கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

கோயம்­புத்­தூர் மாவட்­டம், ஆர்.எஸ்.புரத்­தில் உள்ள மாந­க­ராட்சி கலை­ய­ரங்­கத்­தில் திரா­விட இயக்­கத் தமி­ழர் பேரவை சார்­பில் சுய­ம­ரி­யாதை இயக்க நூற்­றாண்டு விழா­வை­யொட்டி இரண்டு நாட்­கள் நடை­பெ­றும் கருத்­த­ரங்­கம், கவி­ய­ரங்­கம், கலை நிகழ்ச்சி, பேரணி மற்­றும் பொது மாநாட்டை (26–04–2025) தொடங்கி வைத்து, விழா­வில் திமுக துணைப் பொதுச்­செ­ய­லா­ள­ரும், தி.மு.க. நாடா­ளு­மன்­றக் குழு தலை­வரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி அவர்­கள் தொடக்க உரை­யாற்­றி­னார். 

இம்மாநாட்­டில் கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. அவர்கள் பேசி­ய­தா­வது:–

“அண்­ணன் சுபவீ அவர்­கள் இந்த மாநாட்­டிலே நீ கலந்­து­கொள்ள வேண்­டும் என்று கேட்­ட­போது... எத்­த­னையோ பெரு­மை­கள் நமக்கு கிடைக்­க­லாம், தேர்­த­லிலே வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்­க­லாம், நம் உழைப்பை அங்­கீ­க­ரித்து நாம் சார்ந்­தி­ருக்­கும் இயக்­கங்­கள் நமக்கு பொறுப்­பு­கள் அளிக்­க­லாம்.

ஆனால் இதை­யெல்­லாம் விட பெரு­மை­யாக நான் நினைப்­பது, தலை­வர் கலை­ஞர் அவர்­கள் என்­னைப் பற்றி மேடை­யிலே குறிப்­பிட்­டுச் சொன்­னார்­கள். எங்­கள் வீட்­டில் எல்­லா­ரும் திமுக என்­றால் என் மகள் கனி­மொழி திரா­வி­டர் கழ­கத்­தைச் சேர்ந்­த­வர் என்று.

என் தந்­தை­யாக தலை­வ­ராக அவர் எனக்கு தந்­தி­ருக்­கும் பெரு­மை­யாக, பொறுப்­பாக கரு­து­வது இந்த வார்த்­தை­க­ளை­தான். அந்த வார்த்­தை­க­ளின் நினை­வோ­டு­தான் இறு­மாப்­போடு இந்த மேடை­யில் நிற்­கி­றேன். 

சுய­ம­ரி­யாதை – வீரி­ய­மிக்க சொல்! 

அழ­கான வீரி­ய­மிக்க வார்த்தை இருக்­கி­றது என்­றால் அது சுய­ம­ரி­யாதை என்ற சொல்­தான். வேறு எந்த அடிப்­ப­டைத் தேவை­க­ளைத் தாண்டி ஒரு வாழ்க்கை வாழ்க்­கை­யாக இருப்­ப­தற்கு தேவை சுய­ம­ரி­யா­தை­தான்.

சுய­ம­ரி­யா­தை­யோ­டு­தான் உணவு தேவைப்­ப­டு­கி­றது. சுய­ம­ரி­யா­தை­யோ­டு­தான் நமக்கு இருக்க இடம் தேவைப்­ப­டு­கி­றது. சுய­ம­ரி­யா­தை­யோ­டு­தான் நமக்கு எதிர்­கா­லம் தேவைப்­ப­டு­கி­றது. இப்­படி சுய­ம­ரி­யா­தையை உரு­வாக்கி கட்­ட­மைத்து பாது­காத்­துத் தந்த இயக்­கம்­தான் திரா­விட இயக்­கம்.

இந்த உல­கத்­தில் பல நாடு­க­ளில் பல ஏற்­றத் தாழ்­வு­கள் இருந்­தி­ருக்­கி­றது. இன்­று­வரை இருப்­பது ஆண் பெண் ஏற்­றத் தாழ்வு. பெண் இரண்­டாம் பட்­சம்­தான் என்ற இந்த நிலை இன்­று­வரை இருக்­கி­றது. நிறம், மதம், மொழி, பொரு­ளா­தா­ரத்­தின் பெய­ரால் எத்­த­னையோ ஏற்­றத் தாழ்­வு­கள் இருந்­து­ கொண்­டு­தான் இருக்­கின்­றன. அத்­தனை ஏற்­றாத் தாழ்­வு­க­ளை­யும் மாற்­றி­வி­ட­லாம், ஆண் பெண் என்­ப­தைத் தவிர, பொரு­ளா­தா­ரத்தை ஈட்ட முடிந்­தால் இரு தலை­மு­றை­க­ளுக்­குப் பின் நாம் மேட்­டுக்­கு­டி­யா­கி­வி­ட­லாம்., படித்­த­வர் படிக்­கா­த­வர் என்ற ஏற்­றத் தாழ்­வை­யும் நம்­மால் மாற்­றி­விட முடி­யும்.

