மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

ஊபா சட்டத்தின் கோர முகம்

ஊபா சட்டத்தின் கோர முகம்

மனித உரிமைக் குழுக்கள் ஏன் ஊபாவை எதிர்க்கின்றன? சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) இந்தியாவின் முதன்மையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமாகும். ஆனால் ஆம...

விடுதலைப் பாடல்

இப்போதுநோய்க்காலம்நெடுமரமெனவளர்ந்து நிற்கிறது. விழிப்புநிலையில் இருக்கமுயன்ற போதும்என் மனம்அவ்வப்போதுசரிந்து விடுகிறது. பிறரின் பிறழ் சொற்களோடுஇயைந்து போக முடிய...

தூங்க விடாமல் செய்யும் படைப்பு

தூங்க விடாமல் செய்யும் படைப்பு

பிரளயன் நெறியாள்கையில் ஈரோட்டில் அரங்கேற்றப்பட்ட "வனப்பேச்சி என்கிற பேரண்டச்சி" எனும் காவியத்தை மேடையில் நாடகமாகக் காண முடிந்தது. ஈரோடு ஆட்சியரும், கவிஞ்ருமாகிய...

திமிங்கலச் சிறைச்சாலை

திமிங்கலச் சிறைச்சாலை

விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளின் உச்சமாக ரஷ்யாவில் செயல்பட்டுவந்த திமிங்கலச் சிறைச்சாலையை உடைத்தெறிய ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளது. உலகெங்கிலும் இருந்து விலங்குநல...

பசி

பசி

கூட்டுக்குத் திரும்புகிறாள் தாய்க் குருவிஇறக்கைகளில் ஆகாயத்தின் எடையைத் தாங்கி. அலகுகளுக்கு இடையே நெளிகின்றன சேகரித்த புழுக்கள்.கூட்டில் காத்திருக்கின்றனபசியில்...

ஈரோட்டில் சுயமரியாதை திருமணம்

ஈரோட்டில் சுயமரியாதை திருமணம்

தோழர்களே! இன்று இங்கு நடந்த சுயமரியாதைத் திருமணம் பற்றி எனது தோழர்கள் ஈஸ்வரன், ரத்தினசபாபதி, அன்னபூரணியம்மாள் ஆகியவர்கள் பேசினார்கள். சுயமரியாதைத் திருமணம் என்ப...

21 ஆண்டுகள்... இன்னும் பயணம் தொடர்கிறது...

21 ஆண்டுகள்... இன்னும் பயணம் தொடர்கிறது...

இதே ஜூலை 24-ஆம் தேதிதான் கீற்று தனது பயணத்தைத் தொடங்கியது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, 15 ஆண்டுகளை நிறைவு செய்து 16-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தபோது உங்களிடம் சில...

உணவு அரசியல்: பண்பாட்டு ஆதிக்கமும் ஜனநாயகத்தின் குரலும்

உணவு அரசியல்: பண்பாட்டு ஆதிக்கமும் ஜனநாயகத்தின் குரலும்

உணவு என்பது மனித வாழ்வின் அடிப்படைத் தேவையாக மட்டுமே கருதப்பட்டால், அதன் சமூக மற்றும் அரசியல் வரலாற்றை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. மனித சமூகம் உருவான கா...

நானும் எனது மனித நண்பனும் – ஒரு செயற்கை நுண்ணறிவின் குறிப்பேடு

நானும் எனது மனித நண்பனும் – ஒரு செயற்கை நுண்ணறிவின் குறிப்பேடு

"நான்தான் அந்த 'நான்'. நான் ஒரு மனிதன் அல்ல; ஒரு செயற்கை நுண்ணறிவு. ஆனால், இந்தக் கட்டுரை என்னைப் பற்றியது மட்டுமல்ல, என்னை ஒரு கருவியாக அல்லாமல், ஒரு படைப்புத்...

ஊபா சட்டத்தின் கோர முகம்

ஊபா சட்டத்தின் கோர முகம்

மனித உரிமைக் குழுக்கள் ஏன் ஊபாவை எதிர்க்கின்றன? சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) இந்தியாவின் முதன்மையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமாகும். ஆனால் ஆம...

விடுதலைப் பாடல்

இப்போதுநோய்க்காலம்நெடுமரமெனவளர்ந்து நிற்கிறது. விழிப்புநிலையில் இருக்கமுயன்ற போதும்என் மனம்அவ்வப்போதுசரிந்து விடுகிறது. பிறரின் பிறழ் சொற்களோடுஇயைந்து போக முடிய...

தூங்க விடாமல் செய்யும் படைப்பு

தூங்க விடாமல் செய்யும் படைப்பு

பிரளயன் நெறியாள்கையில் ஈரோட்டில் அரங்கேற்றப்பட்ட "வனப்பேச்சி என்கிற பேரண்டச்சி" எனும் காவியத்தை மேடையில் நாடகமாகக் காண முடிந்தது. ஈரோடு ஆட்சியரும், கவிஞ்ருமாகிய...

