வழிகாட்டும் இல்வா போராட்டம்

உலகெங்கிலும் இன்று நாம் எதிர்கொள்கிற சூழலியல் சிக்கல்களான காலநிலை மாற்றம், நீர் மாசு, காற்று மாசு, நிலப்பயன்பாட்டு மாற்றம் போன்ற வற்றிக்கு அடிப்படைக் காரணமாகத் திகழ்வது இலாப வெறி முதலாளிய பொருளுற்பத்தி முறையாகும்.

இவ்வுற்பத்தி முறையானது புறச்சூழலுக்கு மட்டும் கேடு விளைவிக்கவில்லை. மாறாக உடைமை பறிப்பு, வேலை உத்தரவாதமின்மை,ஊதியம் குறைப்பு,வேலை நேர நீட்டிப்பு போன்றவற்றால் சமூகத்தின் பொருளாதார கட்டமைப்பிலும் அது பெரும் சமூக விளைவு களை ஏற்படுத்துகிறது. எங்கெல்சின் சொற்களில் சொல்வதென்றால் ”இன்றைய சமூகப் பகைமைகள் அனைத்தின் வித்து (இதில்) அடங்கியிருக்கிறது’’. ஆகவே நாம் இச்சிக்கலை சமூகச்சூழலியல் சிக்கலாகத் தான் அணுகவேண்டியுள்ளது.

environment- 600தொழிலாளி வர்க்கமும் சூழலியல் சிக்கல்களும்:-

இந்நிலையில்,தங்கள் சுகாதார நலன்களுக்கானப் போராட்டங்களைப் பாதிக்கப்பட்ட தொழிலாளி வர்க்கத்தினரே முன்னெடுத்தாலும் வேலை முக்கியமா? சுகாதாரம் முக்கியமா? எனும் ஒரே வார்த்தையில் முதலாளி வர்க்கத்தினர் தொழிலாளர்களைப் பணிய வைக்கின்றனர். வேலையில்லாமல் பசியால் சாவதை விட, ஆலைக் கழிவுகளால் ஏற்படும் நோயை எதிர்கொள்வதே மேல் என்ற நிலைக்கு தொழிலாளர் களைத் தள்ளுகின்றனர்.

தொழில்யுக வரலாறு நெடுகிலும் இந்நிலையே உல கெங்கிலும் நிலவுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு இத்தாலி நாட்டிலுள்ள டரண்டோவில், தொழிலாளிகளுக்கும், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் சுகாதாரத் திற்கும் பெரும்கேடு விளைவிக்கிற இல்வா தொழிற் சாலை நிர்வாகத்திற்கு எதிராக நடத்தும் போராட்டம் கவனிக்கத் தக்கது. தொழிற்சாலையை மூடக்கோரி, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இதை முதலாளித்துவ மரபின் படி எதிர் கொள்ள ஆலை முதலாளி முடிவு செய்தார். வழக்கமாக முதலாளித்துவ நலன்களுக்கு முட்டுக்கொடுக்கும் தொழிலாளர் சங்கத்தினரோடு கூட்டுச்சேர்ந்து கொண்டு ஆலையை மூடுவதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கச் செய்கிறார். கடந்தகால உத்திகள் முதலில் வேலை செய்தாலும் சிறிது நாளில் காட்சி மாறுகிறது.

முதலாளி வர்க்கத்தின் வழக்கமான சதியை முறியடிக்கும் முயற்சியாக, அந்த ஆலையைச் சேர்ந்த சில தொழிலாளர்களும் பிற தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்களும் சுற்றுவட்டார மக்களும் இளைஞர்களும் வேலையற்றோரும் ஒரு சிறு குழுவாக இணைந்து வேலையா? சுகாதா ரமா? என்ற மிரட்டலை தைரியமாக மறுத்து மாற்று வருமான உத்திரவாதத்திற்கான கோரிக்கையை முன்வைத்து உறுதியாகப் போராடுகிறார்கள்.