ஆப்­பி­ரிக்­கர்­களை நூற்­றாண்­டு­க­ளாக அடி­மை­க­ளாக நடத்­தி­ய­போதும், அமெ­ரிக்க அதி­ப­ராக ஒரு கறுப்­பர் வந்து அமர்ந்­த­தை­யும் நாம் கண்­கூ­டாக பார்த்­தி­ருக்­கி­றோம். 

மதம் – கட­வுள்! 

தந்தை பெரி­யா­ரி­டம் ஒரு­வர் கேட்­கி­றார், ‘ஏன் மதத்தை எதிர்க்­கி­றீர்கள்? ஏன் கட­வுளை எதிர்க்­கி­றீர்­கள்’ என்று கேட்­கி­றார்.

அதற்கு பெரி­யார், உன் அலு­வ­ல­கத்­தில் உனக்கு கீழ் வேலை செய்­யும் குறிப்­பிட்ட சாதி­யைச் சேர்ந்த ஒரு­வ­ரும் நீயும் ஒரு கோயி­லுக்கு போனீர்­கள் என்­றால்… அவரை உள்ளே விடு­வாங்­களா, உன்னை உள்ளே விடு­வாங்­களா என்று கேட்­கி­றார். அப்­போது, ‘அவ­ரைத்­தான் உள்ளே விடு­வார்­கள்; என்­றார்.

அப்­ப­டி­யென்­றால் உன்­னால் ஜாதி­யை தாண்டி தடுப்பைத் தாண்டி போக முடி­யாத நிலையை இந்த மதம், கட­வுள் உரு­வாக்கி வைத்­தி­ருக்­கி­றது. அதை மாற்­றத்­தான் அவை இரண்­டை­யும் எதிர்க்­கி­றேன் என்­கி­றார் பெரி­யார்.

நீங்­கள் படித்து வெளி­நாட்­டில் போய் வாழ­லாம், எவ்­வ­ளவு வேண்­டு­மா­னா­லும் சம்­பா­திக்­க­லாம். ஆனால் சாதி உங்­க­ளோடு ஒட்­டிக் கொண்­டி­ருக்­கி­றது இறந்­தால் கூட மேல்­சா­திக்­கான சடங்கு வேறு, நமக்­கான சடங்கு என்­பது வேறு,

பிறப்­ப­தற்கு முன்­பா­கத் தொடங்­கும் சாதிக் கட்­ட­மைப்பு இறப்­பைத் தாண்­டி­யும் தூக்கி சுமக்­கக் கூடி­ய­தாக இருக்­கி­றது. 

ஒடுக்­கப்­பட்­டோ­ருக்கு போரா­டி­ய­வர் பெரி­யார்! 

`எனக்­கும் கட­வு­ளுக்­கும் எந்த பிரச்­சி­னை­யும் இல்லை. . எனக்கு இந்த சாதி என்­பது பிடிக்­க­ வில்லை. யார் ஒடுக்­கப்­பட்­ட­வர் என்று நினைத்­தா­லும் அதை எதிர்த்­த­வர்­தான் பெரி­யார். சாதி­யின் பெய­ரால், நிறத்­தின் பெய­ரால் யார் ஒடுக்­கப்­பட்­டா­லும், ஒடுக்­கப்­பட்­ட­வ­ருக்­காக போரா­டு­வேன் என்று சொன்­னார் பெரி­யார். சாதி எப்­படி வந்­தது? மதத்­தால் வந்­தது. மதத்­தின் காப்­பா­ளர் கட­வுள்.

ஒரே ஒரு உதா­ர­ணம்: ஒரு ஊரில் ஒரு சில­ருக்கு தோல் சம்­பந்­தப்­பட்ட சுவா­சம் சம்­பந்­தப்­பட்ட பிரச்­சினை என்­றால் அவர்­களை மருத்­து­வ­ரி­டம் அழைத்­துச் சென்று சரி செய்ய முடி­யும், ஊருக்கே பிரச்­சினை வந்­தது என்­றால் அதன் வேர் எங்கே என்று தேட வேண்­டும். அது ஒரு தொழிற்­சா­லை­யில் இருந்து வரு­கி­றது என்­றால்.. அடுத்த தலை­மு­றையைக் காப்­பாற்ற வேண்­டும் என்­றால் அந்த தொழிற்­சா­லையைத் மூட வேண்­டும்.

