தெற்காசியாவில் தான் வல்லரசாக அறியப்பட வேண்டும். தனது பலத்தையும் அதிகாரத்தையும் கண்டு பிற தெற்காசிய நாடுகள் அச்சப்பட வேண்டும். தனது ஆளுகைக்கு உட்பட்ட நாடுகளாக அவை இருக்க வேண்டும் என்ற பேராசையும் ஆணவமும் இந்திய அரசின் பண்புகளாக, அடையாளங்களாக தங்கிவிட்டன. பிற தெற்காசிய நாடுகள் அமெரிக்காவுக்கு இணையான நாடாக, தம்மை அதட்டி, மிரட்டி அடிபணிய வைக்க வல்லவராக இந்திய அரசினை அடையாளங் காண்கின்றனர். நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சாமான்ய மக்களுங்கூட இந்திய அரசின்பால் வெறுப்பை செலுத்தத் தயங்குவதில்லை. உலக காவலாளிகளாக விளங்கும் அமெரிக்கா சம்பாதித்து வைத்துள்ள வெறுப்புக்கு இணையான ஒன்றை இந்திய அரசு சம்பாதித்துக் கொண்டுள்ளது என்று கூடச் சொல்லாம்.
வல்லரசாக தன்னை அறிவித்துக் கொள்ளும் இவ்வரசின் தன்மை, உள்ளீடு பற்றி நாம் சிந்திக்க வேண்டியது என்பது காலத்தின் தேவையாக உள்ளது. இத்தகைய சிந்தனையை வளர்த்தெடுக்கும் முகமாக சில அனுமானங்களை இக்கட்டுரை முன் வைக்கிறது. தாராளவாத சனநாயக சிந்தனையில் தேசநலம், குறிப்பிட்ட தேசத்தின் இறையாண்மை முதலியன குடிமக்களின் நலம், குடியரசின் திண்மை ஆகியவற்றோடு தொடர்பு படுத்தப்படுவதும் அந்த அடிப்படையில் விளக்கப்படுவதும் வழக்கம். இந்தியா போன்ற சனநாயக நாடுகளின் அரசியல் வாழ்க்கையை மதிப்பிடுவதற்கும் புரிந்து கொள்வதற்கும் இத்தகைய விளக்கங்களும் வரையறைகளும் கையாளப்படுவதும் வழக்கம். இத்தகையவற்றின் அடிப்படையில் இந்திய அரசு பறைசாற்றும் தேசநலம், தேசத்தின் இறையாண்மை குறித்த வாதங்களை பரிசீலிக்க முற்படுவோமேயானால் சாதி நலன்களுக்கு தேசிய முலாம் பூசப்பட்டு அவையே பொது நலன்களாக உருமாற்றப்படுவது என்பது நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடைபெற்று வருவதை தற்கால நிகழ்வுகள் பல நமக்கு உணர்த்துகின்றன.
முதலாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள், சிறப்பு பொருளாதார மன்றங்களை அமைத்தே தீருவோம் என்பதில் உறுதியாக நின்று கோடானு கோடி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கத் துணியும் அரசின் மெத்தனம், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு இறந்து போனதற்கு காரணமாக உள்ள நரேந்திர மோடியின் பொருளாதார வளர்ச்சிப் பணிகளை முதலாளிகள் புகழ்ந்துப் பேசுவதற்கு வழிவகுத்துக் கொடுக்கும் அரசின் பொருளாதாரத் திட்டங்கள், வாழ்வாதார உரிமையை தக்கவைத்துக்கொள்வதற்காக ஆதிவாசிகளும், குடியானவர் களும், தலித்துகளும் முன்னெடுத்துள்ள போராட்டங்களை ‘பயங்கரவாத’ செயல்பாடுகளாக அடையாளப்படுத்தும் அரசின் அறமற்ற, பொய்யான அரசியல் தந்திரம்: இவை அனைத்தையும் செய்தாலும் நாட்டு நலம், எல்லைப் பாதுகாப்பு, இந்திய இறையாண்மையை பேணுதல் என்பனவற்றின் பெயரில் தனது செயல்பாடுகளை சாடுபவர்களையும் எதிர்ப்பவர்களையும் ‘தேச துரோகி’களாக முத்திரையிட்டு, சாமான்ய குடிமகனின் உணர்ச்சி மேம்பட்ட தேசியவுணர்வை உசுப்பிவிட்டு, தனது குற்றங் குறைகளை அரசு இருட்டடிப்பு செய்து விடுகிறது.
இவ்வாறு செய்வதன் மூலம் ‘சட்ட ஒழுங்கு’ நடவடிக்கைகள், ‘பாதுகாப்பு’ நடவடிக்கைள் ஆகியவற்றை, தான் பேண விரும்பும் இறை யாண்மைக்கான உத்திரவாதங்களாக இந்திய அரசு ஆக்கியுள்ளது. தனது ‘நியாயத்தை நிறுவுவதன் பொருட்டு மக்கள் மத்தியில் பணிப்புரிந்து வருவோரையும், அவர்களுடைய சனநாயக உரிமைகளுக்காகக் குரல் கொடுப்போரையும் ‘குற்றவாளி’களாக இந்த அரசு அறிவித்து வருகிறது. அரசு என்ன செய்தாலும் அது சட்டத்துக்கு உட்பட்டதாக விளக்கப் படுவதும், அதனை எதிர்ப்பவர்கள் நியாயம், நீதிகோரி போரிட்டாலும் அது சட்ட விரோதமானதாக ஆக்கப்படுவதும் காலத்தின் கோலமாக உள்ளது.
இந்திய அரசின் செயல்பாடுகளை மேன்மேலும் ஊக்குவித்து அவற்றை தொடரச் செய்வதில் பன்னாட்டு மூலதனத்துக்கும் உள்நாட்டு முதலாளிகளுக்கும் பெருத்த அக்கறை உள்ளது போலவே, முதலாளிகள் பெறும் கொள்ளை இலாபத்தில் தம் பங்கைக் கேட்டுப் பெறுவதற்காகக் காத்திருக்கும் நிர்வாகத் துறைக்கும், அரசின் நியாயத்தை ஏற்று அதற்கு மெருகூட்டும் நீதித்துறைக்கும் அக்கறை உண்டு. சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்று வரும் முதலாளித்துவ பகல் கொள்ளைக்கு ஆதரவாக அனைத்து அரசு நிறுவனங்களும் துறைகளும் செயல்பட்டு வருவதை நாம் யாவரும் அறிவோம். இந்தப் பகல் கொள்ளையால் பெரும்பாதிப்பை சந்தித்துள்ள ஆதிவாசிகளை கூறுபோட்டு அவர்களின் சிலரைக் கொண்டே அங்கு நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ளத் துணிந்துள்ள மாநில அரசின் சாதுரியமும் அதனை ஒரு அரசியல் கொள்கையாக ஆக்கத் துடிக்கும் மத்திய அரசின் சாணக்கியத்தனமும் இந்திய அரசினை இயக்கும் பார்ப்பனீயத் தின் வெளிபாடுகளே அன்றி வேறல்ல.
இந்து - இந்தி -இந்தியா குறித்து தமிழ்நாட்டில் நாம் அதிகம் பேச வேண்டியத்தில்லை என்ற போதிலும் பெரியாராலும் அம்பேத்கராலும் ‘பார்ப்பன _ பனியா’ அரசு என அழைக்கப் பட்ட அரசின் தன்மையை குறித்து நாம் தொடர்ந்து பேசுவ தென்பது தவிர்க்க முடியாததாக ஆகியுள்ளது. இதைச் செய்யும் போது இந்த அரசின் ‘சனநாயக’த் தன்மை குறித்தும் யோசிக்க வேண்டியவராகிறோம்.
இந்திய பாராளுமன்றத்தை எடுத்துக் கொள்வோம். காலங்காலமாக அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட கடைநிலை சாதிகளின், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின், தாழ்த்தப் பட்ட சாதிகளின் பிரதிநிதிகள் அதில் இன்று கூடுதலான எண்ணிக்கையில் உள்ளனர். தேர்தல் அரசியலும் அது சாதிக்க விரும்பும் வரம்புக்குட்பட்ட சனநாயகமும் இதை சாத்திப் படுத்தியுள்ள போதிலும், இப்பிரதிநிதிகள் அரசியல் வாழ்க்கை யில் தமக்குரிய இடத்தையும் உரிமையையும் பெறுவதற்காக அவர்களது மூதாதையர்களும், சென்ற தலைமுறையினரும் மேற்கொண்ட போராட்டங்கள்தான். இந்த குறைந்தபட்ச சனநாயகத்துக்கும் கூட ஆதாரமாக விளங்கி வருகின்றன. பார்ப்பனர்களின் மேலாண்மையை முற்றிலும் தகர்க்காது. பிறப்பின் அடிப்படையில் அவர்கள் செலுத்தும் மேலாதிக்கத்தில் பங்கு பெற விழையும் இதர சாதியினரின் அரசியலுங்கூட ஏதோவொரு வகையிலான சனநாயகத்தை சாத்தியப்படுத்த வல்லதுதான்.
இன்னும் சொல்லப்போனால் இவ்வாறு உள்ள படியே ஆட்சியதிகாரத்தில் பங்கு கேட்க விழையும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட அரசியல் தலைமைகளின் அரசியல் ஆர்வத்துக்கான நியாயத்தை, மேற்கூறிய போராட்டங்களைப் பற்றிய நினைவும் அந்நினைவு தோற்றுவிக்கும் மனக்கிளர்ச்சி யும்தான் இயற்றியளித்துள்ளன. மேலும், சாதி ஏற்றத் தாழ்வுகள் மலிந்து கிடக்கும் சமுதாயத்தில் சாதி நலன்களை கடந்த, பொதுநலனை, பொதுவுரிமையை ‘அரசு’ என்ற ஒன்றுதான் இதுநாள் வரைக்கும் பிரதிநிதித்துவப்படுத்தி வந்துள்ளது. அத்தகைய பொதுவுரிமைக்கான அடிப்படை ஆதாரங்களையும் அந்த அரசின் இருப்புக்குக் காரணமாக உள்ள அரசியல் சட்டமும், அதன் முக்கியமான பகுதியாக உள்ள அடிப்படை உரிமைகள் சாசனமும் தான் வழங்கி வருகின்றன. இத்தகைய அரசை இயக்கும் சனநாயக உந்து சக்திகளில் ஒன்றான பாராளுமன்றம் கண்டுள்ள சனநாயக மாற்றங்களை இந்தக் கோணத்தலிருந்தும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. பொதுவுரிமைக்ககான அரசாக அது இருக்க வேண்டுமானால் சகல சாதியினரும் தமக்குரிய பங்கை கோருவது என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
பிரச்சினை என்னவெனில் நவீன கால இந்திய அரசு தன்னை ஒரு குடியசராக வரையறுத்துக் கொண்டதாலேயே பொது உரிமையை பிரதிநிதித்துவப்படுத்த வல்லதாகி விடுவதில்லை. காரணம், ஒரு குடியரசின் தன்மை அது வகுத்துக் கொண்டுள்ள அற்புதமான சட்டத்திட்டங்களைப் பொருத்து இருப்பதில்லை. அச்சட்டத்திட்டங்கள் அரசியல் வாழ்வுக்கு மட்டுமில்லாது சமுதாய வாழ்வுக்கும் உரியவையாய் அறியப்படுவதும், பொருளாதார வாழ்வில் சமத்துவத்தையும் சமநீதியையும் ஏற்படுத்த வல்லதுமாக இருந்தால்தான் ஒருஅரசானது ‘குடியரசு’ என்ற தகுதியைப் பெறும். அரசியல் சட்டத்தைக் கொண்டு சாதிய தன்மையுடைய இந்திய அரசை குடியரசாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் பணிபுரிந்த அம்பேத்கரும் கூட, பின்னாட்களில் சமுதாய மாற்றம் என்பதை இவ்வாறு சாதிக்க இயலாது; முற்றிலும் வேறுபட்ட அறவியல் வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதன் மூலம் மட்டுமே சாதி இந்து சமுதாயத்தை எதிர்க்கொள்ள முடியும் என்ற முடிவுக்கு வந்தார். அரசியல் சட்டத்தை வரைந்த அறிவு தம்மத்தில் தன்னை இணைத்துக் கொண்டது.
அம்பேத்கரைப் போல அல்லாது, அரசியல் சட்டம் உருவாக்கும் முயற்சியை பற்றி தொடக்கம் முதலே பெரியாருக்கு நல்லெண்ணமும் நம்பிக்கையும் இருக்கவில்லை. சாதி அமைப்பை கட்டுக்குலையாது காப்பாற்றும் வேலைகளை அரசியல் அமைப்பின் பார்ப்பன-பனியா அங்கத்தினர் செய்து வருவதாக அவர் 1948இலேயே குற்றம் சாற்றினார். பார்ப்பனீய தத்துவமும் பனியாக்களின் பொருளாதாரச் கொள்கைகளும் கைக்கோர்த்துக்கொண்டு பொதுவுரிமை, பொதுவுடைமை ஆகிய இரண்டையும் தவிடுபோடியாக்கி விடும் என்பதை அவர் தொடர்ந்து சுட்டிக்காட்டினார்.
தத்துவரீதியாகவும் வர்க்கரீதியாகவும் குடியரசாக விளங்காது இந்து-இந்தி-இந்தியாவாக அவதாரம் எடுத்துள்ள இந்திய அரசானது தொடர்ந்து தன்னை ஒரு சனநாயக அரசாக இனங்காட்டிக் கொண்டு வருவதன் சூட்சமத்தை மேலும் ஆராய்வோம்.
குறிப்பிட்ட சாதி, வர்க்க நலன்களை முன்னிட்டே அரசின் திட்டங்களும் செயல்பாடுகளும் அமைந்துள்ள போதிலும், அரசு தன்னை அனைவருக்குமான அரசாகக் காட்டிக் கொள்ளவும் விழைகிறது. சுதந்திரம் பெற்ற நாளிலிருந்தே தனது ‘சனநாயக’த் தன்மையின் மேன்மையையும் பாகிஸ்தானின் ‘ஏதேச்சதிகார’ அரசியலையும் ஒப்பிட்டுக்காட்டி முற்போக்கான அரசாக தன்னை காட்டிக் கொண்டது. மேலும், தாராளவாத சனநாயகம் என்பதில் முழு நம்பிக்கையுடைய அரசியல் தலைமைகள் அக்காலக் கூட்டத்தில் அரசியல் வாழ்க்கையிலும் சுதந்திர இந்தியாவின் அரசியலதிகாரத்திலும் பங்கு வகித்து வந்தனர். தங்களது வர்க்கசாதி நலன் அச்சுறுத்தலுக்கு ஆளானபோது இவர்கள் வெகுண்டு செயல்பட்டனர் என்பதை மறுப்பதற்கில்லை.