அவர்களின் நோக்கம் பல தொழிலாளர்களின் உயிரைப் பலி வாங்குகிற ஆலையை மூட வேண் டும். அதேசமயம் அத் தொழிற் சாலையில் பணி செய்யும் தொழிலாளர்களின் வேலைக்கும் மறு உத்தரவாதம் வழங்கவேண்டும் என்பதாக இருந்தது. இப்போராட்டம் தனித் தன்மையுடையது. முதலாளிவர்க்கத்திற்கு மரணஅடி கொடுக்கச் செய்வது. இத்தாலியில் துவங்கிய இப் புதிய போராட்ட வடிவத்தை தமிழகச் சூழலுக்கு அறிமுகம் செய்யும் முயற்சியாகவே http://libcom.org இணையத்தளத்தில் வெளியான “Refuse the false choice “health or jobs”, fight for a guaranteed income! - The example of ILVA in Taranto” என்ற கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு இங்கு வெளி வருகிறது.

இம்முயற்சிக்கு மற்றுமொரு காரணமும் உள்ளது. அது இத்தாலி யின் இல்வா ஆலைக்கும் இந்தியாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு மான ஒற்றுமை. ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படுத்தப்பட்ட பெரும் சுகாதாரக்கேடு, ஆலை குறித்தான நீதிமன்ற உத்தரவு, அரசின் தலையீடு, ஆலை முதலா ளியின் பின்புலத்தில் முடுக்கிவிடப் பட்ட ஆலையை மூடுவதற்கு எதி ரான போராட்டம், பிறகு நீதி மன்றத்தின் பல்டி, அரசின் பல்டி என இங்கு நாம் பார்த்த அனைத்து நிகழ்வுகளும் இல்வா நிகழ்விற்கு மிக அணுக்கமாகத் தெரிகிறது.

வேலையா? சுகாதாரமா? என்ற மிரட்டலை நிராகரி! வருமான உத்திர வாதத்திற்காகப் போராடு!

இல்வா (ILVA) எஃகு ஆலையானது இத்தாலி நாட்டின் மிகப் பெரிய எஃகு ஆலைகளில் ஒன்றாகும். ரிவா (RIVA) குழுமத்திற்குச் சொந்தமான இவ்வாலையானது, இரண்டு லட்சம் மக்கள் வசிக்கும் டரண்டோ நகரின் மையத்தில் அமைத்துள்ளது. 1961 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இவ்வாலையா னது, அந்நகருக்கு கடும் சுற்றுச் சூழல் மாசை ஏற்படுத்தும் மிக மோசமான ஆலையாகும். 11,500தொழிலாளர்களுக்கு நேரடியா கவும் ஒப்பந்தத்தொழில் மூலம் 9500தொழிலாளர்களுக்கு மறைமுகமா கவும் இவ்வாலை வேலை வழங்கு கிறது. ஆண்டிற்கு இருபது லட்சம் டன் மூலப்பொருளை எட்டு லட்சம் டன் இரும்பாக மாற்றுவது இத்தொழிற்சாலையின் உற்பத்திப் பணியாகும்.

ஆனாலும் இவ்வாலையானது, “டையாக்சின்’’ (Dioxine) போன்ற கடும் வேதியியல் நச்சுகளைப் பரப்பி சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இவ்வாலையின் உற்பத்தி நிகழ் முறையில் வெளியேற்றப்படும் இவ்வேதியல் நச்சானது, அங்கு பணி புரியும் தொழிலாளர்களுக்கும் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் புற்று நோயை ஏற்படுத்தும் வாய்ப்பினை அதிகரிக்கச் செய்துள்ளது. இதன் பேரில் இவ்வாலை விவகாரம், டரண்டோ நீதிமன்றத் திற்குச் சென்றது.