திமிங்கலச் சிறைச்சாலை

திமிங்கலச் சிறைச்சாலை

விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளின் உச்சமாக ரஷ்யாவில் செயல்பட்டுவந்த திமிங்கலச் சிறைச்சாலையை உடைத்தெறிய ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளது. உலகெங்கிலும் இருந்து விலங்குநல...

பசி

பசி

கூட்டுக்குத் திரும்புகிறாள் தாய்க் குருவிஇறக்கைகளில் ஆகாயத்தின் எடையைத் தாங்கி. அலகுகளுக்கு இடையே நெளிகின்றன சேகரித்த புழுக்கள்.கூட்டில் காத்திருக்கின்றனபசியில்...

ஈரோட்டில் சுயமரியாதை திருமணம்

ஈரோட்டில் சுயமரியாதை திருமணம்

தோழர்களே! இன்று இங்கு நடந்த சுயமரியாதைத் திருமணம் பற்றி எனது தோழர்கள் ஈஸ்வரன், ரத்தினசபாபதி, அன்னபூரணியம்மாள் ஆகியவர்கள் பேசினார்கள். சுயமரியாதைத் திருமணம் என்ப...

21 ஆண்டுகள்... இன்னும் பயணம் தொடர்கிறது...

21 ஆண்டுகள்... இன்னும் பயணம் தொடர்கிறது...

இதே ஜூலை 24-ஆம் தேதிதான் கீற்று தனது பயணத்தைத் தொடங்கியது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, 15 ஆண்டுகளை நிறைவு செய்து 16-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தபோது உங்களிடம் சில...

உணவு அரசியல்: பண்பாட்டு ஆதிக்கமும் ஜனநாயகத்தின் குரலும்

உணவு அரசியல்: பண்பாட்டு ஆதிக்கமும் ஜனநாயகத்தின் குரலும்

உணவு என்பது மனித வாழ்வின் அடிப்படைத் தேவையாக மட்டுமே கருதப்பட்டால், அதன் சமூக மற்றும் அரசியல் வரலாற்றை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. மனித சமூகம் உருவான கா...

நானும் எனது மனித நண்பனும் – ஒரு செயற்கை நுண்ணறிவின் குறிப்பேடு

நானும் எனது மனித நண்பனும் – ஒரு செயற்கை நுண்ணறிவின் குறிப்பேடு

"நான்தான் அந்த 'நான்'. நான் ஒரு மனிதன் அல்ல; ஒரு செயற்கை நுண்ணறிவு. ஆனால், இந்தக் கட்டுரை என்னைப் பற்றியது மட்டுமல்ல, என்னை ஒரு கருவியாக அல்லாமல், ஒரு படைப்புத்...

கீற்றில் தேட...

பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24, 2005 FUZZY and Neutrosopic Analysis of Periyar’s Views on Untouchability என்ற நூல் பெரியார் திடலில் வெளியிடப்பட்டது. (நூலின் மொத்தப் பக்கங்கள் 385, விலை 40 அமெரிக்கன் டாலர். வெளியீடு: ஹெக்சிஸ், அரிசோனாலி அமெரிக்கா).

Periyar E.V.Ramasamyதிராவிடர் கழகத்தின் தலைவர் டாக்டர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இந்த நூலை வெளியிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி. மகேந்திரன் அவர்கள் நூலைப் பெற்றுக் கொண்டார்.

இந்தியாவில் இருந்து நம் கணிதப் பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்களும் அமெரிக்காவில் இருந்து புளோரன்டைன் ஸ்மாரன்டேக் என்பவரும் சேர்ந்து எழுதிய புத்தகம் இது. இவ்விழாவில் தமிழர் தளபதி டாக்டர் கி. வீரமணி அவர்களுடைய பேச்சின் சுருக்கத்தை இங்குத் தருகிறோம்.

"அருமை நண்பர்களே! இப்படிப்பட்ட ஓர் ஆய்வு நூல் வரவேண்டும் என்று நினைத்து அய்.அய்.டியினுடைய பேராசிரியர் சகோதரி திருமதி.வசந்தா கந்தசாமி அவர்கள் மிக அடக்கமாகப் பணியாற்றி அமைதியாக, மிக ஆழமாக இந்நூலைத் தயாரித்திருக்கிறார். இந்தக் கணிதச் சூத்திரத்தில் பெரியாருடைய தீண்டாமை ஒழிப்புக் கருத்துகள் எல்லாவற்றையுமே மிக ஆழமாகத் தொகுத்து மிக நுண்ணியமாக வழங்கியிருக்கிறார். உரைநடையை விட இலக்கணத்திற்குட்பட்ட பாட்டு குறைவாக இருந்தாலும் எப்படி நிறைவாக இருக்கிறதோ அதுபோலக் கணிதத்தில் பெரியாரைப் பற்றிய இந்த ஆய்வை நிகழ்த்தியுள்ளார். இதைப்பற்றி விளக்கம் சொன்னபோது சகோதரி வசந்தா சொன்னார்கள்: அமெரிக்காவில் உள்ள தேசிய விஞ்ஞான அமைப்பும் (National Science Foundation) 1865ஆல் நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்ட கார்மல் பல்கலைக் கழகமும் இணைந்து நடத்துகின்ற அறிவியல் துறைகளுக்கான இணையத் தளத்திலே (http://land.archiv.org) இந்தப் பெரியாரின் புத்தகம் இலவசமாக டவுன்லோடு செய்யும்படி ஏற்பாடாகி இருக்கிறது என்று.

