பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவல் திருச்செங்கோடு பெண்களை இழிவுபடுத்துவதாக ஜாதி-மத வாத சக்திகள் அச்சுறுத்தி, மிரட்டி ஒரு இலக்கியவாதியின் படைப்பை முடக்கியுள்ளன. ஆனால், பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தும் ‘மனு சாஸ்திரம்’ பெண்களை இழிவுபடுத்தும் புராணங்களை ‘புனிதமாக’ப் போற்றுகிறார்கள். பல நூறு ஆண்டுகளாக தொடர்ந்து ‘புனிதங்கள்’ என்ற பெயரில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ‘இழிவுகளுக்கு’ எதிராக பெரியார் இயக்கம் போராடி வருகிறது. ஆனால், பெரியார் இயக்கம் ‘மதத்தைப் புண்படுத்துவதாக’ குற்றம் சாட்டுகிறார்கள். ‘பெரும்பான்மை’ மக்களை இழிவுபடுத்தும் வேத புராண சாஸ்திரங்களை தடை செய்யக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் திருச்செங்கோட்டில் ஜன.23இல் பொதுக் கூட்டம் நடத்தவிருக்கிறது. அதையொட்டி மக்களிடையே பரப்புவதற்காக கழகம் வெளியிட்ட துண்டறிக்கை:
சூத்திரன் என்றால் யார்?
இந்து மதத்தில் பார்ப்பனர்களைத் தவிர பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும் சூத்திரர்கள் என இந்து மத சாஸ்திரங்கள் கூறுகின்றன.
“பிரம்மாவானவர் உலக விருத்தியின் பொருட்டு, தன்னுடைய முகத்திலிருந்து பிராமணரையும், தோளிலிருந்து க்ஷத்திரியரையும், தொடையிலிருந்து வைசியரையும், பாதத்திலிருந்து சூத்திரரையும் படைத்தார்.” - மனு சாஸ்திரம்: அத்தியாம் 1, ஸ்ஸ்லோகம் 31
சூத்திர ஜாதிகள் எப்படி உண்டாகின?
உலகில் கடவுள் உருவாக்கியது மேற்கண்ட நான்று வர்ணங்கள் மட்டுமே என்றும் - இந்த நான்கு வர்ணத்தாரும் ஒருவருக்கு ஒருவர் விபச்சாரம் செய்ததால்தான் இன்று நடைமுறையில் உள்ள 6000 க் கும் மேற்பட்ட ஜாதிகள் உருவாயின என்றும் - இந்தியாவில் உள்ள அனைத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த மக்களும் விபச்சாரத்தால் பிறந்தவர்கள் என்று இந்து மத நூல்களில் எழுதிவைக்கப்பட்டுள்ளன. ஆதாரம்: சுப்பர போதகம், பிரம்ம புராணம், வைகாநசம், மாதவியம்.
இந்துமத சாஸ்திரங்களில் ‘சூத்திரர்’ எனக் குறிப்பிடப்படும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களைப் பற்றி என்ன கூறப்பட்டுள்ளது?
சூத்திரன் என்றால் ஏழுவகைப்படும். 1. போரில் புறங்காட்டி ஓடியவன், 2. போரில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன், 3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியம் செய்பவன், 4.விபச்சாரி மகன், 5. விலைக்கு வாங்கப்பட்டவன், 6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன், 7. தலைமுறைதலைமுறையாக ஊழியம் செய்பவன். ஆதாரம்: மனுசாஸ்திரம், அத்தியாயம் 8, ஸ்லோகம் 415
இந்து சாஸ்திரங்கள் பெண்களை இழிவுபடுத்துகிறது!
மனைவியில்லாத ஒருவன், பிள்ளையில்லாத ஒருவன், தனக்கு வாரிசு தேவைப்படுமானால், மற்றொருவனுடைய மனைவியிடம் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம். - மனுசாஸ்திரம்: அத்தியாயம் 9, ஸ்லோகம் 52.
பிள்ளை இல்லாமல் ஒரு குலம் அழியுமானால், ஒரு பெண் தனது கணவனின் உடன் பிறந்த சகோதரர்கள் அல்லது தனது கணவனின் ஏழு தலைமுறைக்கு உட்பட்ட பங்காளிகள் யாருடன் வேண்டுமானாலும் கூடி பிள்ளை பெற்றுக் கொள்ளலாம். - மனுசாஸ்திரம்: அத்தியாயம் 9, ஸ்லோகம் 59.