நீதிமன்றம் அமைத்த உயர்மட்ட விசாரணைக் குழு அளித்த அறிக்கையும் ஆலை யால் ஏற்படுத்தப்பட்ட கேடுகளை உறுதி செய்தது. இறுதியில் இல்வா நிறுவனத்தை கடுமையாக விமர் சித்து, அதன் ஊது உலையை மூடவேண்டும் என 2012 ஜூலை 26 இல் நீதிமன்றம் உத்தரவிட் டது. சென்ற பதிமூன்று ஆண்டுகளில் 386க்கும் மேற்பட்ட மக்கள் இவ் வாலை ஏற்படுத்திய சூழல் கேட்டால் புற்றுநோய் பாதிப்பிற்குள்ளா கிப் பலியானதாக நீதிமன்றத் தீர்ப் பில் கூறப்பட்டது. ஆனாலும் இவ் வாலையால் ஏற்பட்ட உயிரிழப்பும் சூழல் கேடும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியதை விட மிக அதிகமாக இருந்தது என்பதே உண்மை. இறுதியில் நீதிமன்றத்தின் உத்தர வின் பேரில் 2011 ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஆலை மூடப்பட்டது.

உடனே,நீதிமன்றத்தின் இந் நடவடிக்கைக்கு எதிரான முயற்சி களில் ஆலை முதலாளி தீவிரம் காட்டத் தொடங்கினார். அதன் முதல் கட்டமாக இத்தாலி முழுவ தும் உள்ள தனது அனைத்து நிறு வனங்களையும் மூடப் போவதாக அக்குழுமம் அறிவிப்பொன்றை வெளியிட்டது. அது மட்டுமின்றி, இப்பகுதியின் இதயமாக விளங்கும் இவ்வுருக் காலை மூடப்பட்டால் அதில் பணிபுரியும் தொழிலாளர் கள் அனைவரின் வேலையும் பறிபோகும், ஆகவே ஆலையை மூடு வதற்கு எதிரான போராட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று கூறி தொழிலாளர் சங்கத் தினரையும் இடதுசாரிக் கட்சிகளையும் ஒன்று திரட்டியது. ஆலையை மூடுவதற்கு எதிரான போராட்டத்தை அவர்களைக் கொண்டே முன்னெடுக்க வைத்தது.

ஐக்கிய முன்னணி, வேலை நிறுத்தத்திற்கும் ஊர்வலத்திற்கும் அழைப்பு விடுத்தது. ஆலை அதிபர் கள் தங்களது அனைத்து நிர்வாக ஊழியர்களையும் போராட்டக்களத்திற்கு அனுப்பினர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை, போராட்டத்தை சிதறாமல் பார்த் துக்கொள்வதாகும்!. எங்கு பார்த் தாலும் வேலை நிறுத்தமும் ஊர்வலமும் நடந்தன.

இவையெல்லாம் முதலாளித்து வத்தைக் காப்பதில் முழுமையான வெற்றி கிட்டியதோ என்று எண்ணுமளவிற்கு இருந்தது! ஆனால் அதன்பின் நடந்ததென்னவோ முற்றிலும் நேர்மாறான கதையாகிப் போனது.

அதாவது, நடந்து கொண்டிருக் கின்ற முதலாளித்துவ ஆதரவுப் போராட்டத்தினை எதிர்க்கும் விதத்திலான போராட்டக்குழு வொன்று புதிதாக உருவானது. இல்வா எஃகு ஆலையைச் சேர்ந்த சில தொழிலாளர்களும், வேறு தொழிற்சாலையைச் சேர்ந்த சில தொழிலாளர்களும் அவர்களுக்கு எதிராக முதலில் அணிதிரண்டனர். அதன் பின் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களும், இளைஞர்களும், வேலையற்றோரும் இப்புதுப் போராட்டக் குழுவுடன் ஒன்று சேர்ந்தார்கள்.

அவர்களுக்குள் ளேயே ஒரு ஒழுங்கை ஏற்படுத்திக் கொண்டுத் தங்களைப் பலப்படுத் திக் கொண்டனர். “டரண் டோவில் வசிக்கும் தொழிலாளர்கள்- குடும்பத்தினருக்கான செயற் குழு’’ என்று முதலிலும், பின்னர் “சுயமாகவும், சுதந்திரமாவும் சிந்திக்கும் குடும்பத் தினர்- தொழிலாளர்களின் செயற் குழு’’ என்ற பெயரில் களம் இறங்கிப் போராடத் தொடங்கினர்.

