வாழ்க்கையில் எதுவுமே
என் கட்டுப்பாட்டில் இல்லை
எனக்கு
வாழ்க்கைப்பட்டவளைத் தவிர...!
அவளுக்கு
அதுவும் இல்லை...!
2
ஏசுவின் அன்பு
மதமானது...!
புத்தரின் ஜென்
மார்க்கமானது...!
மார்க்ஸின் பொதுவுடமை
அரசியலானது...!
சங்கரரின் அத்வைதம்
தத்துவமானது...!
காந்தியின் அஹிம்சை
வெறும் சரித்திரமானது...!
3.
கால்கள் கட்டப்பட்டு
தலைகீழாக தொங்கவிடப்பட்டு
மிதிவண்டியின் கைப்பிடியில்
பயணிக்கும்
கோழிகள் அறியாது
தன் இறுதிப்பயணத்தை...!
- ரவி சுவாமிநாதன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...