கணவன் வாரிசு இல்லாமல் இறந்துவிட்டால் மனைவி வேறு ஒரு ஆணிடத்தில், தனது கணவன் சம்பாதித்த பொருளைக் கொடுத்து, பிள்ளையைப் பெற்றுக்கொள்ளலாம். - மனுசாஸ்திரம்: அத்தியாயம் 9, ஸ்லோகம் 190.
இந்துமதப் புராணங்கள் பெண்களை இழிவுபடுத்துகின்றன!
மகாபாரதக் கதைப்படி, பரசுராமன் தொடர்ச்சியாக 21 அஸ்திரங்களை எய்தி, பூமியில் க்ஷத்திரியர்களே இல்லாமல் அழித்து விட்டார். அப்போது எல்லாத் தேசங்களிலிலும் உள்ள க்ஷத்திரிய பெண்கள் அனைவரும், வேதங்களில் கரைகண்ட பிராமணர்களைக் கூடி, அவர்களோடு உறவுகொண்டு பிள்ளைகளை உற்பத்தி செய்தார்கள். பரசுராமன் காலத்திற்குப் பிறகு வாழ்ந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் பிராமணனுக்குப் பிறந்தவர்களே என்றும், எல்லா தேசங்களிலும் இருந்த க்ஷத்திரிய ஜாதிப்பெண்கள் அனைவரும் பிராமணர்களுடன் உறவுகொண்டுதான் வாரிசுகளைப் பெற்றார்கள் என்றும் மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. - மகாபாரதம்: ஆதிபர்வம், அத்தியாயம் 113.
பெண்கள் ஆபத்துக்காலத்தில், தனது கணவன் அல்லாத மேல்ஜாதி ஆணிடத்திலோ, மைத்துனனிடத்திலோ பிள்ளை பெற்றுக்கொள்ளலாம். - மகாபாரதம்: ஆதிபர்வம், அத்தியாயம் 126
இவை மட்டுமல்ல, இன்னும் இந்துமதத்திற்கு அடிப்படையாக உள்ள யக்ஞவல்கியர் ஸ்ஸ்மிருதி, பராசரர் ஸ்மிருதி, அர்த்தசாஸ்திரம், பகவத்கீதை, இராமாயணம், பெரியபுராணம், தேவாரம் போன்றவை அனைத்தும், இந்த நாட்டின் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரையும் விபச்சாரி மக்களாகவும், அடிமைகளாகவும், இழிவுபடுத்தியே உள்ளன. சுயமரியாதை உணர்வுள்ள ஒவ்வொரு மனிதனும் இந்த இந்துமத சாஸ்திரங்களையும், புராணங்களையும், வேதங்களையும் தடைசெய்யப் போராடுவோம்.
வெளியீடு: திராவிடர் விடுதலைக் கழகம் - திருச்செங்கோடு - 94428 28962
தமிழகத்தில் சத்திரியர், வைசியர் போன்ற வர்ண பிரிவுகள் கிடையாது. வட நாட்டில் தான் முற்படுத்தபட்ட வகுப்பினை (FC) சார்ந்த ராஜ்புத், காயஸ்த்ர் போன்றோர் சத்திரியர் என்ற வர்ணத்தின் கீழும், படேல் போன்றோர் வைசியர் என்ற வர்ணத்தின் கீழும் இருகிறார்கள்.. இவர்கள் எல்லாம் முற்படுத்தபட்ட வகுப்பினை சார்ந்தவர்கள்.. .. இடஒதிகீடு பெறாதவர்கள்... பார்பனர்களை போல பூணூல் அணிபவர்கள்..
ஆனால், தென் இந்தியாவில், விந்தியமலைக்கு தெற்கே இருக்கும் வர்ணங்கள் இரண்டு தான்... அதில், ஒன்று பிராமன வர்ணம், மற்றவர்கள் எல்லாம் சூத்திரர்கள் என்ற வர்ணம் தான்.. அதினால் தான் பல போர்களில் வென்று, மராத்திய அரசை நிறுவிய சிவாஜிக்கு, நீ சத்ரியன் இல்லை, உனக்கு அரசாக முடிசூட்ட முடியாது என அங்கிருந்த பார்பனர்கள் மறுத்துவிட்டதால ், காசியிலிருந்து காக பட்டர் என்பவருக்கு அதிக செல்வங்களை தானமாக கொடுத்து, மராட்டிய அரசனாக முடி சூடினான் சிவாஜி என்பது வரலாறு..
1900 ஆண்டு துவக்கத்தில் , இங்குள்ள பல இடைநிலை சாதிகள், தங்கள் நிலையை, வர்ண அடுக்கில் உயர்த்த "சத்திரியர்", "வைசியர்" என்று சொல்லிக்கொள்ள ஆரம்பித்தனர்...