தெலுங்கானா போராட்டத்தை நேரு அரசு முடிவுக்குக் கொண்டு வந்தவிதம், தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யுனிச அரசை (கேரள அரசை) கலைத்த தோரணை போன்ற சம்பவங்கள் சுதந்திர இந்திய அரசின் பண்புகளை சுட்டுவனவாக அமைந்தன. 1950களில் பெரியாரின் கொடி எரிப்புப் போராட்டத்தையும் சட்ட எரிப்புப் போராட்டத்தையும் ஒடுக்கியதிலும் நேரு பேணிய சனநாயகத்தின் வரம்புகள் வெளிபட்டன என்றாலும் தாராளவாத அரசியல் சிந்தனையுடைய சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தவும் சுதந்திர இந்திய அரசு ஆவல் கொண்டிருந்தது. நீதித்துறை சுயாதீனமாக செயல்படுவதை அது எல்லா நேரங்களிலும் கட்டுப்படுத்தவில்லை. அரசாங்கம், கட்சி, நிர்வாகம், ஆகியன தம்மளவில் சுதந்திரமாக இயங்குவதையும் ஓரளவுக்கு அனுமதித் தது. பாராளுமன்ற செயல்பாடுகளும் சனநாயகத்தை விரிவுப்படுத் துபவையாக அமைந்தன. நேரு அரசு தொடர்ந்து எதிர்க்கட்சி களின் விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது.
காலப்போக்கில், பாராளுமன்ற உறுப்பினர்களின் அடை யாளங்களும் மாறின. 1970 ஆதிக்கசாதிகளையும் வாக்கங்களை யும் சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல், நாம் ஏற்கனவே கூறியதுபோல, பல்வேறு சமூக வகுப்புகளின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகத் துறையில் இந்த வகுப்பினருக்குப் போதுமான பிரதிநிதித்துவம் வாய்த்திருக்கவில்லை என்றாலும், பாராளுமன்ற அரங்கில் வகுப்புரிமைக்கான விவாதத்தையும் அதற்கான தேவையையும் முன்னெடுத்துச் செல்ல இவர்களால் முடிந்தது. பல்வேறு சமூக, சாதி நலன்களுக்கிடையே நிலவிய முரண்கள், போட்டா போட்டிகள் முதலியவற்றுக்கு பாராளுமன்ற சனநாயகம் ஈடுகொடுக்க வேண்டியிருந்தது. மண்டல் பரிந்துரைகள் தொடர்பாக நிகழ்ந்த நிகழ்வுகளும், சமுதாய களத்தில் இப்பரிந்துரைகளின் விளைவாக உண்டாகிய சலன்களும் இந்திய சனநாயகத்தின் எல்லைகளை விரிவுப்படுத்தின. இந்திய அரசு தனது உள்ளார்ந்த வர்க்க, சாதி நலன்களை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாத போதிலும் இவற்றுக்கு சவாலாக தோன்றியிருந்த எதிர்ப்புக் குரல்களுக்கும் எதிர்வினைகளுக்கும் செவி மடுக்க வேண்டியிருந்தது. ஏன், அவற்றுடன் சமரசம் செய்து கொள்ளவும் தள்ளப்பட்டது.
பாராளுமன்றத்தின் செயல்பாடுகள் இவ்வாறிருக்க, மாறி வரும் சமூகச் சூழலின் எதிரொலிகள் வேறு தளங்களிலும் ஒலிக்கத் தொடங்கின. 1975க்குப் பிறகு, அதாவது அவசர சட்டக்காலத்துக்குப் பிறகு, இந்தியாவின் அரசியல், சமுதாய வாழ்வில் சிவில் உரிமை அமைப்புகளும் இயக்கங்களும் முக்கிய பங்காற்றி வந்தன. அடிப்படை உரிமைகள் என்பனவற்றுக்கு வழங்கப்பட்டிருந்த வரையறைகளுக்கு புரட்சிகரமான விளக்கங் களை அளித்து அவற்றின் வீச்சை சிவில் உரிமைகளை வழக்காட வந்த வழக்கறிஞர்கள் விரிவுப்படுத்தினார்கள். எடுத்துக்காட்டாக உயிர் வாழ்வதற்கான உரிமை என்பது மிக விரிவான பொருள் பெற்று, சாமான்ய இந்திய குடிமக்களின் உரிமைப் போராட்டங் களுக்கு ஆதாரமாக அமைந்தது. அரசியல், சமுதாய களங்களில் தீர்க்கமுடியாதப் பிரச்சினைகள் நீதிமன்றங்களில் அடைக்கலம் கண்டன. நிர்வாகமும் அரசாங்கமும், பாராமுகமாக இருந்தா லும் நீதிமன்றம் கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கையை வளர்க்க, மக்கள் சார்பாக வழக்காட வந்தவர்களின் நேர்மையும் திறமையும் காரணமாக அமைந்தன.
இவ்வாறாக மக்களின் செயல்பாடுகளும் அரசியல் பங்கேற்பும் இந்திய அரசை சனநாயகப்படுத்த, அதாவது, சற்றே சனநாயகப் படுத்த உதவின. அரசின் வர்க்க-சாதி பண்புகள் நேரடியாக மேலாதிக்கம் செலுத்தும் நிலை மாறியமைந்தது. இப்பண்புகளை உருட்டிப்போட்டு, பதம்பார்த்து, தரம்பிரித்து பிரத்யேக வடிவங்களில் அவற்றை செதுக்க பல சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் முட்டி மோதுவதென்பது தவிர்க்க முடியாத தாகியது.
அதேசமயம் இந்தியஅரசு தொடர்ந்து தனது உள்ளார்ந்த சாதி-வர்க்க நலன்களை பாதுகாத்துக் கொள்ளவும் அவற்றை பொது நலன்களாக விளக்கி, பரந்துப்பட்ட மக்களின் ஒப்புதலைப் பெறவும் முக்கியமான கருத்தியல் பணிகளை மேற்கொள்ள தவறவில்லை. தேசியம் என்ற கருத்தாக்கத்தை சமயத்துக்கும் சந்தர்ப்பத்துக்கும் ஏற்ற வகையில் கையாண்டது. இந்தியா, சீனா எல்லைப் போரின்போதும், வங்கதேச விடுதலைப் போரின்போதும். தேசபக்தியாக அவதரித்த தேசியமானது, அவசர சட்டக் காலத்தில் கண்டிப்பான கொள்கையாகவும் நாட் டின் எதிரிகளாக அரசால் அடையாளங் காணப்பட்டவர்களை தண்டிக்கவும், அத்தகைய தண்டனையை நியாயப்படுத்தவும் உதவக்கூடிய பாசிச சாயலுடைய சூத்திரமாகவும் உருவெடுத்தது. இந்திய அரசின் மேலாண்மை காஷ்மீரத்திலும் நாகலாந்திலும் எதிர் வினைகளை சந்தித்தப்போது இத்தேசியம் வன்மத்தை உமிழ்ந்தது. தீர்க்க இயலாத வர்க்க சாதி முரண்பாடுகளை களையெடுக்க வகுப்பவுவாதத்தை ஊக்குவித்து ‘இந்து’க்களை அணித்திரட்டும் தேசியமாக (1980களில்) பரிணமித்தது.
தேசியம் கண்ட பல்வேறு அவதாரங்களுக்கு சிகரம் வைத்தாற் போல இந்துத்துவம் என்ற தத்துவம் எழும்பி, அப்பட்டமான சனநாயக விரோத வடிவங்களை மேற்கொண்டு, சிறுபான்மை யினரை வதைத்தது. வருணதருமத்தை நிலைநிறுத்தப் பார்த்தது.
1990களின் இறுதி ஆண்டுகளில் உருதிரட்சி பெற்று வளர்த்த இந்துத்துவம் இந்திய அரசின் வர்க்க-சாதி நலன்களுக்குரிய பிரத் யேக அடையாளமாக அமைந்தது. இந்நலன்களை ஊடறுக்க வல்ல சமூக பின்புலத்தையும் கருத்தியல் செறிவையும் பெற்றிருந்த அரசியல் மரபுவழி வந்த மாயாவதி போன்றவர்கள் கூட, இந்தஅடையாளத்துடன் சமரசம் செய்ய துணிந்தனர் என்றால், இந்துத்துவம் சாதித்த அரசியல் வெற்றியை என்னவென்று சொல்வது? பெரியார் பலமுறை சொன்னதுபோல, ‘பலித்தவரை என்பதுதான் பார்ப்பனீயம்’ என்பதற்க்கு இதைவிடச் சிறந்த சான்று இருக்குமா என்று தெரியவில்லை.
இந்துத்துவம் வேறொன்றையும் அம்பலப்படுத்தியது. தாராளவாத சனநாயக அரசுக்குரிய பண்புகளை ஏற்று இயங்கிய அரசானது, உண்மையில், யாருக்கானதாக, யாருடைய உரிமையைக் காக்க வல்லதாக இருந்து வந்துள்ளது என்பதை அரசு அமைத்த சச்சார் குழு வெளிப்படுத்தியது. இக்குழு, இஸ்லாமியர்களின் வாழ்நிலைமைகளை ஆராய்ந்தது. அவர்களின் முன்னேற்றத்துக்கென சில பரிந்துரைகளை செய்தது. இந்துத் துவத்தின் கொடூர முகத்தை வெளிப்படுத்தவும், தனது ‘மரச்சார் பற்ற’ அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்த குழுவை அமைத்திருந்தாலும், அக்குழுவின் பரிந்துரைகளினு டாக இந்துத்துவத்தின் பாரபட்சங்கள் சாதித்தவை மட்டும் வெளிபடவில்லை. சுதந்திர இந்தியாவில் நெடுநாள் ஆட்சி நடத்திய ‘மதச்சார்ப்பற்ற’ காங்கிரஸ் அரசுகள் யாவும் செய்ய தவறியவையும் செய்ய மறுத்தவையும் வெளிபட்டன.
குறிப்பிட்ட வர்க்கசாதிகளின் பிரதிநிதியாக, காப்பாளனாக, விளங்கும் இந்திய அரசின் உள்ளார்ந்த தன்மைக்கும் குறிப்பிட்ட வரலாற்று சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப மாறியமையும் அதன் செயல்பாடுகளுக்கும் இடையிலான இடைவெளியும் முரண்பாடுகளும் தான் எதிர்வினைகளுக்கும் போராட்டங் களுக்கும் தளம் அமைத்து தருகின்றன. இத்தகைய போராட்டங்கள் அரசின் உள்ளார்ந்த தன்மையை மாற்ற முனையலாம். அல்லது உள்ளதைப் பங்குப் போட்டுக் கொள்வதற்கான போராட்டமாக இருக்கலாம். முதலாம் வகைப்போராட்டத்துக்குக்கு இரண்டு முக்கிய கருத்தியல் மரபுகள் ஆதாரமாக அமையலாம்: இந்து-இந்தி-இந்தியாவை எதிர்த்து குறிப்பிட்ட தேசிய இன அடையாளத்தை முன்நிறுத்திய மரபு, அரசின் வர்க்க பண்பை எதிர்த்து அதற்கு எதிராக ஆயுதங்தாங்க துணிந்த இடதுசாரி மரபு.
முதலாம் மரபு தமிழகத்தில் உயிர்ப்புடன் செயல்பட்ட காலகட்டத்தில், இந்தியா என்பதற்கு எதிராக தமிழ், திராவிட அடையாளங்களை முன்நிறுத்திய அதே வேளையில், இந்தியாவின் சாதி வர்க்கப் பண்புகளை விமர்சித்தும் கண்டித் தும், பார்ப்பனீயத்தை எதிர்த்தும் செயல்பட்டது. இன்று இம்மரபுக்கு எதிர்வினையாற்ற வல்ல ஆற்றல் இருக்கிறதா என்று தெரியவில்லை. திராவிட இயக்கம் கண்ட கட்சிகள் யாவும் இந்திய அரசின் பங்காளிகளாக உள்ளதுடன், அவ்வரசுக்கு ஆதாரமாக உள்ள வர்க்கப் பிரிவுகளுடனும் சாதிகளுடனும் தம்மை இணைத்துக் கொண்டுள்ளன. தொடர்ந்து ‘தமிழ் தேசிய நலம்’ குறித்து பேசுவோரில் பலர் தமிழ் அடையாளத்தை முன்நிறுத்தி போராடுகிறார்களேயன்றி, இந்திய அரசுக்கு ஆதரவாக செயல்படும் வர்க்க சாதியினரையோ அவர்கள் போற்றும் ‘இந்து’ தேசியத்தையோ போதுமான அளவுக்கு எதிர்ப்பதில்லை. அவ்வாறு எதிர்ப்பதன் தேவையை வலியுறுத்து வதில்லை. தமிழுக்குள் அனைத்து முரண்பாடுகளையும் முடக்கிவிட முடியும் என்ற நினைப்பில் இவர்களில் பலர் செயல்படுகின்றனர்.
ஆயுதங்களை கையிலெடுத்து களம் இறங்கியுள்ள இடது சாரிகள் அரசுக்கு எதிராகவும், ஆளும் வர்க்க சாதியினருக்கு எதிராகவும் வர்க்கப் போரை முன்னெடுத்துச் செல்ல மேற்கொண்டுள்ள செயல்பாடுகள் அரசால் மூர்க்கத்தனமாக ஒடுக்கப்பட்டு வருகின்றன. அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்குபவர்கள் அரசின் வன்மத்தை அதிகரிக்கச் செய்கிறார்கள் என்பது கண்கூடு, இவ்வன்மத்துக்கு ஆளாகும் எளிய மக்களின் கதிக்கும் அவர்கள் உருவாக்கி வைத்துள்ள அமைதியான புரட்சி செயல்பாடுகளுக்கும் யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்?
இந்திய அரசை உள்ளவாறே சனநாயகப்படுத்த முடியுமா? உண்மையான இறையாண்மையை வரையறுத்து பாதுகாப்பதென்பது சாத்தியமா? தாராளவாத சனநாயகத்தின் வரம்புகளை குலைக்காமல் இந்திய அரசினை எதிர்கொள்ள இயலுமா? அவ்வாறு அவ்வரம்புகளை மீற முனைபவர்கள், தாராளவாத சனநாயகம் சாதித்தளிக்கக்கூடிய சிற்சில வெற்றிகளை இழக்கவும் கைவிடவும் தயாராக உள்ளனரா?