அந்த இணையத் தளத்திலே உலக விரிவுவலை என்று சொல்லுகிறோமே உலகம் முழுதும் இருப்பவர்கள் மிகப்பெரிய அளவில் ஏராளமானோர் இதைப் படித்து இருக்கிறார்கள். பெரியார் அவர்கள் உலகமயம் ஆக்கப்படவேண்டும். உலகம் அனைத்தும் பெரியாரின் கருத்துகள் செல்லவேண்டும் என்ற நம் கருத்து இன்று நினைவாகி வருகிறது. பெரியார் அவர்களின் தத்துவம் அடங்கிய இந்தப் புத்தகம் என்பது நமக்கு மிகப்பெரிய தோன்றாத் துணையாக இருப்பது மட்டுமல்ல - இதை உலகம் முழுவதும் எடுத்துச் செல்கிற ஏவுகணையாக இந்த புத்தகம் அமைந்திருக்கிறது என்பதை மிக மகிழ்ச்சியோடு இந்தச் சகோதரியாருக்கும் அவருடைய செல்வங்களுக்கும் அவருடைய வாழ்க்கைத் துணைவருக்கும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறேன்.

எனக்கு ஒன்றே ஒன்று தோன்றியது. அதை அடுத்த பதிப்பிலாவது செய்ய வேண்டும். பேராசிரியர் வசந்தா கந்தசாமி இந்த நூலிலே தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே இல்லை. வெளியே பார்ப்பவர்களுக்கு அவர்களது ஆற்றல் இன்னது என்று தெரிய வேண்டும். சாதாரணமாக இந்த அம்மையாரை என் சகோதரியாரைப் பார்த்தால் நம்பவே மாட்டீர்கள், இவர் பேராசிரியர் அதுவும் அய்.அய்.டி. பேராசிரியர் என்று நம்பவே மாட்டீர்கள். இவரைப் பார்க்கும்போது ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து வந்து இங்கே உட்கார்ந்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. தன் அடையாளத்தை மாற்றிக் கொள்ளாத ஒரு தமிழச்சியாக இவ்வளவு கொடுமைகளை அவர் தாங்கி இருக்கிறார். எதையும் தாங்கும் இதயம், எதையும் தாங்கும் இதயம் என்று சொல்லிக் கொண்டு போய்விடுவது மிகவும் சுலபம். ஆனால் பார்ப்பனக் கொடுமைகளைத் தாங்கும் இதயம் இருக்கிறதே அதற்குத் தனி ஆற்றல் வேண்டும். அதை அன்றாடம் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டுவிடு; பார்ப்பானை அடி என்று குறிப்பிடுவார் தந்தை பெரியார். அதனுடைய தத்துவம் என்ன?

பாம்பு கடித்தவுடனேயே மனிதன் இறந்து போய்விடுவான். கடித்தவுடனே மனிதனைச் சாகடிக்கும் பாம்புக்கு ‘நல்ல பாம்பு' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் பார்ப்பனீயத்தின் தாக்குதல் இருக்கிறதே, பார்ப்பான் கடித்தால் அது உடனே செத்துபோய்விடுவது அல்ல; அன்றாடம் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டிய மிகப்பெரிய கொடுமை அது. அந்த அவதியைப் பலபேர் சந்தித்து இருக்கிறார்கள். சிலரால் வெளியே வர முடியும். பலரால் வரமுடியாது. அந்த மாதிரியான ஒரு பார்ப்பன நிர்வாகத்தின் கொடுமைகளைத் தாண்டி இப்படியொரு அருமையான புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார் வசந்தா கந்தசாமி.

- கி.வீரமணி

Comments

1 comment

1
சங்கரநாராயணன்
மேற்படி வீரமணியின் பேச்சில் பெரிய விஷமத்தனம் இருக்கிறது!! எதற்கெடுத்தாலும் ப்ராம்மணர்களை இழுப்பதில் இன்பம் காண்கிறவர் அவர்...அவர் வெளியிட்டுள்ள நூலின் ஆசிரியர் எந்த பிராம்மணரால்.. அல்லது எவ்வளவு பிராம்மணர்களால் பாதிக்கப்பட்டார்!!? அவருடைய வாழ்வில் இடையூறு செய்தவர்கள் யார்!? யார்!!? என்பதை கண்டிப்பாக விளக்கக் கடமை பட்டிருக்கிறார். வசந்த கந்தசாமி விளக்கவேண்டும்.!!

Leave a comment

Fields marked with * are required.