உலகம் முழுவதும் மான்சாண்டோ குழும எதிர்ப்பு நாள் கடைபிடிப்பதையொட்டி, 12.10.2013 அன்று திருவாரூரில் உழவர் பேரணியும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தன. ‘மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்திற்கு மாறான தென்னகம்’ என்ற அமைப்பு இதற்கு ஏற்பாடு செய்தது. பல்வேறு உழவர் அமைப்புகள் இதில் கலந்து கொண்டன.

திருவாரூர் தொடர்வண்டி நிலையத்தில் தொடங் கிய பேரணிக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திரு. வெ.துரை ராசன் தலைமை தாங்கினார். விவசாய சங்கங்களின் தலைவர்களான திரு. மு.சேரன், திரு. சி.பாலகிருஷ் ணன், திரு. பா.மணிமொழியன், திரு. ஆர்.பழனிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழர் இயற்கை உழவர் இயக்கத்தின் மாநில இணைச் செயலாளர் திரு. இரா.செயராமன் இப்பேரணிக்கான ஒருங்கி ணைப்புப் பணிகளைச் செய்தார். கண்டன ஆர்ப் பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி திரு. கே.சுரேஷ் கண்ணா, திரு. காவிரி தனபாலன் ஆகியோர் பேசினர்.

திருவாரூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள அஞ்சலகத்தின் எதிரே நிறைவுற்ற பேரணியின் முடிவில், மான் சாண்டோ எதிர்ப்புக் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில், இயற்கை வேளாண் அறிவியலாளர் முனைவர் கோ.நம்மாழ்வார், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கி ணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் ஆகியோர் உரையாற்றினர்.

முனைவர் கோ.நம்மாழ்வார் அவர்கள் உரை யாற்றும் போது, மரபீனி மாற்று விதைகளைப் பயன் படுத்தி சாகுபடி செய்தால் அந்தப் பயிர்களைப் பிடுங்கி அழிப்போம் என்றும் மான்சாண்டோ உருவ பொம்மையை கொளுத்துவோம் என்றும் எச்சரித்தார்.

தோழர் பெ.மணியரசன் பேசும் போது பின்வருமாறு குறிப்பிட்டார்.

”நகரங்களிலே உள்ள பழமுதிர்ச்சோலைகளில் பூசணிக்காய் அளவிற்கு கத்தரிக்காய் பெரிதாக இருக்கி றது. இந்த வகை கத்திரிக்காய் மான்சாண்டோ வின் மரபீனி மாற்று கத்திரிக்காயாகும். மரபீனி மாற்று பி.ட்டி. பருத்தி சாகுபடி தான் நூற்றுக்கு 80 விழுக் காடு நடைபெறுகிறது.

மரபீனி மாற்றுப் பயிர் ஒழுங் காற்றுச் சட்டம் மசோதா நிலையி லேயே இருக்கிறது. அதை சட்ட மாக நிறைவேற்ற இந்தியாவெங்கும் உழவர்கள் எதிர்ப்புத் தெரிவித் தனர். நாடாளுமன்றத்திலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனால் அது பற்றி ஆய்வு செய்து அறிக்கை தர சி.பி.எம். நாடாளு மன்ற உறுப்பினர் நிலோத்பல் பாசு தலைமையில் ஒரு தேர்வுக் குழு (ஷிமீறீமீநீt சிஷீனீனீவீtமீமீ) வை அமைத்து அதனுடைய ஆய்வுக்கு விட்டார் கள்.

அக்குழு இந்தியாவெங்கும் சென்று களஆய்வு நடத்தி கருத்து கள் கேட்டு, இறுதி அறிக்கை தயார் செய்தது. அந்த அறிக்கையில் ”மர பீனி மாற்று விதைகளைப் பயன் படுத்தினால் விளைச்சல் பாதிக்கப் படும், அதனால் உருவாகும் காய் கறிகளையும் தானியங்களையும் உண்பவர்களுக்கு நோய்கள் ஏற் படும். அதன் தாவரங்களை உண் ணும் பிராணிகள் நோய் வாய்ப் படும். மனிதர்களும் விலங்கு களும் மலட்டுத்தன்மை அடைவர். அப் பயிர்கள் நச்சுத்தன்மை வாய்ந் தவை’’ என்று கூறி மரபீனி மாற் றுப் பயிர்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் பல் வகைப் பயிர்களை பயிரிட்டு உயிர்ப் பன்மத் திற்கு பாதுகாப்பு அளிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அவ் வறிக்கை கூறியது.