இந்திய அரசு குறித்த விமர்சனங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
- வ.கீதா
(கட்டுரையாளர், சுயமரியாதை இயக்கம் மற்றும் பெண்ணியம் குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூல்களை வெளியிட்டுள்ளார். எஸ்.வி.ராஜதுரை அவர்களோடு இணைந்து பல நூல்களை எழுதியுள்ளார். முழுநேர ஆய்வாளர்)
(மாற்றுவெளி ஆய்விதழ் ஆகஸ்ட் 2009ல் வெளிவந்த கட்டுரை)
இந்தியா யாருக்கான நாடு என்றால் அது பார்ப்பன, பனியா கும்பலுக்கும், இந்தி மொழி பேசும் பீகார், உ. பி, ம. பி மக்களுக்கான நாடுடாக மட்டுமே உள்ளது.
எனவே, இந்தியா ஒரு நாடு என்ற தகுதியில் இருந்து மீண்டு, இங்குள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் விடுதலை வழங்கி, பிறகு ஐரோப்பிய யூனியன் போல, இந்திய யூனியன் ஒன்றை உருவாக்க வேண்டும்.
அதில் பாகிஸ்தான், பாங்ளாதேஷ், நேபாளம், பூட்டான், சிரிலங்கா, தமிழீழம், மொரீஷியஸ் போன்ற இந்திய உப கண்டத்தைச் சேர்ந்த நாடுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால், இந்த பகுதியில் சமரசமும், அமைதியும் நிலவுவதோடு, மேற்கத்திய மற்றும் கீழத்திய நாடுகளின் அடக்குமுறையிலிர ுந்து, இந்த உபகண்ட மக்கள் தம்மைக் காத்துக் கொள்ள முடியும்.
இந்திய யூனியனில் அனைத்து நாடுகளிலும் மைனாரிட்டிகள் உள்ளதால் மைனாரிட்டி பாதுகாப்பும் அதன் உள்ளடக்கமாக வைத்துக் கொள்ளலாம். ரூபாய் என்ற ஒரே நாணயம், தங்குதடையற்ற வணிகம், நதிநீர் பயன்பாட்டு உடன்பாடுகள் செய்து கொண்டு, பொருளாதாரத்தில் மேம்பாடு அடையலாம். அமைதியும் சுகவாழ்வும் நிலவும். அதனாலும், இங்கு ஒரு தனித்த பேரரசு இல்லாததாலும், பயங்கரவாதமும் அழியும்.
பாகிஸ்தான், தற்போதய இந்தியாவிடம் அனுஆயுதங்கள் உள்ளதால் அமெரிக்காவுக்கோ , சீனாவுக்கோ நாம் அஞ்சவேண்டியதில் லை.
தொடர்பு மொழி என்று ஒன்று தேவைப்பட்டால் அதை ஆங்கிலமாக மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும். வேறு எந்த மொழியும் தொடர்பு மொழியாக வேண்டியதில்லை.
இந்தக் கருத்தியலை அனைத்து இந்திய மக்களிடமும் நாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
இந்தியா என்ற ஒற்றை தேசம் முற்றுப் பெற வேண்டும்!!!!!!! !
அமெரிக்க மக்கள் தங்கள் நாடு உலகின் பிற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவதை விரும்புபவராகவே உள்ளனர். உலகின் மிகப் பெரிய வல்லரசின் குடி மக்கள் என்ற கித்தாப்பில் இருப்பது அவர்களுக்கு மழ்ச்சியைத் தரலாம்.
ஆனால் இந்திய நாட்டின் பொது மக்கள் அப்படி அல்ல. பிறரை அழித்து தான் வாழா விரும்பியதாக இந்திய மக்கள் தங்கள் 8000 வருட வரலாற்றில் நினைத்ததே இல்லை.
ஏதோ நாம உண்டு, நம்ப குடும்பம் உண்டு, வூரு உண்டு என்று வாழ்பவர்கள் தான் இந்தியர்கள். எனவே அடிப்படையில் நியாயமான , மனிதாபிமான எண்ணங்களை உடைய இந்தியப் பொது மக்களிடம் இந்திய அரசின் போக்கைக் குறித்து பிரச்சாரம் செய்யவும், அவர்களிடம் இருக்கும் அரசியல் சக்தியை நினைவு படுத்துவதுமே நம் வேலை.
இந்தியர்களிடம் உள்ள பலவீனம் என்ன வென்றால் காசு வாங்கிக் கொண்டு வோட்டுப் போட்டு விடுவார்கள். இலவசங்களை கொடுத்துக் கொடுத்தே எம் மக்களை இளிச்சவாயன் ஆக்கி விட்டார்கள்.
மற்ற படி இந்த இந்தியா தனித் தனி நாடகப் பிரிவது எல்லாம் நடக்காது! மக்களும் விரும்ப மாட்டார்கள். சேர்ந்து வாழ்வதையே மக்கள் விரும்புவார்கள் .
முனைவர் பாண்டியன் ஐயா, என்னை அடிக்கடி வசை பாடுபவர், ஆனாலும் அவர் என்னைப் புரிந்து கொள்ளாவிட்டாலும ், நான் அவரைப் புரிந்து கொண்டவன் என்ற வகையிலே, அவர் என் சகோதர சக இந்தியர் என்ற முறையிலே -
அவர் தன உழைப்பை விழலுக்கு இறைத்த நீராக சேதாரப் படுத்த வேண்டாம். இந்திய நாட்டு மக்களின் அறிவுக் கண்ணைத் திறக்க உதவுங்கள், எல்லா இந்தியரும், 120 கோடிப் பேரும் உங்கள் பின்னே அணிவகுப்போம், நியாயத்தின் பக்கம் இருப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈழமக்களின் சொல்லொன்னாத் துயரங்களின் பின்னனியில், அதற்கு முற்றுமுதல் காரணமாயிருந்த இந்த மகத்தான "இந்திய தேசத்தை" எண்ணிக் கையைப் பிசைந்து கொண்டு, வெகு நாட்களாக காணாமல் போயிருந்த நீங்கள், மீண்டும் அந்த கீரல் விழுந்த "இந்திய தேசிய" ரெக்கார்டைப் பாடவிட்டு அலுப்பேத்தலாமா?
உங்களின் தற்போதய இந்திய தேசத்திற்கும், நான் முன்வைக்கும் "இந்திய யூனியனுக்கும்" ஒரு தனி இந்தியனின் அன்றாட அனுபவத்தில் பெரிய வித்தியாசம் இருக்காது தோழரே! ஆனால், ஒடுக்கப்படும் இனங்களுக்கு எனது பரிந்துரை ஒரு தற்காப்பு ஆயுதம். அதோடு இந்த பிராந்திய அமைதிக்கும், பாதுகாப்பிற்கும ் அது தான் அருமருந்து!
இந்திய மக்கள் அனைவருக்கும் காஷ்மீர மக்களின் மீது, No, no, Sorry......, மன்னின் மீது அன்பு இருக்கலாம். ஆனால், காஷ்மீர மக்கள் அதை அனுமதித்தால் தான், நீங்கள் சொல்லும் இந்திய தேசியம், சாத்தியமாகும். துப்பாக்கி முனையில் செயல்படும் ஜனநாயகத்துற்குப ் பெயர், சர்வாதிகாரம் என்பது தான். ஐ. நா. வில் இந்தியா செய்வதாக ஒப்புக்கொண்ட Plebiscite, கடந்த 60 ஆண்டுகளாகவே நடத்தப்படவில்லை . உங்கள் நேரு மாமா, ரோஜாவின் ராஜா, தனது நன்பனான ஷேக் அப்துல்லாவையே, நீண்ட காலச் சிறையில் வைத்தார், நேர்மைக்கும், நாணயத்திற்கும் புறம்பாக!
அடுத்தவனை விடுங்கள்...
*அறுபதுகளில் சிரிமாவோ-சாஸ்தி ரி ஒப்பந்தம் வாயிலாக 6,00,000 இந்திய வம்சாவழித் தமிழர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப் பட்டார்களே, தமிழனைக் கேட்டா அந்த முடிவு எடுக்கப்பட்டது?
**1974ல் கச்சத்தீவு சிங்களனுக்கு கொடுத்தீர்களே, எங்களைக் கேட்டா கொடுத்தீர்கள்? வழிப் பிள்ளையாருக்கு கடைத்தேங்காயா?
***1987ல் ஜெயவர்தனே- ராஜீவ் ஒப்பந்தம் போட்டீர்களே, தமிழரின் ஒப்புதலோடா போட்டீர்கள்?
****வாக்குறுதியைக் காப்பாத்தாமல் குட்டிமணி, ஜெகன் போன்ற 17 போராளிகளை சிங்களனிடம் ஒப்படைத்தாரே உங்கள் இளைய ரோஜா, ராஜீவ். அற்புதமான 17 போராளிகள் சயனைடு உண்டு வீரமரணம் அடைந்தனரே!
*****இந்தியாவின் பரிவை எதிர்நோக்கி உமிழ் நீரையும் விழுங்காமல் பட்டினிப் போராட்டம் இருந்த திலீபனை, சத்தியாகிரகச் செம்மல் காந்தியின் கொள்கைக் குஞ்சுகளான ஒரு காங்கிரஸ் காரனும் எட்டிப் பார்க்காமல், கொலை செய்தீர்களே!
******அமைதிகாக்கச் சென்ற படையை ஏன் புலிகளின் மீது பாயவிட்டீர்கள்? தமிழர்கள் எதிர்த்தோமே உங்களின் கவனத்திற்கு எட்.......டவே இல்லையா?
*******போரை நிறுத்து, ஆயுதங்கள் கொடுக்காதே, உளவு சொல்லாதே என்று தமிழ் நாடே கெஞ்சியதே, தீக்குளித்தோமே, கண்டு கொண்டீரா?
********இலங்கை சம்பந்தப்பட்ட கொள்கைக் குழுவிலோ, இலங்கைக்கான தூதுக்குழுவிலோ ஒரு தமிழனாவது உண்டா?
*********இலங்கையில் உள்ள ஒரே இந்திய வம்சாவளி தமிழன் மட்டுமே! ஆனால், இன்றுவரை ஒரு தமிழனாவது அங்கு தூதுவராக சென்றதுண்டா?
**********எமது தமிழன் கால்வாயிலேயே எமது மீனவர்களை, சிங்கள நாய்கள் வேட்டையாடுகின்ற னரே, என்ன மசிரைப் புடுங்கியது உங்கள் இந்தியா இன்று வரை?
***********மேலே குறிப்பட்ட ஒப்பந்தங்களில் ஒன்றிலாவது தமிழனின் பெயர் உள்ளதா? பாதிக்கப்படும் (திராவிட) தமிழ்ப் பார்ட்டியை விட்டுவிட்டு, ஆரியரான உங்களுக்குள் என்ன மசிர் ஒப்பந்தம்?
************மேற்குறிப்பிட்ட தெல்லாம் ஈழம் சார்ந்த சிக்கல்கள் மட்டுமே! தமிழகத்தின் நிலங்களை கண்டவனும் வந்து வாங்கிக் குவிக்கிறானே! தமிழரின் மரபுத் தாயகம் பாழாகிறதே! கபில் சிபல் ஹிந்தியைப் புகுத்தித் தமிழைக் கொலை செய்யப் பார்க்கிறானே! இந்தியாவில் இருப்பதனால் தமிழ் மொழிவழிக் கல்வி சாத்தியமில்லாமல ் இருக்கிறதே! எங்கள் பகுதியைப்பற்றி அறிந்த நாங்கள் முடிவெடுப்பதற்க ுப் பதிலாக 2000 மைல்களுக்கப்பால ் உள்ள மாற்றான் முடிவெடுக்கிறானே!
*************மேற்குறிப்பிட்ட இத்தனைக்கும் காரணம், இந்தியா என்ற ஒற்றை தேசமும், அதன் அரசமைப்புச் சட்டமும். 544 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில ே தமிழ் உறுப்பினர்கள் வெறும் 40 பேர் மட்டுமே! தமிழர் விரும்பும் சட்டத்தை இயற்றமுடியுமா? தமிழருக்கெதிரான சட்டத்தை தடுக்க முடியுமா?
தமிழ்த்தேசம் அமைவது இதற்காக மட்டுமல்ல தோழரே! இந்த உலகம் அழிவை நோக்கி பீடு நடை போடுகிறது. அதற்கான சான்றுதான் ஈழ அழிப்பு என்பது. அப்பாவித் தமிழர் மீது பல்குழல் எரிகனைகளையும், கொத்துக் குண்டுகளையும் வீசிய சிங்களனைத் தடுக்கவும் இல்லை, இது நாள்வரை அவனைத் தண்டிக்கவும் இல்லை! இது அனைவருக்குமான ஒரு அபாயத்தைக் காட்டி நிற்கிறது.
தமிழ்ச்சமூகம் ஒரு தாய்ச்சமூகம்! உலகிலேயே ஒப்பற்ற, சமரசமில்லாத, அறக்கோட்பாடுகளை யும், வாழ்வியலையும் அளித்த தொன்மை சமூகம். தமிழன் என்பவன் உலகின் சொத்து. இவன் இந்தியா என்ற வேலிக்குள் சிறைபட்டுக் கிடக்கலாமா? நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லை என்றால், உலக அறிஞர்கள் சொன்னதைக் கேளுங்கள். சிலரது மேற்கோள்களை மட்டும் இங்கே வைக்கிறேன்.
" The speech of a dying people may, perhaps, be allowed to die. But this canot be said of the Tamil race. Heaven forbid! ....Let the Tamilians cease to be ashamed of their vernacular... To seek for and to find a noble language and to dedicate one's life to the study of it is the best life-work a man could wish for... Whenever I die, 'A student of Tamil' will be inscribed on my monument " - Dr. G.U Pope
மேலும்....
Writing in 'Tamil Culture' in 1956, (Vol. V, No. 4. October, 1956) Dr. Zvelebil made an appeal under the heading "The Tamil Contribution to World’s Civilisation". He said:
"There is no doubt that the culture of the Tamils belongs to the great and immortal treasures of the world's civilisation"
From my own experience, however, I can say that even those who claim to have a wide outlook and deep education, both Indians and Europeans, are not aware of this fact. And it is the task of the Tamils themselves, and of those sympathetic mlecchas who try to interpret Tamil culture, to acquaint the world's cultural public with the most important contributions of Tamil culture to the world's civilisation.