“சுகாதாரக்கேட்டை உருவாக்கியது பெரும் குற்றம்; அதற்கான விலையை அரசும் ரிவா குழுமமே வழங்க வேண்டும்’’ என இப்போராட்டக்குழு முழங்கியது. இக்கோரிக்கை அடங்கிய துண்டறிக் கைகளை, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரிடத்திலும் பரப்பினர்.

அதன் பின், 2012 ஆகஸ்டு 2 இல் நடைபெற இருந்த வர்த்தக சங்க ஊர்வலத்தில், வேலையா? சுகாதாரமா? இரண்டில் எது வேண்டும் என்கிற முதலாளிகளின் மிரட்டலை எதிர்ப்பது என்ற நிலைப் பாட்டை உறுதியாக வற்புறுத்த இப் போராட்டக்குழு முடிவு செய்தது.

முன்னதாக அவர்கள் ஒரு மூன்று சக்கர வாகனத்தைத் தேர்வு செய்கின்றனர். பின்னர் ஒரு சின்னத் தையும் தேர்வு செய்து, அதை அவ் வாகனத்தின் பின்புறத்தில் வைத்தவாறு,திட்டப்படி தொழில் வர்த்தக சங்க ஊர்வலத்தில் நுழைகிறார்கள். பின் அங்கிருந்த மேடையில் ஏறி தங்களின் கோரிக்கையைத் தெளி வாக விளக்கினர்.

பொதுமக்களின் முன்பாக அவர்கள் செய்த இவ்வித முயற்சி கள் பெரிதும் வெற்றி பெற்றது. குறிப்பாக வர்த்தக சங்கத்திடமும் இடது சாரி முகாம்களிடமும் முரண்பட்டு இருந்தவர்கள், இவர்களுடன் இணையத் தொடங்கினர். மேலும் தொழிலாளர் சங்கமானது, ‘முதலாளி குவிக்கும் லாபத்தை தக்க வைப்பதில்தான் முனைப்பு காட்டு கிறது; தொழிலாளிகளின் தேவை களில், நலன்களில் கரிசனம் கொள் வதில்லை’ என்று அவர்கள் தொழி லாளர் சங்கத்தினைக் காட்டமாக விமர்சித்தனர்.

சூழ்நிலையை சற்றே தணிக்கும் பொருட்டு, ஆகஸ்டு 17 ஆம் நாள் இப்பிரச்சினையில் அரசு தலை யிடுகிறது.அதன் முதல்கட்டமாக டரண்டோ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பரிசீலித்த அரசு, இறுதியில் முதலாளியின் நலனைக் காக்கும் விதத்திலான நிலைப்பாட்டை எடுக்கிறது. அதாவது தொழிற் சாலையை மூடக்கூடாது என அரசுத்தரப்பு கோரியது!

மறுபுறம் இச்சிக்கல் தீவிர மடைந்து நாட்டின் முக்கியத் தலைப்புச் செய்தியாக மாறுவதற்கு முன்பாக சிக்கலை மடைமாற்றம் செய்யும் முயற்சிகளில் ஆலை நிர்வாகம் இறங்கியது. அதாவது ஆலைக் கழிவுகளைக் கட்டுப்படுத் தும் நோக்கிலான சூழல் பாது காப்புத் திட்டங்களுக்கு 146 மில்லியன் யூரோவை (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 122கோடி ரூபாய்) இல்வா தொழிற்சாலையில் முதலீடு செய்ய இருப்பதாக அறிவிப் பொன்றை விடுக்கிறார்கள்.

