கோபுர கலசத்தின் உச்சியில்
கடவுளின் கடவுளாய்
அமர்ந்திருக்கிறதோர் பறவை
கடவுளை
ஆசீர்வதித்ததின்
அடையாளமாய் பிரசாதமென
எச்சமிட்டு பறக்கிறது
மின் கம்பங்களின் எண்ணிக்கைக்கு
இணையாகக்கூட
மரங்கள் நடப்படாத நகரத்தில்
பறவைகள் இறங்குவதில்லை
பறவைகளின் சிறகசைவில்
சுழலும் காற்றில் மாசு நீங்கக்கூடும்
தங்க நாற்கர சாலைகளால்
இணைக்கப்படும் இந்நகரத்தின்
பழைய வரைபடத்தில்
பறவைகள்
இரையருந்திப் பறக்கும்
மாபெரும் மண் கிண்ணத்தைப்போல்
குளமொன்று இருந்தது
பெரும் மழைக்காலங்களில்
குளம்தேடி நீர்சூழ
நகராத காங்கிரிட் கப்பல்களாய்
மிதக்கும் குடியிருப்புகள்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- தென்பாண்டியன்
- பிரிவு: புதுவிசை - ஆகஸ்ட் 2005