புரிகிறதா? ஆக, இந்த உலகை நல்வழிப்படுத்த தமிழனுக்கான அடிப்படைத் தேவை, அவனுக்கான தேசம் என்பது தான். உலகின் அனைத்து நாடுகளுடனும் நேரடித் தொடர்புகளை வைத்துக்கொண்டு, அதன் மூலம் உலக ஒழுங்கைக் கட்டமைக்க, தமிழனுக்கு இன்றியமையாதது அவனுக்கான தேசம் தான்.
இந்திய தேசம் வேகமாக சீரழிந்து வருகிறது என்பதை உணர்ந்துள்ளீர்க ளா? இது தன்னைத் தகவமைத்துக் கொள்ள இயலாத அரசமைப்பைக் கொண்டுள்ளது என்பதை அறிவீரா? இங்கு உண்மையான ஜனநாயகம் இடம்பெறவில்லை என்பதை அறிவீரா? பல்தேசிய, மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டை, ஒரே மத்திய அரசால் திறம்பட இயக்க இயலாது என்பதை உணர்வீரா? சிறிய தேசங்களை சிறப்பாக நிர்வாகம் செய்ய முடியும் என்பதை உணர்வீரா?
இந்தக் கேள்விக்கெல்லாம ் தௌிவான, உறுதியான, சாத்தியமான வழிகள் உங்கள் "இந்திய" தேசியத்தில் இருந்தால் சொல்லுங்கள். நானும் இந்திய தேசம் வாழ்கவென்று கொடி பிடிக்கிறேன். அப்படி உங்களால் பதில் சொல்ல முடியாவிட்டால், உங்களது கீரல் விழுந்த ரெக்கார்டை, மேசையின் விளிம்மில் படீர் என்று அடித்து, சுக்கு நூராக உடைத்து, குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, என்னோடு "இந்திய யூனியன்" கட்டக் கிளம்புங்கள். (ரெக்கார்டை உடைத்து குப்பைத் தொட்டியில் போடுவது அவசியம் தேழரே! இல்ல என்றால் வேறு எந்த அம்மாஞ்சியாவது அதை எடுத்து அதைப் பாடவிட்டுக் கொண்டிருப்பான்.)
இந்திய தேசியத்தை உங்களால் ஞாயப்படுத்த இயலாத நிலையில், மேலும் அதற்காக வக்காலத்து வாங்கி, இங்கு வந்து எழுதுவது நாகரிகமாகாது. அப்படிச் செய்பவன் ஒரு பைத்தியக் காரன் அல்லது "கடைந்தெடுத்த" அயோக்கியன்.
முடிக்கும் முன்பு.......
என்னைப்பற்றிய உங்களின் கணிப்பு துல்லியமானது தோழரே! எவ்வளவு வசை பாடினாலும் தமிழன் அன்பு வடிவானவன் தான். பல்லுயிர் நேயன். (பல்லுயிர் என்பது மனிதரல்லாத உயர்களையும் சேர்த்துத் தான்). அதைத்தான் தமிழ் Heritage என்பார்கள். அதைத்தான் மேற்கூறிய வௌிநாட்டு அறிஞர்களும் சொன்னார்கள்.
ஆனால், அன்பின் வடிவான பௌத்தம் இந்தியாவில் அழிக்கப்பட்டதைய ும், அற்புதமான ஈழத் தமிழினம் அழிக்கப்பட்டதைய ும் சீர்தூக்கிப் பார்க்கும் நாங்கள், நல்லதைக் காக்க, வன்முறையும் தேவை என்பதை உணர்ந்தேயுள்ளோம ். அன்பைக்காக் வன்முறையா? இது ஒரு முறன் தான் தோழரே! ஏனிந்த முரண்? மிருக உலகில் மனிதத்தை நிலைநாட்டவே! நாமெல்லாம் குரங்கின் வழித்தோன்றல்கள் அல்லவா?
அதனால் சொல்கிறோம்..... தமிழனுக்கெதிராக செயல்படுபவர்களை யும், பிரச்சாரம் செய்பவர்களையும் இனி நாங்கள் "டரியல்" செய்வோம்!
ஒரு தமிழின மரபியல் ரீதியான ஆய்வு
-------------------------------------------------------------------
இன்று பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழி பேசி பல்வேறு இனங்களாக வாழ்ந்து வரும் மாந்த இனம் தொடக்கத்தில் ஒரே இனமாகத்தான் இருந்திருக்க வேண்டும் என மாந்தவியலர் கூறுகின்றனர். ஒரே இடத்தில் வாழ்ந்தபொழுது ஒரு மொழியையே அவர்கள் பேசியிருக்க வேண்டும். பின்பு தான் அவர்கள் பல்கிப் பெருகிப் படிப்படியாக உலகின் பல்வேறிடங்கட்கு ம் பரவியிருத்தல் வேண்டும். இவ்வாறு அவர்கள் தனித்தனிக் கூட்டங்களாகப் பிரிந்த பிறகு, இக்கூட்டங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பிழந்து தாங்கள் பேசிவந்த முதல் மொழியின் திரிபுகளிலிருந் தும் சிதைவுகளிலிருந் தும் பல்வேறு மொழிகளை உருவாக்கிக் கொண்டிருத்தல் வேண்டும்.
தென்பெருங் கடலுள் மூழ்கிப்போன குமரிக் கண்டமே மனிதனின் பிறப்பிடமாக இருத்தல் வேண்டும் என மாந்தரியல், மண்ணியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். அக் குமரிக்கண்டமே தமிழனின் பிறந்தகம் என்பதைத் தமிழிலக்கியச் சான்றுகள் செவிவழிச் சான்றுகள் கொண்டும் வரலாற்றுச் சான்றுகள் கொண்டும் அறிஞர்கள் முன் வைத்துள்ளனர். இனி அம்மாந்தர் பேசிய உலக முதன்மொழி தமிழே என்பதும் மொழியியல் அடிப்படையில் மொழி அறிஞர்களால் நிறுவப்பட்டுள்ள து. ஆயினும் தமிழன் நாகரிகமுற்ற முதல் மாந்தனாகக் கருதப்படல் கூடாது என்பது சிலரின் உட்கிடக்கையாக இருப்பதால், அத்தகையோர் மேற்கூறியவற்றுக ்கெல்லாம் போதிய சான்றுகள் இல்லை என அவற்றை மறுப்பர்..
உலகிலேயே பிற இனத்தினர் மீது சிறிதும் வெறுப்போ பகைமை உணர்வோ இல்லாத இனம் தமிழினம் ஒன்றே. “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்பது தனிப்பட்ட யாரோ ஒரு தமிழ்ப்புலவரின் உள்ளத்தின் விரிவை மட்டும் காட்டுவதன்று. அது தமிழனின் குருதியிலேயே ஊறிப்போன உணர்வு. தமிழ்நாட்டில் வாழும் தமிழ்மக்களைக் கூர்ந்து கவனிப்போர் அவர்கள்பால் பிறஇனத்தினரிடம் காணப்படாத இரண்டு அடிப்படைத் தன்மைகளைக் காணலாம்.ஒன்று, தங்களிடையே வாழவந்து தங்களையே கீழே தள்ளி மிதக்கும் பிற இனத்தினரின் சூழ்ச்சிகள், சுரண்டல்களினின் றும், கயமைகள் கரவுகளினின்றும் , ஏன், வெளிப்படையான சிறுமைகள் அடாவடித்தனங்கள் மேலாண்மைகளின்று ம் கூடத் தங்களையும் தங்கள் உரிமைகளையும் காப்பாற்றிக் கொள்ளும் தற்காப்புணர்ச்ச ி கடுகளவும் இல்லாமல் இருப்பதாகும். இரண்டு, பிற இனங்களின் மீது கடுகளவும் இனவெறுப்பின்மை. மீண்டும் சொல்வேன் உலகிலேயே பிற இனங்களின் மீது இனவெறுப்பற்ற இனம் தமிழினம் ஒன்றே. மீண்டும் மீண்டும் சொல்வேன், பிற இனத்தவரை வெறுக்காத இனம், பிற இனத்தவரின் சுரண்டல்களிலிரு ந்து தன்னைக் காத்துக் கொள்ளும் தற்காப்புணர்ச்ச ி அற்ற இனம் தமிழினம்.
கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடியாகத் தமிழன் இருந்தமையால், தொடக்க வழிகளில் அவனை எதிர்க்க வேறு எந்த இனமும் இருந்ததில்லை. அதனால் யாரிடமிருந்தும் தன்னைக் காத்துக் கொள்ளும் தற்காப்புணர்ச்ச ியும் அவனுக்கு ஏற்பட்டதில்லை.ப ல்வேறு தாக்கங்களால் அவற்றின் இனப்பண்பு மாறிப் போனாலும் சொந்த மண்ணிலேயே தொடர்ந்து பன்னூறு ஊழிக்காலம் வாழ்ந்த, இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழினம் பிறரிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் உணர்வையோ, பிறரைத் தன் எதிரியாகக் கருதி வெறுப்புக் கொள்ளும் இனவேறுபாட்டுணர் வையோ உருவாக்கிக் கொள்ளாமலேயே போய்விட்டது.
படிக்காத, எழுத்தறிவில்லாத ஒரு பொதுநிலையான (சராசரி) கன்னடனை, ஆந்திரனைக், கேரளத்தானை எடுத்துக் கொள்ளுங்கள். தன் இனம், மொழி என்று வரும் பொழுது கொப்புளித்துப் பொங்கி எழுகின்றானே. ஆனால் பொதுநிலையான ஒரு தமிழனை எடுத்துக் கொள்ளுங்கள். இனத்தளவில் தன்னைக் காத்துக் கொள்ளக் கடுகளவு சூடும் சுரணையின்றி இருக்கின்றானே. பொதுநிலைத்தமிழன ் என்ன? படித்துப் பதவி பெற்று வயிறு வளர்க்கும் பெரும்பான்மைத் தமிழனுக்குக் கூட மொழி பற்றிய அக்கறை கடுகளவும் இல்லையே. தன் இனம் இப்படித் தாழ்ந்து கிடக்கின்றதே என்ற சூடு சுரணை இல்லாமல்தானே அவன் வயிற்றை நிரப்பிக் கொள்கின்றான்!
—-நன்றி (பேரா. ம.லெ. தங்கப்பா )
மரபு வழியான இனப்பண்பு அல்லது தற்காப்புணர்ச்ச ி அவன் குருதியில் இல்லை என்பதைத் தவிரத் தமிழன் இப்படி இனவுணர்ச்சி இல்லாதிருப்பதற் கு வேறென்ன அடிப்படைக் காரணம் சொல்ல முடியும்?இவ்வாற ு வந்தவர்களை எல்லாம் தனது சகோதர்களாக பார்த்மையால் இன்று தமிழனுக்கு நிகழ்காலத்தில் நேர்ந்துள்ள அவலம் விவரிக்க முடியாதுள்ளது..
ஒரு கன்னடத்து வந்தேறி காந்கிரசு கட்சியின் சார்பில் சொல்கிறது ஈழத்துக்காக போராடுபவர்கள் அங்கு சென்று போராட வேண்டுமாம் தமிழனுடைய தாய் பூமியான தமிழ் நாட்டில் போராடமல் அண்டார்டிக்காவி ல் சென்றா போராடுவார்கள்?
அதே கட்சியை சேர்ந்த இன்னோரு தெலுங்கு வந்தேறி சொல்கிறது ஈழ போராளிகளை ஆதரிப்பவர்கள் எல்லாம் தமிழினவிரோதிகளா ம்.. வரவர யார் தமிழர்கள் என்ற குழப்பமே மேலிடுகிறது..இன ்னும் இந்த ஆரிய வந்தேறிகளை பற்றி நாம் சொல்லிதான் தெரியவேண்டியது இல்லை சோ+சப்புற மணிசாமி+மணிஆட்ட ும் ஐயர்+மவுண்ரோடு மகாவிஷ்ணு ராம்+தினமலம் என இவர்கள் பட்டியல் நீளுகிற்து..
வந்தவரை எல்லாம் வாழ வைத்த, தமிழனின் உழைப்பில் தின்று தமிழ் மண்ணின் சோறை தின்று ஆட்சி அதிகாரம் உடையவர்களாக ஆக்கிய தமிழனின் முகத்திலேயே கழியும் இவர்களின் செயலை என்னவென்று சொல்ல?நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது போகிற இடத்துக்கு தான் போகும்..வந்தேறி களுக்கு தமிழ் ஒரு மொழி மளிகைசாமான் வாங்கவோ அல்லது பேரம் பேசவோ தமிழ்நாட்டில் அது பயன் படுகிறது..அவ்வள வுதான்!ஆனால் பச்சை தமிழனுக்கு அது உயிர் உணர்வு தன்மானம் சுய மரியாதை!வந்தேறி களை தயவு செய்து தமிழ் படிப்பதை நிறுத்த சொல்லுங்கள் வந்தேறிகளிடம் தமிழரின் வீரம் வரலாறு,பெருமை என அவர்களை படிக்க சொல்வதால் அவர்களுக்கு தமிழ் இனம் என முகமூடியும் கிடைக்கிறது மேலும் தமிழரின் வரலாறு கண்டு பொறாமையும் உண்டாகிறது இவனிடம் போய் ஈழத்தில் உன் உறவுகள் சாகிறார்கள் என்றால் சிரிக்கவே செய்வான்..அவன் ரத்தம் எவ்வாறு வேலை செய்யும்?
பேக்கரிகடை டீ கடை முதலாளி மலையாளி!–வாங்கி தின்பவன் தமிழன்
வட்டிக்கு விடுபவன் மார்வாடி–வட்டிக ட்டுபவன் தமிழன்
மந்திரம் விடுபவன் ஆரியன் -தட்சணை கொடுப்பவன் தமிழன்
இவ்வாறான் நிலைமைகள் மாறி எமது தமிழ்மண்ணில் ஆள்பவனும் தமிழன் ஆளபடுவனும் தமிழன் என்ற நிலைமை என்று வருகிறதோ அன்றுதான் தமிழ் இனம் உருப்படும்..
நான் இந்தியாவின் அரசியல் வாதிகளை தாங்கிப் பிடிக்க, சப்பைக் கட்டு கட்டவில்லை.
அவர்கள செய்ததில் தவறுகளும் இருந்திருக்கும் , நல்ல நோக்கங்களும் இருந்திருக்கலாம ். அவர்களுக்கு சப்பைக் கட்டு கட்ட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
நான் நம்புவது சாதாரண மக்களை.
நான் இங்கே இந்திய நாட்டிற்குத்தான ் ஆதரவாகப் பேசுகிறேன். இந்தியாவை ஆள்பவர்களுக்கு அல்ல.