காற்றை நிலத்தை நீரை நஞ்­சாக்­கும் அந்த ஆலையை மூட வேண்­டும். என்று போராடி 13 பேரை பலி­கொ­டுத்த தூத்­துக்­கு­டி­யில் இருந்து கேட்கிறேன். தொழிற்­சா­லை­யைத் ­தானே மூடு­கி­றோம்?

அதைத்­தான் பெரி­யார் சொன்­னார். எந்த இடத்­தில் இருந்து பிரச்­சினை உரு­வா­கி­றதோ அது மத­மாக இருக்­கட்­டும், கட­வு­ளாக இருக்­கட்­டும் அதை மூடு. ஒவ்­வொ­ருத்­த­ராக கூப்­பிட்டு வைத்­தி­யம் பார்க்க முடி­யாது என்று சொன்­ன­து­தான் சுய­ம­ரி­யாதை இயக்­கம்.

அத­னால்­தான் எந்த மத­மாக இருந்­தா­லும் தவ­றான கருத்­து­களை மக்­க­ளி­டம் கொண்டு சேர்த்­தா­லும் அதை எதிர்த்­தார்.

இன்று நிறைய பேர் சொல்­கி­றார்­கள். திரா­விட இயக்­கம் இந்து மக்­க­ளுக்கு எதி­ரா­னது என்று. அதை நான் ஜஸ்­டிஃபை பண்­ணப் போவது இல்லை. அதற்­கான அவ­சி­ய­மும் கிடை­யாது.

நான் இங்கே இரு விஷ­யங்­க­ளைப் பதிவு செய்ய விரும்­பு­கி­றேன். அவர்கள் சொல்­கி­றார்­கள், நாங்­கள்­தான் பெரும்­பான்மை இந்து மக்­களின் பாதுகாவ­லர்­கள், இந்து மக்­க­ளின் அடுத்த தலை­மு­றையை நாங்­கள்­தான் பாது­காக்­கி­றோம் எங்­களை நம்­புங்­கள் என்று சொல்­கி­றார்கள். 

உரி­மை­களை பெற்­றுத் தந்­தது திரா­விட இயக்­கம்! 

1910 களில் வந்த இரு கணக்­கெ­டுப்பை நான் உங்­க­ளோடு பகிர்ந்து கொள்­கி­றேன். சென்னை பல்­க­லைக் கழ­கத்­தில் பதிவு செய்த பட்­ட­தா­ரி­க­ளாக 650 பேர் இருந்­தார்­கள். அதில் நான் பிரா­மின்ஸ் என்று சொல்­லக் கூடிய பிற்­ப­டுத்­தப்­பட்ட மக்­க­ளான இந்­துக்­கள் 12 பேர். மீதி 74 இருக்­கும் 500க்கும் மேற்­பட்­ட­வர்­கள் 3% இருக்­கும் பிரா­மண சாதியை சேர்ந்­த­வர்­கள்.

ஆனால் இன்று தமிழ்­நாட்­டில் இருக்­கும் பட்­ட­தா­ரி­கள் தேசிய சரா­ச­ரியை விட அதி­க­மாக இருக்­கி­றோம். அதில் எத்தனை சத­வி­கி­தம் பிற்­ப­டுத்­தப்­பட்ட மக்­கள் என்று கணக்­கெ­டுத்­துப் பார்த்­தோம் என்­றால் யார் பெரும்­பான்மை இந்து மக்களுக்காக பாடு­பட்­டி­ருக்­கி­றார்­கள். யார் அவர்­க­ளுக்கு உத­வி­யி­ருக்­கி­றார்­கள் என்று தெரி­யும்.

யார் அவர்­க­ளின் தலை­மு­றையை மீட்­டெ­டுத்து சிலி­கான் வேலி­யில் இருந்து உல­கம் முழு­தும் பிற்­ப­டுத்­தப்­பட்டத் தமி­ழர்­கள் கோலோச்­சு­கி­றார்­கள் என்­றால் அதற்­குக் கார­ணம் திரா­விட இயக்­கம்­தான்.

அதே­போல்; சப் கலெக்­டர் 55% பத­வி­க­ளில் 3% இருந்த ஒரே இனத்தை சாந்­த­வர்­கள்­தான். துணை நீதி­ப­தி­க­ளாக 83% அவர்­கள்­தான் இருந்­தார்­கள். 72% முன்­சீ­பு­கள் அவர்­கள்­தான்.

