கார்முகில் தன்னைச் சூழ
காற்றோடு கிளம்பிய உறவினராம்
இடிமின்னலைத் துணையாய்க் கொண்டு
இமைப்பொழுதில் பூமி இறங்கி
இன்னல்கள்பல நேர்த்து விட்டு
இன்பத்தையும் கொடுக்கின்ற - மழையே!
உனைக் காணும்போது தோன்றுகின்ற
உற்சாகத்தை எழுத வார்த்தையின்றி
இன்ப வெள்ளத்தில் மூழ்கி
ரணகளம் ஆகின்றது என் இதயமே!
Pin It