அதிகாரம் ஒரே இடத்தில் குவிக்கப் பட்டால் அது எதேச்சதிகாரமாக சர்வாதிகாரமாக மாறும். அதிகாரம் மக்கள் கையில் இருக்க வேண்டும், அதற்கு மக்களுக்கு சரியான கல்வி அறிவும், அதன் மூலம் வரும் விழிப்புணர்வும் இருக்க வேண்டும்.
மன்னிக்கவும்- நண்பனின் நெற்றியில் இருக்கும் கொசுவை விரட்ட, நண்பனின் நெற்றியில் சம்மட்டியால் ஓங்கி அடிப்பது போன்றது தான் - இந்திய ஆட்சியாளர்களின் மீது உள்ள கோவத்தை இந்திய நாட்டின் மீது காட்டுவது.
தொடர்ந்து விவாதிப்போம்!
//வாக்குறுதியைக் காப்பாத்தாமல் குட்டிமணி, ஜெகன் போன்ற 17 போராளிகளை சிங்களனிடம் ஒப்படைத்தாரே//
குட்டிமணி, ஜெகன் இறந்தது வெலிக்கடை சிறையில் 1983 ல் நடை பெற்ற கொடூரப் படுகொலையில். நீங்கள் குறிப்பிட வந்தது புலேந்திரன் உள்ளிட்டவரை என்று நினைக்கிறேன்.
இங்கே குறிப்பிடப் பட்டவர்கள் ஈழப் பிரச்சினையில் எடுத்த நிலைப் பாடு சரியில்லை, தவறானது என்பதே என் கருத்து.
ஆனால் சிறுத்தையார் இவர்களை மட்டும் குறிப்பிட்டு விட்டு அப்படியே பம்மி விடுவது தமிழ் மக்களின் தோல்விக்கு, அவல நிலைக்கான காரணத்தை படம் பிடித்துக் காட்டுகிறது.
நமது தமிழினத் தலைவர் நடந்து கொண்ட விதம் என்ன?
மருத்துவர் கடைசி வரையில் ஏன் மைய அரசில் அங்கம் வகித்தார்? சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்த திருமாவளவனார் கடைசியில் சரணாகதி அடைந்தது ஏன்? இப்படி அரசியல் வல்லமை உடைய தலைவர்களின் "தமிழினக் காப்பு செயல்களை எல்லாம் மறைத்து விட்டு, //சோ+சப்புற மணிசாமி+மணிஆட்ட ும் ஐயர்+மவுண்ரோடு மகாவிஷ்ணு ராம்+தினமலம் என இவர்கள் பட்டியல் நீளுகிற்து..//
என்று மட்டும் எழுதுவது, தமிழ் இனம் ஏன் அழிகிறது என்பதைக் காட்டுகிறது.
நீளும் பட்டியலில் பல தமிழினத் தலைவர்களும் சேர்க்கப் படலாம். தனக்கு பிடித்த தலைவர்களின் அந்தர் பல்டி துரோகங்களை மறைக்கும் சிறுத்தையாரையும ் தமிழர்கள் இந்தப் இந்தப் பட்டியலில் சேர்க்கக் கூடும்.
மலையாளிகள் சாதி, மத வேறுபாடில்லாமல் ஒருவருக்கொருவர் உதவி முன்னேறுகின்றனர ்.
தமிழன் அப்படியா?
என்னுடைய காந்திரமான கேள்விகள் எதற்கும் பதிலளிக்காமலும் , இந்திய ஒன்றியம் அமைவதில் உள்ள நன்மை தீமைகளை அலசாமலும், இந்திய மக்களின் மனம் மாறினால் சரியாகிவிடும் என்று இந்தியத்திற்காக ஒப்பாரி வைக்கின்றீர். அதிலாவது உண்மை உண்டா என்று பார்போம்.
தொலைக்காட்சி, வானொலி, தினப்பத்திரிகைக ள், பருவ இதழ்கள் என்று அனைத்து வகையான ஊடகங்களும் பார்ப்பனர்களான உங்களின் கையில் தான் 80 சதவீதம் உள்ளது. நீங்கள் சொல்லும் மனமாற்றத்தை நீங்கள் தான் கொண்டு வந்திருக்க வேண்டும். 60 வருட காலமாக அது நிகழவே இல்லை. அதோடு, ஈழம் பற்றிய எந்த ஒரு செய்தியையும், இந்திய மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படவில்லை . மாறக, புலிகளை பயங்கரவாதிகள் என்று மட்டுமே உங்களின் ஊடகங்கள் ஊதிக்கொண்டிருந் தன. தமிழர்கள் இந்தியவிலிருந்த ு சென்று குடியேறினவர்கள் தான் என்றும் தாறுமாறாக ஊதிக்கொண்டிருந் தன. எனவே, நீங்கள் சொல்லும் மனமாற்றம் நிகழவே நிகழாது!!!!
அந்த மனமாற்றத்தை நிகழ்த்த வேண்டுமானால் அதிகாரம் தமிழன் கையில் வரவேண்டும். ஆனால், இன்றுவரை சுதந்திர இந்தியாவில், ஒரு தமிழன் கூட பிரதம மந்திரியாகவில்ல ை. ஒரு தமிழன் கூட ராணுவ மந்திரியாகவில்ல ை. ஒரு தமிழன் கூட வௌியுறவு மந்திரியாகவில்ல ை. இதற்கெல்லாம் காரணங்கள் உள்ளன.
4000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் தான் அகில இந்திய மொழி. ஆனால், மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில ் தமிழில் பேச முடியாது என்பது தான் இன்றய செய்தி கூட. தமிழ் அமைச்சர் வைத்த கோரிக்கையை ஒரு "ஆச்சாரி" நிராகரித்துள்ளா ர். இது இந்த மடல் எழுதப்படும், இன்றய செய்திதான். புரிகிறதா? இந்த மன்னின் ஆதி மொழியான தமிழுக்கு ஒரு தேசிய மொழி அந்தஸ்து கூட இல்லை. தமிழைத் திட்டமிட்டு அழிக்க நினைக்கும் உங்களுக்கு, அந்தஸ்து கொடுத்து அரவணைப்பது என்பது இயலாத காரியம் ஐயா!
இந்திய ஒன்றியம் என்ற கருத்தியல் இந்திய உபகண்ட மக்களின் ஒற்றுமையைப் பேணும் அதே வேளை, இங்குள்ள தேசிய இனங்களின் தாயகத்தையும், மொழியையும், பண்பாட்டையும் காக்கும் அரணாக அமையும். அந்த இந்திய யூனியன் உருவாவது தான் பார்ப்பனீயத்திற ்கு பாதுகாப்பு. எங்களின் ஞாயமான கோரிக்கையை ஏற்று, எங்களுக்கு உயிரிழப்பில்லாம ல் இதை நிகழ்த்தினால், பார்ப்பனீயம் தப்பிக்கும். இல்லையேல் அகில இந்தியாவிலிருந் தும் வௌியேறி, காண்காணாத தேசங்களுக்கு ஓட வேண்டிய நிர்பந்தம் வரும். தமிழனுக்கு தீங்கு இழைக்க, இழைக்க பார்ப்பனீயத்தின ் சிக்கல்கள் முற்றிப் பெருகும்.
சுதாரித்துக் கொள்ளுமா பார்ப்பனீயம்!!! !!!!
எனக்கு பிடித்த அரசியல் வியாதிகளை திட்டவில்லையா? நிகழ்காலத்தில் என்ன நடக்கிறது அரசியல் வியாதிகளை படம் பிடித்து ஒரு பதிவு..
இந்திய அரசியல்-தமிழக இந்திய அரசியல் வியாதிகள்-மக்கள ் போராட்டம் -ஒர் பார்வை
-------------------------------------------------------------------
மக்கள் போராட்டம்:sad:உ ண்ணா விரதம்-பேரணி -பொது கூட்டம்- சாலை மறியல்-தீக்குளிப்பு)
--------------------------------------------------------------
தெரிந்தோ தெரியாமலே இந்த இந்தி தேசியத்தில் உள்வாங்க பட்ட தமிழர்களாகிய நாம் இதை செய்தால் அரசாங்கம் நம்மை கண்டுகொள்ளும் ஏதாவது செய்யும் என பழக்கபடுத்திவிட ்டார்கள்.இன்று அந்த பழக்கமே மக்களிடம் மேலோங்கி உள்ளது. ஆனால் முக்கிய பிரச்சனைகளில் அதாவது இனம் சார்ந்த பிரச்சனைகளில் இதுவும் செல்லுபடியாகாது என ஈழ பிரச்சனையில் நாம் கண்டு கொண்டோம். சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தும் எவனும் கண்டு கொள்ளவில்லை.ஏதோ காந்தி தமிழ்நாட்டுக்கு வந்தார் தமிழக விவசாயிகள் கோவணத்தோடு இருப்பதை கண்டு தானும் கோவணத்தினை உடுத்தி கொண்டார் ..அவர் அறிமுகபடுத்தியத ு தான் அகி’இம்சை’வழி என அதை பின்பற்றுதலை நிறுத்தி கொள்ள் வேண்டும். எங்கோ ஒரு சீக்கிய சாமியார் கொலை செய்யபட்டதால் மொத்த பஞ்சாப்பும் தீப்பற்றி கொண்டதே ஏன்? எவனோ செய்த கொலைக்கு பிரதமர் வரை மன்னிப்பு கேட்டரே? 50.000 மேற்பட்ட மக்கள் இந்தியா ஆசியுடன் கொன்றொழிக்கபட்ட திற்கு மன்னிப்பு கேட்பாரா?
மாற்றத்திற்கான வழி:
-------------------------------------------
மக்கள் போராட்டம் என்பது இந்த இம்சை பாதையை விட்டு வெளியில் வரவேண்டும் டெல்லி வாலாக்கள் செவுளில் நாலு அறைந்தாற்போன்று இருக்கவேண்டும். தமிழக மக்கள் தங்கள் போராட்ட பாதையை மாற்ற வேண்டும்!
இந்தி அரசியல் வியாதிகள்
(கவலையளிக்கிறது -வருத்தமளிக்கிற து- நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம்)
---------------------------------------------------------------------
இந்த மேற்கூறிய வாசகங்களை படித்தாலே முழு அரசியல்வியாதிகள ் ஆகிவிடலாம்.உண்ம ையில் இந்த இந்திகாரன்கள் தங்கள் மாநிலங்களின் பிரச்சனைக்கோ அல்லது தங்களது சமூகத்தவர்களுக் கு வெளி நாடுகளில் ஏற்படும் பிரச்சனைக்கோ இந்த சொல்லை உபயோகிப்பது இல்லை. நேரடியாக செயலில் இறங்குவதுதான் இவர்களது பாலிசி.மலெசிய தமிழர் போராட்டதில் இருந்து வளைகுடா நாடுகளில் தமிழர்கள் சிறையில் வாடிய போதும் இவர்கள் கூறியது மேற்கூறியவார்தை கள் தான். அதாவது இவர்களுக்கு அன்னிய செலவாணியை ஈட்டி தரும் எ.டி.எம் மிஷின் தானே தமிழர்கள்!தமிழீ ழத்தில் இருந்து தினம் தினம் 100க்கும் மேல் நமது உறவுகளை குண்டு வீசி கொலை செய்யும் இலங்கை அரசினை கண்டித்தும் அதற்கு முண்டு கொடுக்கும் இந்தி அரசினை கண்டித்தும் இங்கு கக்கூசு கழுவுபவர்கள் முதல் காய்கறி கடைக்காரர்கள் வரை போராடி பார்த்தாகிவிட்ட து ஆனால் இந்தி அரசு இம்மியளவும் நகர்கிற வழி தெரியவில்லை.தமி ழினத்தின் இந்த நிலைமைக்கு காரணம் என்ன?இந்தி அரசின் சட்டதிட்டங்களும ் மற்றும் அதை நடைமுறைபடுத்தும ் இந்திய ஆட்சியாளர்களே ஆகும்!
இந்த இந்தி ஆட்சியமைப்பு முறையில் சராசரி ஒரு சிங்கும் ஒரு தமிழனும் ஒரு கோரிக்கை மனுவோடு புதுடெல்லியில் உள்ள எதாவது ஒரு மத்திய அரசின் அமைச்சகத்தின் முன் நிற்கட்டும் யாருடைய மனு முதலில் பரிசீலிக்கபடும் என்பது நான் சொல்லிதான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை…ஏ ன் தமிழனுக்கு இந்திகாரனிடம் கெஞ்சி கூத்தாட வேண்டிய நிலைமை?எத்தனை சிங்குகள் மலையாளிகள் இப்போது அவர்கள் கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருக்கிறார்கள்?
மாற்றத்திற்கான வழி:
---------------------------------------------
சுயநலமற்ற தலைவர்களை எம்.பிக்களாக தேர்ந்தெடுப்பது .. வெளியுறவு மற்றும் முக்கிய பதவிகளை கேட்டு பெறுவது.. அதே பாணியை நாமும் பின்பற்ற வேண்டும் ..சில காலத்திற்காவது அவர்களை முக்கிய பிரச்சனைகளில் காக்க வைக்கவேண்டும். அப்போதுதான் நாமும் மனிதர்கள் என உணர்வார்கள்.நம் முடைய வேதனையும் வலியும் அவர்களுக்கு புரியும்.
தமிழக அரசியல் வியாதிகள்:sad:த ந்தி-தபால்-பொது குழு- செயற்குழு -அனைத்துகட்சி கூட்டம்-மத்திய அரசிற்கு தீர்மானம்)
-------------------------------------------------
தமிழக அரசியல் வியாதியாவதற்கு மேற்குறியவைகள் இருந்தால் போதும் வியாதி ஆகிவிடலாம் எவன் தமிழ்நாட்டில் இருந்து தந்தியடித்தாலும ் அது எங்கு செல்லும் என இங்குள்ள வியாதிகளுக்கு நன்றாகவே தெரியும்.. ஆகா தமிழ்நாட்டில் இருந்து தந்தி தபால் வந்ததா.. மிளகாய் பஜ்ஜியை அதில் வைத்து சாப்பிடுவோம் என இந்திகாரன் சாப்பிடுவான் என அனைவருக்கும் தெரியும்.ஆனாலும ் ஏன் அதையே தொடர்ந்து செய்கிறார்கள்?இ து புரியாமாலா இங்கு கட்சி நடத்தி கொண்டு உள்ளார்கள்? இது அவர்களுக்கும் தெரியும்!பாக் சல சந்தியின் அந்தபுரம் இருந்தாலேன்ன இந்த புறம் இருந்தாலென்ன?தம ிழர்கள் எதிரிகளே என இந்தி அரசு செயல்படுகிறதுஇவ ர்களுக்கு தமிழினத்தை புது டெல்லி ஏகாதிபத்தியதிற் கு எம்.பி சீட்டுகளாக மாற்றி யார் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்பதில் இவர்களுக்குள்ளே அறிக்கை அக்கபோர் சண்டை ஆகியவை ஏற்படுகின்றன.. புது டெல்லி இந்திக்காரன் வீசி எறியும் எலும்பு துண்டுகளுக்காக பதவி பணம் என ஒரே கொள்கை உடையவர்களாக உள்ளார்கள்!