ஆனால் சுற்றுச் சூழலுக்கு ஆபத்தை விளை விக்காமலும் சூழலுக்கு அணுக்கமாகவும் இவ்வாலை செயல்பட வேண்டு மென்றால், இத்தொகையுடன் கூடுதலாக 5முதல் 8 பில்லியன் யூரோக்கள் தேவைப்படும். மேலும் இதற்கு முந்தைய ஆண்டுகளில் சுற்றுச் சூழலுக்கும் மனித உயிர்களுக்கும் இவ்வாலையால் ஏற்படுத்தப்பட்ட கேட்டை அரசும், ஆலை நிர்வாக மும் சிறிதளவு கூட கவனத்தில் கொள்ளவில்லை .

இந்நிலையில் பையோம் (FIOM) என்று சுருக்கமாக அழைக்கப்படும் உலோக ஆலைத் தொழிலாளர் சங்கத்தினர் உதிரிகளாக இயங்கும் தீவிர இடதுசாரி குழுக்களை ஒன்றி ணைக்கும் வேலையில் இறங்குகின்றனர். ஒரு கட்டத்தில் நாட்டின் மற்ற சங்கத்திடமிருந்து தனியாகப் பிரிந்து வந்த இவர்கள் “வேலையும் சுகாதாரமும்” என்ற தங்கள் கோரிக்கையை வலுவாக முன்னெடுத்தனர் .

ஆனாலும்,இல்வா ஆலைக்கு எதி ரான தெளிவான கோரிக்கையை முன்வைத்து நடைபெறும் இவ் வனைத்துப் போராட்டங்களும் ஆலையை இழுத்து மூடும் கட்டத் திற்கு நகர்த்திச்செல்வதாகத் தெரிய வில்லை. இத்தாலியின் ஸ்டாலினியக் கோட்டையான ரேகியோ எமிலியா பகுதியைச் சேர்ந்தவரும், உலோக ஆலைத் தொழிலாளர் சங்கத்தின் மேனாள் பொதுச் செய லாளருமான மௌரிசோ லந்தினி இவ்வாறு சொல்கிறார் “எஃகு அனைவருக்கும் சேவைபுரிகிறது”!

போராட்டக் குழுவினர் பல் வேறு இடங்களில் தொடர்ச்சி யாக சந்தித்து வந்தனர். ஆகஸ்டு 17 தேதியன்று பெரும் பேரணிகளை நடத்த முடிவு செய்து அனைவரை யும் அதில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர். (இத்தாலி யின்) மோன்ட்டி பேரணிக்கு அரசு உடனடியாக தடை விதித்தது. ஆனாலும் அரசின் தடையை மீறி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் தொழிலாளர்களும் பேரணியில் பங்கேற்றுப் போராட் டத்திற்கு வலுசேர்த்தனர். இதற் கடுத்து ஆகஸ்டு 31 ஆம் தேதியன்று போராட்டக்குழுவைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழி லாளார்கள் ஆலையை மூடக்கோரி தொழிற்சாலை வளாகத்தை முற்று கையிட்டனர். போராட்டம் இன்னும் தொடர்கிறது.

போராட்டக் குழுவினரின் ஒரே கோரிக்கை “தொழிற்சாலையை உடனே இழுத்து மூடு. வேலையிழக்கும் தொழிலார்களின் வருமானத்திற்கு மறு உத்திரவாதம் கொடு”

கவனிக்க வேண்டியது என்ன?

இக்கூட்டமைவின் பலம் என்ன? முதலில் முப்பது பேராக எதிர்த்த வர்கள் நாள்பட நாள்பட 200,500, 1000,2000 என்று பெருகினார் கள்.தொழிற்சாலைக்கு உள்ளே பணிபுரியும் ஆயிரம் தொழிலாளர்கள் இக்கூட்டமைப்பிற்கு தங்கள் ஆதரவைத் தந்தனர்.அது மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 10 விழுக்காடு என்றாலும் பெரும்பாலான தொழிலாளர்கள் வர்த்தக சங்கம் எடுக்கும் முடிவிற்காகக் காத்திருந்தனர்.