இன்று எத்­தனை கலெக்­டர்­கள், அர­சுப் பத­வி­க­ளிலே இருக்­கி­றார்­கள். நாட்­டி­லேயே இத்­தனை பேர் வந்­தி­ருக்­கி­றார்­கள் என்­றால் பிற்­ப­டுத்­தப்­பட்ட மக்­கள் வந்­தி­ருக்­கி­றார்­கள் என்­றால் திரா­வி­ட­இ­யக்­கம்­தான்கார­ணம். இதை மக்­கள் உணர்ந்­து­கொள்ள வேண்டும். உங்­க­ளு­டைய உரி­மை­களை போராடி உங்­க­ளுக்கு பெற்­றுத் தந்த இயக்­கம் திரா­விட இயக்­கம்.

நம் முன்­னால் பல கேள்­வி­கள் விஸ்­வ­ரூ­பம் எடுத்து நின்று கொண்டிருக்­கி­றது.

எல்லா மதங்­க­ளி­லும் இருக்­கும் மத­வா­தி­கள் நமக்­குத் திரும்­பத் திரும்ப சொல்­லித் தரும் ஒன்று… சமூ­கக் கட்­ட­மைப்பை கேள்வி கேட்­டு­வி­டக் கூடாது என்­ப­தற்­காக, ‘நீ இந்த வாழ்­வில் கஷ்­டப்­பட்­டால், கேள்வி கேட்கா­மல் இருந்­தால், உனக்கு விதிக்­கப்­பட்ட வாழ்க்­கையை நீ ஏற்­றுக்­கொண்­டால் இதைத் தாண்டி உனக்கு பிர­மா­த­மான சொர்க்­கம் இருக்­கி­றது.

நீ எவ்­வ­ளவு அடி­மை­யாக நடத்­தப்­பட்­டா­லும், உன்­னி­டம் இருந்து உரி­மை­கள் பறிக்­கப்­பட்­டா­லும் அதெல்­லாம் அடுத்த ஜென்­மத்­தில் ஈடு செய்­யப்­ப­டும்’ என்­றெல்­லாம் சொல்லி நம்மை வார்த்தெடுத்தார்­கள். 

திரும்­பத் திரும்ப சொல்­கி­றோம்! 

யுவெல் ஹராரி என்ற மிக முக்­கி­ய­மான சிந்­த­னை­யா­ளர்:

‘மனி­தர்­க­ளுக்கு கதை­கள் தேவைப்­ப­டு­கி­றது. அதற்கு மதங்­கள் தேவைப்­ப­டு­கி­றது. நீ வைத்­தி­ருக்­கும் இரண்டு வாழைப் பழங்­க­ளில் ஒன்றை என்­னி­டம் கொடுத்­து­விட்­டால் அடுத்த ஜென்­மத்­தில் நன்­றாக இருக்­க­லாம். உனக்கு சொர்க்­கத்­தில் இடம் கிடைக்­கு­மென்று சொல்லி அந்த வாழைப் பழத்தை ஏமாற்றி நீ வாங்­கி­விட முடி­யும்.

ஆனால் இதை ஒரு சிம்­பன்­ஸி­யி­டம் போய் , இதே­போல் கேட்­டால் அது என்ன பண்­ணும்? சிம்­பன்­ஸி­யி­டம் இருந்து அடி­தான் வாங்­கிக் கொண்டு வர­வேண்­டும்.

மிரு­கங்­க­ளி­டம் கூட சொல்லி செல்­லு­ப­டி­யா­காத ஒரு கதையை மனி­தர்­க­ளி­டம் திரும்­பத் திரும்ப நாம் சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றோம்.

இதே கதை­களை பெண்­க­ளி­டம், ஒடுக்­கப்­பட்ட சமூக மக்­க­ளி­டம், நீ கஷ்­டப்­படு… இது­தான் உனக்கு விதிக்­கப்­பட்­டது என்று பாசி­சம் இன்று சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றது. இதை நாம் புரிந்­து­ கொள்ள வேண்­டும்.

இன்று நம்­மு­டைய முத­ல­மைச்­சர் ஒவ்­வொன்­றை­யும் எதிர்த்­துக் கேள்வி கேட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார். அத­னால்­தான் அவ­ரைப் பார்த்­தாலே மேலே நடுக்­கம் ஏற்­ப­டு­கி­றது.

நீங்­கள் எதை­யெல்­லாம் தேசி­யம் என்று கட்­ட­மைக்­கி­றீர்­களோ, எதிர்த்து கேள்வி கேட்­ப­வர்­களை எல்­லாம் தேச விரோ­தி­கள், நக்­சல்­கள் என்று கட்­ட­மைப்­பீர்­களோ… நான் இந்த நாட்­டின்­பால் உள்ள அக்­க­றை­யில் கேட்­கி­றேன் என்று முத­ல­மைச்­சர் கேட்­கி­றார்.

(தொடரும்…)

- கனி­மொழி கரு­ணா­நிதி