சரி இவர்களை மாற்ற என்ன வழி?
--------------------------------------------------------------
1)ஒரு மாதம் இன உணர்வை கற்க சிங்களவனிடமோ அல்லது மாராத்திகாரனிடம ோ அல்லது கன்னடகாரனிடமோ ஒரு புரோகிறாம் போல செட் பண்ணி அனுப்பி வைக்கலாம்.
2)மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் உடன் அனுப்பலாம்..
3)தமிழ் ரத்தம் ஓடுகிறதா என ப்ள்ட் செக்கப் செய்யலாம்..
4)தமிழர் வேறு மாநிலங்களில் தாக்கபடும் போது மக்கள்காவல் படையாக தமிழர்களை காக்க இவர்களை நியமிக்கலாம்
5)வடக்கத்தியானுக்கு விளக்கு பிடிக்கும் வேலைக்கு நியமிக்கலாம்..
6)இந்தி கம் தமிழ் டிரான்சுலேட்டரா க கூலி வேலைக்கு நியமிக்கலாம் அப்போது தான் தமிழர்களை எப்படி மதிக்கிறார்கள் என தெரியவரும்
–இத்தனைக்கு பிறகும் இவர்கள் சரிவர வில்லை என்றால் மொத்த ரத்ததையும் உறிஞ்சிவிட்டு இந்திகாரன் ரத்ததை ஏற்ற வேண்டும்!
மக்களுக்காக:sad :மானாட மார்பாட- கலக்க போவது யாரு- சீரியல்கள்-இலவசங்கள்)
-------------------------------------------------------
தமிழக மக்கள் தங்களுக்கு எதிராகத் திரும்பி விட மாட்டார்கள். அப்படித் திரும்பாத வேலையைத் ஒருவருக்கு ஒருவர் கழுதறுத்து தமிழகத் திராவிடக் கட்சிகளே அவற்றின் ‘தொல்லை’காட்சிக ளே பார்த்துக் கொள்ளும் என்கிற நம்பிக்கையிலும் தெம்பிலும்தான், இவர்கள் தமிழர் பிரச்சினைகளை பற்றி கவலைப் படாமலும், அதில் அக்கறை காட்டாமலம் இருப்பது மட்டும் அல்ல, தமிழர்களுக்கு எதிராகவும் இந்திய ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
குறைந்த பட்சம் நம்முடைய தாய்மார்களுக்கு குடிசை தொழில் அல்லது நடுத்தர வர்க்கமானல் இணையத்தின் வழி எத்தனையோ முறைகளில் சம்பாதிக்க வழி உள்ளது. அவற்றினை கற்று கொடுங்கள்.இந்த சீரியல்கள் மற்றும் பிற ஈழவுகளில் இருந்து விடுபட செய்யுங்கள்.மரா த்திய வீரன் சிவாஜியை அவனுடைய தாயார் உருவாக்கியது போன்று நம்முடைய தமிழ்நாட்டிலும் ஒரு இனத்திற்காக போராடும் ஒப்பற்ற வீரனை நம்முடைய தாய்மார்களாலும் உருவாக்க முடியும்.ஒரு சீக்கிய இனத்திற்காக போராடிய பிந்துவாலேவிற்க ாக ..எங்கே நம்மை விட்டு பிரிந்து போய்விடுவார்களோ என இந்தி அரசு அவர்களை கண்டால் நடுங்குகிறது. எதிரியே நமது ஆயுதத்தை தீர்மானிக்கிறான ். எந்த காரணம் சொல்லி இந்த அரசு ஈழ தமிழர்களை கொன்று ஒழித்ததோ அதே ஆயுதத்தை நாமும் ஏந்துவோம் ! பிரிவினைக்காக பிறகு! நம்முடைய பிரச்சனைகளுக்கு ஈழ தமிழரின் வாழ்வுரிமைக்கு!
அத்வானியின் ரத யாத்திரை நிறுத்தப் பட்டதைக் காரணம் காட்டி பி.சே.பி, வி.பி.சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்க வில்லையா?
40 தமிழ் நாட்டு எம்.பி. க்களில் 10 பேர் மட்டும் அரசுக்கு எதிராக வாக்களித்திருந் தால் கூட அரசாங்கமே கவிழ்ந்திருக்கு ம்.
இதை துருப்புச் சீட்டாக பயன் படுத்தி மைய அரசை நெருக்கி ஈழப் பிரச்சினையில் தமிழருக்கு சாதகமாக நிலையை எடுக்கும்படி செய்து இருக்கலாம்.
அதுவும் அப்போதைய சூழ்நிலையில் மைய அரசின் தோழனாக, காவலனாக இருந்தது தமிழக அரசியல் கட்சிகள் தான், இடது சாரிகள் கை விட்ட நிலையில் தமிழக எம்.பி.க்களை அவர்கள் மிகவும் நம்பி இருந்தனர்.
வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கைக்கு நேரில் சென்று பார்க்க வேண்டும், பார்க்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும், இன்று போவார், நாளை போவார் என்று எதிர் பார்க்கப் பட்டு இரண்டு மாதம் ஆகியும் போகவில்லை.
பத்திரிகையாளர்க ள், “வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கைக்கு ஏன் போகவில்லை? ” என்று அவரை அடிக்கடி சந்திக்கும் நிலையில் இருந்த ஒரு மூத்த தமிழக அமைச்சரைக் கேட்ட போது,
“சந்திப்பது என்றால், கதவைத் திறந்து கொண்டு போய் பார்க்க முடியுமா? ” என்று எரிச்சலுடன் பதில் அளித்தார், தமிழ் நாட்டைச் சேர்ந்த மைய அரசிசில் கேபினெட் அமைச்சர் பதவி வகித்த மூத்த அமைச்சர் ஒருவர், திராவிடக் கட்சியை சேர்ந்தவர்.
எனவே எங்கே தவறு இருக்கிறது என்று பார்க்க வேண்டும்!
இந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் கட்ட பொம்மனுக்கு வாரிசு இருக்கிறதோ இல்லையோ, எட்டப்பனுக்கு பல வாரிசுகள் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
தொடர்ந்து விவாதிப்போம்.
நான் கீற்று இதழிலே முன்பே எழுதிய பின்னூட்டம் ஒன்றை மீண்டும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்:
ஈழம் பற்றி எரிகிறது. அங்கே எரியும் நெருப்பை அணைக்க வேண்டும். ஈழத்திலே தனி மாநிலம் அமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தனி ஈழம் அமைக்க வேண்டியதின் நியாயங்கள் உள்ளன. ஏன் என்றால் அங்கே தமிழர்கள் அழிக்கப் படுகின்றனர். தமிழ் மொழி அழிக்கப் படுகிறது.
ஆனால் இந்தியாவில் தமிழருக்கு ஆபத்து இல்லை. 'தமிழ் மொழி கட்டாயப் பாடமாக்ககப் பட வேண்டும்'- என்ற தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து குமரியை சேர்ந்த சிலர் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து, தமிழ் மொழியை படிப்பது நல்லது என்று கூறி விட்டது.
தமிழ் நாடு மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதே நேரம் தமிழும் காக்கப் பட்டு வருகிறது.
பிறகு எதற்கு பிரிவினை கோரிக்கை வைக்க வேண்டும்?
இவர்கள் முதலில் தனித் தமிழ் நாடு கேட்பார்கள். ஆனால் ஆரம்பிப்பது தான் இவர்கள். முதலில் இவர்கள் பேச்சைக் கேட்பவர்கள் "செயல் பட" ஆரம்பித்தால், கடைசியில் பாண்டியனார் ஐயா தான் அவர்கள் சொற்படி நடக்க வேண்டி இருக்கும்!
தனி தமிழ் நாடு உருவாகிறதோ இல்லையோ, தனி சோழ நாடு, தனி பாண்டிய நாடு, தனி சேர நாடு- இது மட்டும் அல்லாது தனி கொங்கு நாடு, தனி தொண்டை நாடு என்று ஆங்காங்கே "படைகள்" உருவாகும்.
அதிக பகுதிகளை தன்னுடைய "கண்டிரோலில்" வைத்து இருக்க ஒரு குழு மற்ற குழுவை தாக்கும். சிங்கள பேரின அடக்குமுறை ஈழத்திலே இருப்பது போல இங்கே இருக்கவில்லை என்பதால், இவர்களுக்கு பொது எதிரி இல்லை, தாங்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்ற குறிக்கோள் மட்டுமே! இடையில் அப்பாவிகள் மாட்டிக் கொண்டு சாவார்கள். தமிழ் நாடு இந்தியாவுக்குள் ளே பீஹாரைப் போல வன்முறை மாநிலமாக மாறும். இது தேவையா ?
அப்போது நீங்கள் எழுதுவதைக் கேட்டு நடக்க மாட்டார்கள்.
ஆனால் தமிழக மக்கள் வன்முறையை ஆதரிப்பதும் இல்லை. அனுமதிப்பதும் இல்லை.
இந்தியாவின் ஒருமைப்பாடு பற்றி, ஏன் இவ்வளவு அலட்டிக்கொள்ள வேண்டும் என்றால், நான் இந்தியாவின் 7 கோடி தமிழர் உட்பட எல்லா இந்தியரையும் நேசிக்கிறேன். ஈழத் தமிழரை நேசிக்கிறேன். அவர்கள் என் உறவு. இப்போது அவசர உதவி அவர்களுக்கு தான் தேவை. முள்வேலியின் நடுவே தமிழர்கள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். உறவுகள் பிரிக்கப் படுகின்றன. உலகிலே வேறு எங்கும் இல்லாத கொடுமை.
அதிலிருந்து அவர்களை மீட்டு எடுக்க சிங்கள அரசுக்கு அழுத்தம் குடுக்க வேண்டும். ஆனால் அதை விட்டு விட்டு இந்திய பிரிவினை பற்றி எழுதுவது ஏன்?
நான் மக்களின் கருத்ததைத் தான் எழுதுகிறேன். 7 கோடி தமிழரும் எழுதுவதில்லை. ஆனால் அவர்களுக்கு இது தெரியும்!
தமிழக மக்கள் பிரிவினையை, வன்முறையை ஆதரிப்பதும் இல்லை. அனுமதிப்பதும் இல்லை.
இந்தியா பிரிந்தால் பாகிஸ்தானும், சீனாவும், சிங்களமும் தமிழகத்தில் உள்ள தமிழரை சூறையாடும். அப்போது இணையத்தில் எழுதுவது அல்லாமல் வேறென்ன உங்களால் செய்யக் கூடும் நண்பரே ?
என்னுடைய எழுத்தில் சுயநலம் இல்லை. நான் ஈழத் தமிலரையும் நேசிக்கிறேன், இந்தியரையும் நேசிக்கிறேன்.
பிரிவினை கருத்துக்களால், தமிழக மக்கள் வாழ்வும் கெடும்! இந்திய பிரிவினை கருத்துக்களால் ஈழத் தமிழருக்கும் உபயோகம் இல்லை!
யோசித்திதுப் பதில் எழுதுங்கள்! எனக்கு உங்கள் மேல் நமபிக்கை உண்டு
தமிழ்நாடு தனியானால் இங்குள்ள தமிழ் மக்கள் சாதி அடிப்படையில் அடித்துக் கொள்வார்கள் என்று மிக கரிசனத்தோடு தான் சொல்கின்றீர்கள் . அந்தக் கரிசனத்தோடு தானே நீங்கள் இந்திய மன்னில் பல வர்ணங்களை உருவாக்கினீர்கள ். அந்தக் கரிசனத்தோடு தானே நீங்கள் பல மொழிகளை உருவாக்கினீர்கள ், குறிப்பாக தென்னிந்திய மொழிகளை?
ஈழத்தமிழ் சற்று வித்தியாசமான வட்டார வழக்காயிருந்தால ும் அதுவம் தமிழ் தான். அதே போன்று பேசப்பட்ட சேரநாட்டுத் தமிழைத் திட்டமிட்டுச் சிதைத்து, மளையாளம் என்ற வேற்று மொழியாக்கி, தமிழர்களைப் பிரித்தீர்கள். இதே போன்று தான் தெலுங்கும் கன்னடமும். அதன் விளைவு இன்று, தவித்த வாய்க்குத் தண்ணீர் தர மறுக்கிறான், மலையாளன், கன்னடன், தெலுங்கன். வேற்று இனமான நீங்கள் இங்கு நுழைந்ததன் விளைவு இது. இப்போது தமிழர்கள் அடித்துக் கொள்வார்கள் என்று நீங்கள் சொல்வதும், உங்களின் எதிர்காலத் திட்டம் என்னவென்று எங்களுக்குத் தெரிகிறது.
இந்த வேலையை தினமலர், குமுதம் போன்ற பத்திரிகைகள் செய்துகொண்டிருக ்கின்றன என்ற ஒரு குற்றச்சாட்டும் உள்ளது தோழரே! தமிழ்ச் சாதிகளில் சிண்டுமுடி. மேல்சாதிக்கும், தாழ்த்தப் பட்டோருக்கும் சிண்டுமுடி. இதெல்லாமும் இப்போதும் உங்கள் சமூகத்தால் நடத்தப்பட்டுக் கொண்டு தான் உள்ளது. நாங்கள் பெரும் சவால்களை எதிர்நோக்கித் தான் பயனிக்கிறோம். தாமதமானாலும் மக்கள் புரிந்து கொள்வார்கள் தோழரே! கவலைப்படாதீர்கள ்! இது ஒரு விழிப்பணர்வுக் காலம்!
"இந்தியா பிரிந்தால் பாகிஸ்தானும், சீனாவும், சிங்களனும் தமிழகத் தமிழரைச் சூரையாடுவார்களா ?" அடடே! எப்பேர்ப்பட்ட பார்ப்பனீயம் இது! நாசமாய்ப்போக! சிறிய தேசங்கள் தாங்கள் தனித்தனியாக, பெரிய தேசங்களால் ஒடுக்கப்படும் வாய்ப்புக்கு எதிராக, இந்த சிறிய தேசங்கள், தங்களுக்குள் ஒன்றியம் அமைத்துக் கொள்ளலாம் என்று நான் வைத்த திட்டைத்தை கண்டுகொள்ளாமல் எப்படி ஐயா இப்படி உங்களால் எழுத முடிகிறது? இதைத்தான் பாரப்பனீயம் என்பது!
