கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

கோவையில் ஏப்ரல் 29-ல் திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி பேசியதாவது:

தந்தை பெரி­யா­ரைப் போல தன் கொள்கைக்காக உழைத்த தலை­வர் உலக வர­லாற்­றி­லேயே எங்கு தேடி­னா­லும் கிடைக்க மாட்­டார். பெரி­யார் இறந்து 51 ஆண்­டு­ள் ஆகி­விட்­டன. ஆனால், தமிழ்­நாட்­டின் அர­சி­யலை இன்­றும் அவர்­தான் தீர்­மா­னித்­துக் கொண்­டி­ருக்­கி­றார் என்­றால், அது­தான் பெரி­யா­ரின் சிறப்பு.

இன்­னும் பெரு­மை­யா­கச் சொல்ல வேண்­டும் என்­றால், இன்­றைக்கு உங்­க­ளின் அழைப்பை ஏற்று வந்து இருக்­கி­றேன். தி.மு.க–வின் இளைஞர் அணிச் செய­லா­ள­ராக வந்­தி­ருக்­கி­றேன், அது பெரு­மை­தான். நீங்­கள் எல்­லோ­ரும் சொன்­ன­தைப்­போல் விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ராக வந்­தி­ருக்­கி­றேன், அது­வும் பெரு­மை­தான். தமிழ்­நாட்­டின் துணை முத­ல­மைச்­ச­ராக வந்­தி­ருக்­கி­றேன், அது­வும் பெரு­மை­தான். ஆனால், அவை எல்­லா­வற்­றை­யும்­விட மிகப் பெரு­மை­யாக நான் கரு­து­வது என்­னவென்­றால் உண்­மை­யான பெரி­யா­ரின் கொள்­கைப் பேர­னாக இந்த மாநாட்­டிற்கு வந்­தி­ருக்­கி­றேன். அத­னால்­தான் பெரி­யா­ரின் தொண்­டர்­கள் மத்­தி­யில் பேசும்­பொ­ழுது எனக்கு தனி வித­மான ஒரு உத்­வே­கம் ஏற்­ப­டு­கி­றது. தனித் தெம்பு வரு­கி­றது. அதற்­குக் கார­ணம் என்­ன­வென்­றால், உலக வர­லாற்­றி­லேயே தந்தை பெரியா­ருக்கு கிடைத்த தொண்­டர்­க­ளைப் போல வேறு எந்த இயக்­கத்­திற்­கும், எந்­தத் தலை­வ­ருக்­கும் கிடைத்­தது கிடை­யாது.

பெருமை வாய்ந்த தொண்­டர்­கள்!

அர­சி­யல் கட்­சி­யாக இருந்­தால், அது என்­றைக்­கா­வது ஒரு­நாள் தேர்­த­லில் நிற்­கும். போட்டி போட­லாம், ஏதா­வது ஒரு பொறுப்பு கிடைக்­கும். ஆனால், பெரி­யா­ரின் தொண்­டர்­கள், அவர்­க­ளின் கொள்­கையை கொண்டு செல்­வ­தற்­காக, அடி­பட்­டார்­கள், மிதி­பட்­டார்­கள், வெட்­டப்­பட்­டார்­கள். சிறை­யில் அடைக்­கப்­பட்­டார்­கள். ஏன் இன்­னும் சொல்­லப்­ போ­னால் கொலை­கூட செய்­யப்­பட்­டார்­கள், அப்­ப­டிப்­பட்ட பெருமை வாய்ந்த தொண்­டர்­கள்­தான் பெரி­யா­ரின் கொள்­கைத் தொண்­டர்­கள்.