அவ்வறிக்கை அரசுக்குத் தாக்கல் செய்யப்பட்ட பின் மேற்படி மசோ தா கிடப்பில் போடப் பட்டுள்ளது. அது சட்டமாக வில்லை.

ஆனால், கொல்லைப்புற வழி களில் இந்திய அரசு மான் சாண் டோ, சின்ஜென்டா போன்ற பன் னாட்டு நிறுவனங்களின் மரபீனி மாற்று விதைகளை இந்தியாவிற் குள் அனுமதித்திருக்கிறது. தமிழ் நாட்டிற்குள்ளும் அனுமதித்திருக் கிறது. இந்தியாவின் பிரதமர் மன் மோகன் சிங், ஆளுங்கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆகி யோர் மான்சாண்டோ நிறுவனத் தின் கங்காணிகளாக வேலை செய்கி றார்கள். இவர்கள் நாடாளு மன்றத் தேர்வுக் குழு அளித்த அறிக்கையை நடைமுறையில் செல்லாக் காசாக்கியுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி நடந்த போதும் சரி, இப்பொழுது அண்ணா தி.மு.க. ஆட்சி நடக்கும் போதும் சரி மான்சாண்டோவின் மரபீனி மாற்று விதைகளை அனு மதிக்கிறார்கள். இன்றும் மான் சாண்டோ நிறுவனத்தின் நிதியுதவி யுடன் கோயம்புத்துர் வேளாண் பல் கலைக்கழகத்திலும், அண்ணா மலைப் பல்கலைக் கழகத்திலும் மரபீனி மாற்று விதைக்கான ஆய்வுத்துறைகள் செயல்படுகின் றன. அப்பல்கலைக் கழகங்கள் மரபீனி மாற்றுப் பயிர்களை ஆதரித்துப் பரப்புரை செய்கின்றன.

இப்பல்கலைக்கழகங்கள் மான் சாண்டோ கொடுக்கும் இலஞ்சப் பணத்தில் அந்நிறுவனத்திற்கு ஆதரவாக மக்களுக்கு எதிரான ஆராய்ச்சி அமைப்புகளை உரு வாக்கி கொண்டுள்ளன. நாடாளு மன்றத் தேர்வுக் குழுவில் அ.இ.அ.தி. மு.க.வின் தம்பித்துரையும் உறுப்பி ன ராக இருந்தார். அவரும் மரபீனி மாற்றுப் பயிர்களுக்கு எதிராக அத் தேர்வுக் குழுவில் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

ஆனால், அண்ணா தி.மு.க.வின் தமிழக அரசு, தமிழ்நாட்டுப் பல் கலைக்கழகங்களில் மான்சாண் டோவின் நிதியில் ஆராய்ச்சிகள் நடப்பதை அனுமதிப்பது ஏன்? தமிழக முதலமைச்சர் மவுனம் காக்காமல் இதிலொரு முடிவெடுக்க வேண்டும்! அந்த மான்சாண்டோ ஆராய்ச்சி அமைப்புகளை மூடச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் மரபீனி மாற்று விதைகளோ, காய்கறிகளோ, தானியங்களோ வராமல் தடுக்க வேண்டும்.

இது உழவர்களுக்கான சிக்கல் மட்டுமல்ல. இது அனைத்து மக்க ளுக்குமான சிக்கல். இனிமேல் கடை களில் மரபீனி மாற்றுக் காய்கறிகள் இருந்தால், அவற்றை வெளியே சாலையில் வீசி அழிக்க வேண்டும். பி.ட்டி. பருத்தியை சாகுபடி செய் யாமல் விவசாயிகளை தடுக்க வேண்டும். இது போன்ற போராட் டங்களை நடத்துவதற்கும், உழவர் கள் நடத்தும் போராட்டங் களில் பங்கு கொள்வதற்கும் காவிரி உரிமை மீட்புக் குழுவிலுள்ள உழவர்கள் அணியமாக இருக்கிறார் கள் என்பதைத் தெரிவித்து இப் போராட்டத்தை திருவாரூரில் முன்னெடுத்த அனைவருக்கும் நன்றி பாராட்டி விடைபெறு கிறேன். வணக்கம்!’’

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.

இந்நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, திருத்துறைப்பூண்டி மூத்த த.தே.பொ.க. தோழர் இரா. கோவிந்தசாமி, ஒன்றியச் செயலா ளர் தோழர் மு.தனபாலன், பொதுக் குழு உறுப்பினர் தோழர் வெ.இரா சேந்திரன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் பங்கேற்றனர்.

Pin It