இந்தியா என்ற ஒற்றை வல்லரசால் தான் இந்தப் பிராந்தியத்தில் பதற்றம் நிலவுகிறது. தர்மம் அழிகிறது! இந்தியா இன ரீதியாகப் பிரிந்து, மற்ற அண்டை நாடுகளோடும் சேர்ந்து ஒன்றியம் அமைத்துக் கொண்டால், இங்கு ஒரு வல்லரசு இல்லாமல் போவதால், இங்கு அமைதியும், சுகவாழ்வும் நிலவும். இது ஒரு ஆழமான உண்மை. இதை அப்படியே விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டு இந்தப் புறம்போக்கு எழுதுகிறது! பெரிய நாடுகள் உலகின் அச்சுறுத்தலுக்க ு காரணமாக உள்ளது. அனைத்து பெரிய நாடுகளும் சிறிய நாடுகளாகப் பிரிந்தால்தான், உலகில் அமைதி நிலவும் என்பதும் எனது இன்னுமொரு கருத்து.
இந்தியா இன ரீதியாக ஏன் பிரிய வேண்டும் என்று ஒரு சான்று வழி விளக்குகிறேன்.
நானும் எனது சகோதரர்களும் ஒரு தாய்வயிற்று உடன்பிறப்புகள். ஆனால், இன்று எமது பெற்றோரின் உடைமைகளைப் பிரித்துக் கொண்டு, தனித்தனிக் குடும்பமாக, காம்ப்பவுண்டு, கதவுகளோடு தனித்தனி வீடுகளில் தான் வசிக்கிறோம். நான் எனது சகோதரர் விட்டுக்குச் சென்று, "காலிங் பெல்லை" அழுத்தி அழைக்கிறேன். அவர் கதவைத்திறந்து கொண்டு வௌியில் வந்து, இன்முகத்தோடும், நலம் விசாரிப்புகளோடு ம் எங்களை உள்ளே அழைத்துச் செல்கிறார். அங்கே கூடிக்குலாவி, கதைகள் கதைத்து, விருந்துண்டு மகிழ்ந்து, விடைபெருகிறேன். அவர் தெருவிற்கு வந்து, பரிசுகள் கொடுத்து, வாழ்த்தி வழியனுப்புகிறார ். எங்களுக்கு ஏற்படும் திடீர் நெருக்கடிகளை, கணக்கு வழக்கு பார்க்காமல் உதவி செய்து, எதிர் கொள்கிறோம்.
ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள், ஒரே தாய்மொழி, ஒரே சமயம் என்று இருந்தும், ஒன்றாய் வாழ்ந்து அடித்துக் கொள்வதை விட, பிரிந்து வாழ்ந்து அன்பு பாராட்டி மகிழ்கிறோம். இங்கே உங்களது பார்ப்பன சகோதரர் விசு கொடுத்த, "சம்சாரம் அது மின்சாரம்" படத்தின் மூலம் கூட்டுக்குடும்ப சிக்கல்களையும், அக்கதையின் முடிவையும் சற்று நினைவு கூறலாம்.
கதை இப்படி இருக்கும் போது, ஒரு இன மக்கள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் வாழ்ந்த தாயகத்தில், அவர்களின் மொழியோடு, பண்பாட்டோடு, பாரம்பரியத்தோடு , தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொண்டு வாழும் உரிமை கொண்டவர்கள். இதைத் தான் தன்னுரிமை என்பார்கள். Right to Self Determination!
இத்தகைய நிலத்தில் மாற்றான் வந்து குடியேறுவது, அந்த மன்னின் தன்மையை மாற்றிவிடும். பினக்குகள் உண்டாகும். ஆரியன் வந்ததால் தரித்திரம் பிடித்தது இந்தியாவுக்கு! சிங்கள வந்தேறிகளால் மன்னின் மக்களான தமிழர்கள் இனப்படுகொலைகளுக ்கு ஆளாகிறார்கள். சிம்புத்தேவனின் 23ம் புலிகேசி படத்தில் வரும் வசனம் "திறந்த வீட்டில் நாய் நுழைவது போல, கண்டவனும் இங்கே வந்து நுழைகிறான்" என்பது ஒரு சீரியஸான விடயம்.
தமிழ் நாட்டில் பண்பாடுள்ளது, வளரச்சி உள்ளது என்பதால் இந்தியர் அனைவரும் இங்கு வந்து குடியேறினால், இந்தப் பண்பாடும் அழியும், அதோடு அந்த சீரிய பண்பாட்டு மக்களும் அழிவார்கள். ஈழம் அதற்கு ஒரு சான்று. நல்லவர்கள் வாழ்வதில்லை. வல்லவர்கள் வாழ்வார்கள். அன்பைச் சொன்ன பௌத்தம் வாழவில்லை இந்தியாவில். கொலை செய்யச் சொன்ன பார்ப்பன இந்து மதம் வாழ்கிறது. எனவே நல்ல தமிழர்களுக்கு ஒரு வேலி தேவை. அதுவே தமிழ் தேசியம்.
தோழர் சிறத்தை அவர்கள் எடுத்துக் காட்டிய பேராசிரியர். மா. லெ. தங்கப்பாவின், கீற்றில் வௌியான
"தமிழினம் கொஞ்சமும் தற்காப்புணர்வு அற்றிருப்பது ஏன்?"
என்ற கட்டுரை எனக்குள் ஒரு பெரும் பாதிப்பை உண்டு பண்ணியது. மன்னுக்கேற்ற குணம் என்ற ஒன்று உண்டு என்பதை அவரது அருமையான கட்டுரை வாயிலாகத்தான் நான் உணர்ந்து கொண்டேன்.
தாய்ச்சமூகமாகிய தமிழன் அடிப்படையில் நல்லவன். வரண்ட பனிப்பிரதேச ஆரியன் சூழ்ச்சிக்காரன் , தன்னலமிக்கவன். வெரும் 3% மட்டுமே உள்ள ஆரியன், 80% மன்னின் மைந்தர்களை, தமது சவுகரியத்துக்கா க, டெல்லிக் காரனின் அடிமையாக வைத்திருக்க, இவ்வளவு எழுதுகிறான். அவன் தனது நலனை மட்டும் நினைத்து எழுதுபவன். நாம் இந்தியர்களை நேசத்தோடு தான் பார்க்கிறோம். அனைத்து இந்தியர்களுக்கா ன நல்லதைத்தான் நாம் சொல்கிறோம்.
நமது சிந்தனைகள் அனைவருக்குமான அப்பழுக்கற்ற சிந்தனைகள்! பார்ப்பனர்களின் நலத்தைப் பேண, இந்திய ஒன்றியத்தில் வழியுள்ளது. ஆனால், இப்போது இவர்கள் கூத்தடிப்பது போல, இந்திய ஒன்றியத்தில் கூத்தடிக்க இயலாது. அது தான் இவர்களின் சிக்கல்.
அவர்களால் விட்டுக் கொடுக்க இயலவில்லை என்றால், பழி நமக்கேது?
//இவர்கள் முதலில் தனித் தமிழ் நாடு கேட்பார்கள். ஆனால் ஆரம்பிப்பது தான் இவர்கள். முதலில் இவர்கள் பேச்சைக் கேட்பவர்கள் "செயல் பட" ஆரம்பித்தால், கடைசியில் பாண்டியனார் ஐயா தான் அவர்கள் சொற்படி நடக்க வேண்டி இருக்கும்!
தனி தமிழ் நாடு உருவாகிறதோ இல்லையோ, தனி சோழ நாடு, தனி பாண்டிய நாடு, தனி சேர நாடு- இது மட்டும் அல்லாது தனி கொங்கு நாடு, தனி தொண்டை நாடு என்று ஆங்காங்கே "படைகள்" உருவாகும்.
அதிக பகுதிகளை தன்னுடைய "கண்டிரோலில்" வைத்து இருக்க ஒரு குழு மற்ற குழுவை தாக்கும். சிங்கள பேரின அடக்குமுறை ஈழத்திலே இருப்பது போல இங்கே இருக்கவில்லை என்பதால், இவர்களுக்கு பொது எதிரி இல்லை, தாங்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்ற குறிக்கோள் மட்டுமே! இடையில் அப்பாவிகள் மாட்டிக் கொண்டு சாவார்கள். தமிழ் நாடு இந்தியாவுக்குள் ளே பீஹாரைப் போல வன்முறை மாநிலமாக மாறும். இது தேவையா ?
அப்போது நீங்கள் எழுதுவதைக் கேட்டு நடக்க மாட்டார்கள். //
இந்த நிலையை தடுக்கும் சக்தி உங்களுக்கு இருக்கிறதா?
நீங்கள் சொன்னால் கேட்பார்களா?
தமிழகம் பீகார் மாதிரி ஆகிவிடும் என்று அதீத கவலைப்படுகிறீர் கள். தன் இன மக்கள் கொடூரமாக, இந்திய அரசின் ஆதரவோடு, இலங்கையில் கொல்லப்பட்ட போது, இங்கே வன்முறை வெடித்திருக்க வேண்டும். நடந்ததா தோழரே! ஆனால், ஆஸ்திரியாவில் நடந்த கோஷ்டி சண்டைக்கு, பஞ்சாபே எரிந்தது. புரிகிறதா? தமிழன் அப்படிப்பட்டவன் இல்லை. கவலை வேண்டாம்! தமிழன் என்றோரு இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டு!
நாங்கள் கேட்பது வீண் சவடால் தமிழத்தேசியம் அல்ல. நாங்கள் திட்டமிடும் தமிழத் தேசத்திற்கான வரையறைகளையும் நாங்கள் ஆராயத் தொடங்கி விட்டோம். ஒரு வலுவான தேசத்தைக் கட்ட அடிப்படையானது, வலுவான அரசமைப்புச் சட்டம். அடுத்தது சமூகவியல் கோட்பாடு. இந்த இரண்டுமே ஒன்றோடொன்று தொடர்புடையவை தான். இவற்றை நடமுறைப்படுத்து ம், கூடுமானவரை ஓட்டைகளில்லாத அரசியல். நாங்கள் இவை நோக்கி திட்டமிடத் தொடங்கி விட்டோம் தோழரே!
தனித்தமிழ் நாடு நளையே அமையப் போவதில்லை. அது அமைவதற்குள் அந்த அரசு, இந்த உலகச் சூழலில் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய அறிவும், பயிற்சியும் தமிழ் மக்களுக்கு வழங்கப் பட்டுவிடும். கவலை வேண்டாம் தோழரே! நாங்கள் இத்திசையில் தொலை நோக்கோடு செயல்படத் தொடங்கி விட்டோம்.
எனது சிந்தனைகள் சிவற்றை இங்கே வைக்கிறேன்.
தமிழ்த்தேசத்தின் அறக்கோட்பாடு:
*தனது தேசத்திலுள்ள மைநீரிட்டிகளைத் தமது சமூகமாகக் கருதி அவர்களது சமூக உரிமைகளையும், தனிமனித உரிமைகளையும் பேணும்.
*தனக்கான தற்காப்பு ராணுவத்தை மட்டும் வைத்திருக்கும். மன்னுக்கோ, பொருளுக்கோ மாற்றானை வம்புக்கிழுக்காது.
*வள்ளுவம் சார்ந்த அறவியலை உலகில் பரப்பி, சண்டைகளற்ற தேசங்களாக தொடக்கத்திலும், ராணுவமற்ற தேசங்களின் கூட்டான (ஒன்றியம்) சர்வதேசியத்தைக் கட்டப் பாடுபடும். இதன் இயல்பான படிநிலை வளர்ச்சி அனுஆயுத அழிப்பில் நிறைவடையும்.
*எந்த ஒரு மதமும் அரசு மதமாக இருக்காது. அனைத்து மதங்களிலும் பிற்போக்குத் தனங்களைக் களைய, அரசு, அந்தந்த மதமக்களின் ஜனநாயக ரீதியான அனுகுமுறையோடு முயலும்.
*மத நம்பிக்கையை தனிமனித உரிமைக்குள் அமைக்கும்.
சமூகவியல் மற்றும் அரசமைப்பு பற்றிச் சில:
*நீதித்துறை, தேர்தல் ஆணையம், புலனாய்வுத்துறை , நிதி ஆய்வுத்துறை, அரசு ஆகியவை தன்னிச்சையாகச் (ஒன்ன்றை ஒன்று கட்டுப் படுத்தாமல்) செயல்படும்.
*பொது உடைமை தான் அடிப்படை சமூகவியலாக இருக்கும். தனிநபர் முயற்சிகளை ஊக்கப் படுத்த, சிறு தொழில்கள் மட்டும் தனியாரிடம் இருக்கும். பெருந்தொழில்கள் அனைத்தும் அரசே நடத்தும்.
*அறிவுத்திறன், உடலுழைப்பு அடிப்படையில் வரையறுக்ப்பட்ட உச்ச அளவுக்குட்பட்டு சம்களங்கள் அமைக்கப் பெறும்.
*உழவுத் தொழிலுக்கு லாப அடிப்படையில் கொள்முதல் விலை நிர்ணயித்து, அரசே கொள்முதல் செய்து, சலுகை விலையில் உணவுப் பொருள்களை அனைத்து மக்களுக்கும் வினியோகம் செய்யும்.
*ஒரே அரசு வங்கியின் கிளைகள் தான் தமிழ்த்தேசமெங்க ும் இயங்கும். ஒரு நபருக்கு ஒரே ஒரு வங்கிக் கணக்கு மட்டுமே இருக்கும்.
*50 ரூபாய்க்கு மேல் நாணயங்கள் அச்சடிக்கப்படமா ட்டாது. அனைத்து மிகைத்தொகை பரிவர்த்தனைகளும ் காசோலை, வரைவோலை மற்றும் டெபிட் கார்டு வாயிலாக மட்டுமே இருக்கும். credit card எனப்படும் கடன் அட்டைகள் இருக்காது.
*தங்கம் முதலிய பொருட்கள்ளை அரசிடமிருந்து மட்டுமே வாங்க, விற்க இயலும். இவற்றில் தனிநபர் வணிகம் தடைசெய்யப்படும்.
*அனைவருக்கும் அடையாள அட்டை விணியோகிக்கப்பட ்டு (புகைப்படம், கைரேகை அல்லது pupa) தேர்தல்கள் பாதுகாப்பான இணைய தளங்கள் மூலமே நடத்தப்படும்.
*வகுப்புவாரி இட ஒதுக்கீடு அமுலில் இருக்கும். யாருக்கும் ஓரவஞ்சனைக் கிடமில்லை.
