தோட்டம் குறித்த சிந்தனையில் மூழ்கிப்போகிறேன்
பூக்கள் குறித்த கவிதைகளுடன்
உடன் வருகிறான் ஒருவன்
காம்பின் காயங்களோடு
தீய்ந்து நிற்கிறேன்.
திடுக்கிட்டுப் போனவன்
கவிதைகளைக் கொளுத்திப்
பூக்களை விடுதலை செய்கிறான்
தீய்ந்த கவிதை நெடியோடு
பூக்கள் நிலம் சேர்ந்து
மரணித்துக்கிடக்கின்றன.
மனித இயலாமை குறித்துத்
தட்டுப்படுகின்றன சோகவிளிம்புகள்.

- மகிழ்நன்

Pin It