பையோம் (FIOM) தொழி லாளர்கள் சங்கத்தினர்,இல்வா தொழிற்சாலைக்கு ஆதரவாக எடுத்த முடிவிற்காகவும், போராட் டக்குழுவின் (“சுயமாகவும், சுதந்திர மாவும் சிந்திக்கும் குடும்பத்தினர்- தொழிலாளர்களின் செயற்குழு”) கோரிக்கைக்கு ஆதரவு தராத காரணத்திற்காகவும் சிநிமிலிஐ கடுமை யாகச் சாடியது. இதனால் வர்த்தக சங்கம் இறுதியில் உடைந் தது.

அரசின் ஆதரவு இருப்பதால், தொழிற்சாலையை மூடும் நிலை வராது என்பதில் முதலாளி மிகத் தெளிவாக இருந்தார். மேலும் அர சானது மிக சாமர்த்தியமாக நீதித் துறையின் தீர்ப்பை வேறு வகையில் சுற்றிவிடுவதிலும் பிரச்சினையை மீண்டும் நீர்த்துப்போகச் செய்வதி லும் கிடப்பில் போடுவதிலும் தீவிரம் காட்டியது. அதே நேரத்தில் முதலில் இல்வா ஆலையை மூட உத்தரவிட்ட நீதி மன்றம் பின்னர் அப்படியே பல்டியடித்து ஆலையை மூடாமல் சூழல் பாதுகாப்பு நடவடிக்கையை மேற் கொள்ள பரிந்து ரைத்தது. இந்நிலையில் செயற்குழு வானது தனது பலத்தை மட்டும் நம்பியே களத்தில் உள்ளது. நீதி மன்றங்களின் பேரில் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் இவ்விடயத்தின் இறுதியில் பெரும் ஏமாற்ற மடைந்தனர்.

இச்செயற்குழு, பல்வேறு தரப்பினரின் குரலாகவே ஒலித்தது. எஃகு ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்களும், பிற தொழிற் சாலைகளில் பணிபுரிந்த தொழிலாளர்களும் வேலை இல்லாதோரும், ஒப்பந்த தொழிலாளர்களும் ஓய்வூதியம் பெறுவோர்களும் இப்போராட்டத்தில் பரவலாகப் பங்கெடுத்தனர்.

நகரின் சுகாதாரத்தைப் பாதுகாக் கும் பொருட்டும், தொழிலாளிக ளின் வருமானத்திற்கு உத்தரவாதம் வழங்கக்கோரியும், அந்நகரில் வசிக்கும் மக்களும் நடுத்தரக் குடும்பத்தைச்சேர்ந்த தொழிலா ளர்களும் இச்செயற்குழுவில் இணைந்தனர்.

இழுபறி நிலை நீடித்தாலும் கடந்த ஒன்றறை ஆண்டுகளுக்கும் மேலாக அப்போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அங்கு உருவாகும் அரசியல் ஆதரவைப் பொருத்து அதன் வெற்றி - தோல்வி ஏற்படும்.

ஆனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் உள்ளிட்டு சூழலைக் கெடுக்கும் பிற ஆலைக்களுக்கு எதிரான போராட்டங்களும் பெற வேண்டிய படிப்பி னைகள் இதில் உள்ளன.

தொழிலாளிகளும் தொழிற் சங்கத்தினரும் தங்களது எதிர் காலம் ஆலையின் வாழ்வோடு இணைந்திருப்பதாகக் கருதிக் கொண்டு, சூழல் சீர்குலைப்பிற்குப் துணைப்போகக் கூடாது என்பதே இவற்றுள் முக்கியமானது.

ஆலை அமைந்துள்ள பகுதியில் பிற வர்த்தக நிறுவனங்கள் சூழல் அழிப்புக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் இணைவதும் அங்கு பணிபுரியும் தொழிலாளர் களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் மாற்றுக் கோரிக்கைகளுக்கு துணை நிற்பதும் அவசியம் என்பது அடுத்து பெறும் படிப்பினை ஆகும்.

சூழலியல் போராட்டத்தில் தொழிலாளி வர்க்கம் எவ்வாறு இணைய முடியும் என்பதற்கு இல்வா போராட்டம் ஓர் எடுத்துக் காட்டு ஆகும்.

Pin It