நீர் சுமந்து
தென்றலே...
நீ வருவாயா?
நான் பூப்பதற்காக
நீ பூத்தூவுகிறாயே
வானமே நீ வாழியவே!

வசந்தத்தின் வருகைக்காக
என் வீட்டுத் தருக்கள்
சருகுகளை பரிசளிக்கிறது!

மானிடரின் வாழ்க்கைக்கு
நானே ஊடகம்!

Pin It