*கட்சிகளற்ற ஜனநாயகம் நடைபெறும். இதற்குறிய கட்டமைப்புகள் உருவாக்கப்படும் . ஜனநாயகத்தில் வயதுக்கு வந்த அனைத்து மக்களுக்கும் பங்கிருக்கும்.
சுற்றுச் சூழலியல் அடிப்படையில் மட்டுமே தொழில்களுக்கும் , தொழில் முறைகளுக்கும் அனுமதி வழங்கப்படும். (அரசு தொழில்கள் உட்பட).
*இறுப்புப் பாதை போக்குவரத்து மட்டுமே முதன்மைப் போக்குவரத்தாக இருக்கும். தேவையான புதிய வழித்தடங்கள் போர்க்கால அடிப்படையில் நிறுவப்பெரும். ஒவ்வொரு வட்டத் தலைநகருக்கும் இறுப்புப்பாதை இணைப்பு கட்டாயமாக இருக்கும். பேருந்துகள், தொடர்வண்டிகளின் பயணத்திட்டங்களோ டு ஒருங்கிணைத்து செயல் படுத்தப்படும். சிறிய வழித்தடங்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும்.
*சமச்சீர் கல்வி, தமிழ் வழியில் வழங்கப்படும். 5ம் வகுப்புக்கு மேல் ஆங்கிலமும், 8ம் உகுப்புக்கு மேல், ஆங்கிலம் உட்பட, அனைத்து உலக மொழிகளும், ஒரு விருப்பப்பாடமாக வழங்கப்படும்.
*10 வகுப்புக்கு மேல் அனைவருக்கும் அரசு செலவில் வடுதியில் தங்கிப்படிப்பது கட்டாயமாக்கப்பட ும். அங்கே, உழவுத்தொழிலும் மணவர்களின் பங்களிப்போடு பயிற்றுவிக்கப்படும்.
*பட்டய வகுப்புகளில் ராணுவப்பயிற்சி கட்டாயப்பாடமாக கொடுக்கப்படும். உடற்பயிற்சி அதன் உள்நோக்கமாகவும் , மக்கள் ராணுவம் அதன் எதிர்பார்ப்பாகவ ும் இருக்கும்.
*குறைந்த அளவு முழுநேர ராணுவமும், அவசர காலங்களில் மக்கள் ராணுவமும், நாட்டைக்காக்கும ்.
*Having accounts in any other bank, other than the government bank, would be banned.
இன்னும் எவ்வளவோ தோழரே! எங்களிடம் திட்டங்கள் உள்ளன. இது வெற்றுக் கூச்சல் அல்ல. நாங்கள் இப்போதே செயல்படத் தொடங்கி விட்டோம்.
எனவே, குருகிய பார்வைகளுக்கு இங்கு இடமில்லை!
வளமான தமிழத்தேசத்தைக் கட்டுவோம். வள்ளுவத்தை உலகெலாம் பரப்புவோம்.
(2000 ஆண்டுகளாக தமிழகத்தில் வாழும் பார்ப்பனர்கள் தமிழர்களே! ஒத்துழைத்தால் அனைவருக்குமான அன்பு தேசம் இங்கு உண்டு.)
உழைப்பு இருக்கிறது. நேர்மையும் இருக்கிறது. ஆனால் நான் சொல்வதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
நான் பார்ப்பனர்களுக் காகக் கவலைப் படவில்லை. அவர்கள் இருக்கிற வூரிலே செட்டில் ஆகி விடுவார்கள். அவர்கள் மக்களோடு மக்களாகவே வொர்க் அவுட் ஆகி விடுவார்கள். எனவே என்னுடைய கவலை பார்ப்பனர்களைப் பற்றியல்ல.
என்னுடைய கவலை 7 கோடித் தமிழர் உள்ளிட்ட 120 கோடி இந்தியர்களைப் பற்றியது.
ஈழத்திலே சிங்களர் தமிழர்களைக் கொன்றும், தமிழ்ப் பெண்களைக் கர்ப்பலித்தும் இனப் படுகொலை செய்த இடத்திலேயே, தமிழர் அமைப்புகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை. இருந்தால் இன்றைக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?
நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள். தமிழர் அமைப்புகளிடையே சுமூக நிலை இருந்திருந்தால் , இன்றைக்கு முள் கம்பிக்குள் மிருகத்தை விட அவதியான நிலையில் ஒடுங்கும் கண்ணீர்க் கதை உருவாகியிருக்கு மா?
நீங்கள் இங்கெ இருக்கும் தமிழர், அவர்கள் எப்படிப்பட்டவர் கள்- நான் தமிழரைப் பழிப்பதாக எண்ணாதீர்கள்- 6 மாதம் முன்பு தேர்தலில் அவர்கள் அடித்த பல்டிகளும், சரணாகதிப் படலங்களும்... நாடு அறிந்ததுதானே- அவர்கள் கட்டுப்பாடோடு நடந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்கிறீர்களா ?
உங்கள் திட்டமிடல் எல்லாம் அருமையாக இருக்கிறது. ஆனால் நீங்கள் ஜெர்மனியில் பிறந்திருக்க வேண்டியவர். முதல் உலகப் போரில் கட்டம் கட்டப் பட்டு, ஒரு ரொட்டி பொட்டலம்- 350 மார்க் -அளவுக்கு பொருளாதாரம் அழிந்த நிலையில் இருந்த நாட்டை உலகையே அஞ்ச வைக்கும் அளவுக்கு மீள வைத்தான் ஹிட்லர் என்றால், ஜெர்மானியர்கள் கட்டுப்பாட்டுக் கும், ஈடுபாட்டுக்கும் அந்த அளவு பெயர் போனவர்கள்.
ஆனால் நீங்கள் கட்டும் ஆகாயக் கோட்டைகள் யாரை நம்பி?
இந்தியர்கள் நல்லவர்கள், அப்பாவிகள், ஆனால் நிதானம் இல்லதவர்கள் , எது நல்லது எது கெட்டது என்று யொசிக்காமலே செயலில் இறங்குபவர்க ள்.
ஒரு குவார்ட்டரிலே காணமல் போய் விடும் அந்தக் கட்டுப்பாடு. ஒரு டாஸ்மாக் கடை தனது கட்டுப்பாட்டில் வரும் என்றால் ஜெர்மானியரும், ஜப்பானியரும் வியக்கும் வண்ணம் போர் நடத்துவான் இந்தியன்.
அதிக பகுதிகளை தன்னுடைய "கண்டிரோலில்" வைத்து இருக்க ஒரு குழு மற்ற குழுவை தாக்கும். மாவட்டத்துக்கு மாவட்டம், வூருக்கு வூர், தெருவுக்கு தெரு போர் நடக்கும். இது அதீத கற்பனை அல்ல.
இரண்டு நாளைக்கு முன் சென்னைக் கடற்கரையில் நட பெற்ற வீரப் போரைப் பற்றி அறிந்திரிப்பீர் கள்.
சிறு பிரச்சினையைக் கூட பேசித் தீர்த்துக் கொள்ளும் நிதானம் இல்லாத மன நிலையில்
இருக்கிறொம் - வரப்பு பிரச்சினையில் விட்டா குடுப்பார்கள்?
இந்தியர்கள் நல்லவர்கள், அப்பாவிகள், ஆனால் நிதானம் இல்லதவர்கள் , எது நல்லது எது கெட்டது என்று யொசிக்காமலே செயலில் இறங்குபவர்க ள். அவர்கள் பிரிந்தால் இந்த நாடு முழுவதும் சுடுகாடு ஆகிவிடும்.
உங்கள் திட்டங்கள் எல்லாம் சிறந்தவை தான். அதை ஏன் இந்தியா முழுமைக்கும் அமுல் படுத்தக் கூடாது?
7 கோடித் தமிழருக்கு இருக்கும் வலிமையை விட 120 கோடி இந்தியராக இருக்கும் போது வலிமை அதிகம் இல்லையா?
நீங்கள் ஏன் இந்தியாவின் சாமானிய மக்கள் மேல் நம்பிக்கை வைக்கத் தயங்குகிறீர்க ள்?
இந்தியா,தனி தனி சிறு சிறு குட்டி நாடுகாளாகப் பிரியுமானால் என்ன நடக்கும்?
இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் பாகிஸ்தான், வங்க தேசம், பர்மா, சீனா, ஆகிய் நாடுகளில் சன நாயகத்துக்கு என்ன மதிப்பு என்பது நாம் அனைவரும் அறிந்ததே! இராணுவ ஆட்சியே பெரும்பாலான நேரங்களில் நடை பெறுகிறது.
இலங்கையில் உள்ள " சன நாயகம்" எப்படிப்பட்ட "மக்கள் பாதுகாப்பு சன நாயகம்"" என்பதும் நாம் அறிந்ததே!
நேபாளம் எந்த வழியில் செல்லும் என்று அதற்க்கே தெரியவில்லை!
பெரிய நாடாக இந்தியா இருக்கும் போதே 1962ல் நேரு மாமா பறக்க விட்ட புறாவை, சீனத்து தோழர்கள் சிவக்க வறுத்து விட்டனர்.
இந்த நிலையில் இந்தியா குட்டி குட்டி நாடாக
'சுய நிர்ணயம்' செய்து கொண்டால், மேற்கு வங்கத்தை பங்களாதேஷ ஆக்கிரமிக்கும். காஷ்மீரை (இப்போது இந்திய ) இரு தூண்டாக்கி பாகிஸ்தான், சீனா பிரித்துக்கொள்ள ும்.
ராஜஸ்தான், குஸராத், பஞ்சாப் ஆகியவற்றை பாகிஸ்தான் எடுத்துக் கொள்ளும்!
அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்கள் சீனாவுக்கு இரையாகும்!
தமிழ் நாட்டில் சிங்களன் புகுந்து ஈழத்தில் செய்தது போல, தமிழ் நாட்டையும் பாழ் பாணமாக்கி, தமிழரை சிங்களருக்கு முழு அடிமை ஆக்குவான்.
பெரிய அளவு உலக அறிவு இல்லாவிட்டாலும் இதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு இந்தியருக்கு அறிவு உண்டு.
120 கோடி இந்தியருக்கு இது நன்றாகத் தெரியும்!
7 கோடி தமிழருக்கு இது மிக மிக நன்றாகத் தெரியும்!
இந்தியாவை ஒற்றூமையாக வைத்து இருப்பது, இந்திய ஒற்றூமைக்கு பாதுகாவலன் ஆக இருப்பது அதன் 120 கோடி மக்கள்தான்!
உங்கள் உழைப்பை விழலுக்கு இறைத்த நீராக சேதாரப் படுத்த வேண்டாம். இந்திய நாட்டு மக்களின் அறிவுக் கண்ணைத் திறக்க உதவுங்கள், எல்லா இந்தியரும், 120 கோடிப் பேரும் உங்கள் பின்னே அணிவகுப்போம், நியாயத்தின் பக்கம் இருப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்றிலிருந்து இன்றுவரை சுற்றியுள்ள நாடுகளில் தனது மூக்கை நுழைத்துக் கெடுத்துக் கொண்டிருப்பது இந்தியா என்ற இந்த "பர்ப்பன" தேசம் தான்!
இன்று நேபாளத்தில் ஏற்படுத்தப் பட்டிருக்கும் குழப்பங்களுக்கு ம் இந்த பார்ப்பன இந்தியா தான் காரணம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
ஈழத்தையும், இலங்கையையும் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை!
பாங்களா தேஷிலே அன்றிலிருந்து இன்றுவரை இந்தியா குறுக்கிட்டுத் தான் வருகிறது!
பர்மாவின் ராணுவ ஆட்சிக்கு, சீனாவோடு சேர்ந்து முட்டுக் கொடுத்து நிற்பது இந்தியா தான்.
பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலு ம் இந்தியா செய்யும் அட்டூழியம் கொஞ்ச நஞ்சமல்ல!
இந்தியா என்ற பாரப்ப்ன தேசம் இல்லாமல் போனால் தான், இந்தப் பகுதிக்குப் பிடித்த தரித்திரம் தீரும்.
இந்திய உபகண்டத்தில் என்று பார்ப்பான் நுழைந்தானோ அன்றே பிடித்தது தருத்திரம் எங்களுக்கு.
நான்கு மாதங்களாக என்மின மக்கள் முள்வேலியில்! அங்கு நடக்கும் கொடுமைகள் வௌியில் எதுவும் தெரியவில்லை! பெண் பிள்ளைகள் கூட பெற்றோரிடமிருந் து பிரிக்கப் பட்டுள்ளனர். அவர்களின் கதி தெரியவில்லை. இதைத்தடுக்க இந்த காந்தி தேசம், ஒரு மசிரையும் புடுங்கவில்லை! புறம்போக்கே! இந்தக் கஷ்டங்களை உனது இனம் முன்பு யூதனுக்குக் கொடுத்தது. இன்று இது எம்மின மக்களுக்குக் கொடுக்கிறது. இந்தத் துன்பங்கள் நீ இதுவரை அனுபவிக்காதது! அது தான் இங்கு பிரச்சினை. உம்மக்களை அந்நிலையில் நிறுத்திப் பார். அப்போது புரியும் அதன் ஞாயம். நீ கொடுத்ததெல்லாம் திரும்பிப் பெறும் காலம் வரும்! நிச்சயம் வரும்!!!!!!!!!!
இந்த அயோக்கிய தேசத்துக்கு இவ்வளவு முட்டுக் கொடுப்பா?
பாரப்பனீயம் என்பது திருத்த முடியாதது! இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீங்கள் தெரிந்தே, போற்றி வளர்த்தப் பண்பாடு.
எனது மனம் இறுகுகிறது! ஒழிக பார்ப்பனீயம்!!!!!!!!!!
இனி எனது பொன்னான நேரத்தை வீண்டிக்க மாட்டேன்!
India is 'losing Maoist battle' says Indian Prime Minister "India's Prime Minister Manmohan Singh says his country is losing the battle against Maoist rebels. Mr Singh told a meeting of police chiefs (14 September 2009) from different states that rebel violence was increasing and the Maoists' appeal was growing... The rebels operate in 182 districts in India, mainly in the states of Jharkhand, Bihar, Andhra Pradesh, Chhattisgarh, Madhya Pradesh, Maharashtra and West Bengal. In some areas they have virtually replaced the local government and are able to mount spectacular attacks on government installations. "
Thanks tamilnation.org!
--------------------------------
Well Done, Mr. Singh!
The Tamil Curse would destroy your nation & with it, the nastiest people of the world!
It is bound to happen!
RSS feed for comments to this post