வட இந்திய சத்திரியர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை கூகிள்ளில், Rajputs என்று டைப் செய்து இமேஜ் serch செய்யவும்... அவர்களின் தோற்றம் மற்றும் அரண்மனைகளை, இங்கே சத்திரியர்கள் என்று சொல்லி கொள்பவர்களுடன் ஒப்பிட்டு பார்த்துகொள்ளவும்...
இங்கே சத்ரியர் என சொல்லிக் கொள்பவர்கள், எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என அறிவித்துவிட்டு , வட நாட்டு சத்ரிய ராஜபுத்திரர்களை போல, முற்பட்ட வகுப்பில் சேரலாம்மே.. MBC இட ஒதுக்கீடும், MBC ஸ்காலர்ஷிப்பும் இல்லைன்னா, டப்பா டேன்ஸ் ஆடும்.. மத்திய அரசின் கல்வி வேலைவாய்ப்புகளி ல் ஓபிசி இடங்களை நிரப்ப தகுதியான ஓபிசியினர் கிடைக்காத்தால், அவற்றை முற்பட்ட வகுப்பினர் ஆக்கிரமித்து விடுகிறார்கள்.. எனவே, கடின உழைப்பாளிகளான இம்மக்கள், இதுபோன்ற உபயோகமில்லாத போலியான தற்பெருமை போதைகளில் சிக்கி, வாழ்கையை தொலைக்காமல், படித்து, உயிர் தியாகம் செய்து போராடி பெற்ற உரிமைகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுங்கள்..
தமிழ் சாதி அடுக்குகள்
இந்த ஆராய்ச்சி புக்குகள் எல்லாம் படித்து உண்மையான வரலாறை தெரிந்து கொள்ளவும்...... தமிழகத்தில் உள்ள எல்லா இடைநிலை சாதிகளும் (வெள்ளாளர், மறவர், கள்ளர், நாடார், வன்னியர்....) சூத்திர வர்ணம் தான்...
The Tamil social formation has often been characterized in Sastric terms as comprising only Brahmans, Sudras, and Untouchables (Beteille 1969:3) --- தமிழ் சமூகத்தில் உள்ள பிரிவுகள் பார்ப்பனர்கள், சூத்திரர்கள், தாழ்தப்பட்டவர்க ள் மட்டும்மே....
On the whole, castes of the Ksatriya and the Vaisya varnas - the ones who would be legitimately entitled, in the Sastric sense, to claim the privilege of domination-have been absent or nearly so in the South (Mandelbaum 1970:I, 23; Dumont 1981:73). ---- தென் இந்தியாவில் சத்திரிய & வைசிய வர்ணங்கள் கிடையாது...
It is true, to be sure, that warlike castes such as the Kallars and Maravars of South India maintain a martial tradition and deem themselves to be Ksatriyas, but the Ksatriya model of domination has never found currency in the heartland of the South, the rice-growing lowlands (Stein 1980: 70-71). As will be seen, Kallars are peripheral to the agrarian social formation with which we are concerned. --- கள்ளர் மறவர் போன்றவர்கள் போர்குடிகள் என்று தங்களை அழைத்துகொண்டாலு ம், சத்திரிய வர்ணத்தில் வரவில்லை...
Nonetheless, there is clear and compelling evidence that this interpretation, applied to the Sudra dominant castes of the south, flies in the face of the social facts. Traditional Sudra powerholders, epitomized by the dominant Vellalar castes of Tamilnadu, do not conceive themselves to be eligible for the crown (Thurston 1909:VII, 363) and have seldom claimed membership in the Ksatriya varna (Beteille 1969:97). Nor do they fancy themselves to be "warriors." -- வெள்ளார்களே பலம் மிக்க நிலவுடமையாளர்கள ாக இருந்தனர், அவர்களும் சூத்திர வர்ணம் தான்...
In some respects the position of the Shanars [Nadars] in the scale of castes is peculiar. Their abstinence from spiritous liquors and from beef, and the circumstance that their widows are not allowed to marry again, connect them with the Sudra group of classes. On the other hand, they are not allowed as all Sudras are, to enter the temples; and where old native usages still prevail, . . . their women, like those of the castes still lower, are obliged to go uncovered from the waist upwards (cited in Hardgrave 1969:22). --- நாடார்கள், சூத்திரர்களுக்க ும் கீழாகவும், பஞ்சமர்களுக்கு (தாழ்த்தப்பட்டவ ர்கள்) மேலாகவும் இருந்தனர்....
RSS feed for comments to this post