கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை
மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி
ஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்ற
பேராக்கி வாழ்ந்த பெருமை அவன்பெற்றான்;
மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சிநெய்தல்
நானிலத்தைக் கண்டபெரும் நாகரிக மாந்தனவன்;
கோட்டைச் சுவரெடுத்துக் கூடும் படையமைத்து
நாட்டைப் புரந்து நலந்தந்தான்; நாளும்
குடிபழி தூற்றாது கோலோச்சி நல்ல
படியரசு செய்து பயன்தந்து பேர்கொண்டான்;
... ... ...
வாழ்ந்த தமிழினத்தின் வாய்த்த வரலாறு
சூழ்ந்து சொலக்கருதின் சொல்லில் அடங்காது
நாகரிகத் தொட்டில் நமது திருநாடு
வீழ்ந்த வரலாறு விண்டால் மனம்நோகும்;
முச்சங்கம் கண்டு மொழிவளர்த்தோன் எப்பகையின்
அச்சங்க ளின்றி அமைதியில் நூல்படைத்தோன்
ஆங்கிலத்தால் ஆரியத்தால் ஆதிக்க இந்தியினால்
தீங்கு வரக்கண்டு திண்டாடி நிற்கின்றான்
... ... ...
காசுக்கும் மாசுக்கும் கண்ட படிஎழுதும்;
ஆசைக்குட் பட்டே அலைகின்றான் பாவிமகன்;
நல்ல அரசியலில் நஞ்சைக் கலந்துவிட்டான்;
சொல்லும் மொழியெல்லாம் சூதன்றி வேறில்லை;
சூதாட் டரசியலில் சொக்கித் திரிபவரைச்
சூதாட்டக் காயாக்கிச் சொக்கட்டான் ஆடுகிறான்;
பண்பாட் டரசியலைப் பாழடித்துச் சாகடித்துத்
தன்பாட்டில் மட்டும் தனியார்வம் காட்டுகின்றான்;
கண்டுமுதல் காணும் களமாக்கி அச்செயலைத்
தொண்டென்றும் சொல்லித் தொலைக்கின்றான் மக்களிடம்;
. .. ... ...
விண்முட்ட வாழ்ந்து வியந்த வரலாறு
மண்முட்டச் சாய்ந்து மடிவதோ? பீடுடுத்து
வாழ்ந்த வரலாறு வீழ்ந்து மறைவதோ?
தாழ்ந்து கெடுதல் தகுமோ? எனவெழுந்து
பண்டை வரலாற்றைப் பாரில் நிலைநிறுத்தி
மண்டும் புகழ்சேர்க்க வந்தோர் சிலராவர்;
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- முடியரசன்
- பிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஜனவரி 16 - 2015