தமிழீழ விடுதலையில் தனது ஊடக பலத்தை முழுமையாக தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்திய ‘இந்து’ குழுமும் வழக்கம் போல தற்போது முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலிலும் தமது தமிழின விரோதப் போக்கை பார்ப்பனத் திமிருடன் வெளிப்படுத்தியிருக்கிறது. தமது குழுமத்தின் சார்பில் வரும் ஃபிரண்ட்லைன், டிசம்பர் 30, 2011 இதழில் “1886 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தமே தவறானது என்றும், முல்லைப் பெரியாறு அணை கட்டியதே தவறு, அதற்குப் பதிலாக புதிய அணையும் கட்டக் கூடாது, அந்த தண்ணீர் இல்லாமல் வாழ தமிழர்கள் பழகிக் கொள்ள வேண்டும்” என்றும் ஒரு நேர்காணல் வெளியாகி உள்ளது. அந்தக் கருத்துக்களை வெளியிட்டவர், மத்திய அரசின் முன்னாள் நீர்வளத் துறையின் தலைமைச் செயலாளரும், இந்தியாவின் முதல் தேசிய நீர் திட்டத்தின் வரைவினைக் கொடுத்த இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரியுமான பி.இராமசாமி அய்யர் ஆவார். இவரைப் போலவே மனித உரிமை விசயங்களில் குரல் கொடுக்கும் கிருஷ்ண அய்யரும் கேரளாவில்அச்சுதானந்தன் நடத்திய கண்டனப் பேரணியில் பங்கேற்றுள்ளார்.

மேற்கண்ட இரு பார்ப்பனர்களும் கேரளத்தில் இருப்பவர்கள். ஆனால் தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு பார்ப்பான் ‘இந்து’ ராமும், கேரள பார்ப்பனர்களுடன் இணைந்து மலையாளிகளுக்கு ஆதரவாக ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறார். இராமசாமி அய்யரின் நேர்காணல் வெளியாகி இருக்கும் அதே ஃப்ரண்ட்லைன் இதழில் ஆர்.கிருஷ்ணகுமார் என்பவர் முல்லைப் பெரியாறு அணையில் தமிழர்களுக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதையும் சிறப்பாக வெளியிட்டு மகிழ்கிறது ஃபிரண்ட்லைன். 1886 இல் தங்களுக்கு முழு உரிமை இல்லாத, சொந்தமில்லாத நிலம் என்று தெரிந்தும் வெள்ளையரையும் ஏமாற்றி திருவாங்கூர் சமஸ்தானத்தால் போடப்பட்ட ஒப்பந்தத்தில் திருவாங்கூர் சார்பாக கையொப்பமிட்டவர் திவான் இராமையங்கார் என்ற பார்ப்பனர் தான்.

மத்திய அரசின் மத்திய நீர்வழி ஆணையத்தின் தலைவராக இருந்த மலையாளியான கே.சி.தாமஸ், அண்மையில் 2011, நவம்பா 27 அன்று பத்திரிகை யாளர்களிடம் பேசும்போது, பெரியாறு அணை பாதுகாப்பாகத்தான் உள்ளது. அதன் உறுதியைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. கேரள அரசின் கூற்றுகளில் உள்நோக்கம் உள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி உயரம் வரை நீர் தேக்கினாலும் எந்த ஆபத்தும் இல்லை என்று கூறியுள்ளார்.

1980 இல் அணை தொடர்பாக கேரள - தமிழ்நாடு இரு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்ற பேச்சு வார்த்தை நடந்தது. அப்பேச்சு வார்த்தைக்கான ஏற்பாடுகளைச் செய்து தலைமை தாங்கியவர் இதே கே.சி.தாமஸ் தான். அப்போது மத்திய நீர் வழி ஆணையத்தின் தலைவராக இருந்தார். அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவாக, அணை பாதுகாப்பாக இல்லை என்று கூறி அதைப் பலப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சொன்னார். அதன்படி அணை பலப்படுத்தப்பட்டது. அதைத் தான் மீண்டும் கே.சி. தாமஸ், 1981க்குப் பிறகு அணையின் பாதுகாப்புப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை எனக் கூறுகிறார். மேலும் இராஜஸ்தான் மாநிலத்தில் 1730 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு அணையே இன்று வரை உறுதியாக இருக்கிறது என்றும் கூறுகிறார். ஆனால் பார்ப்பன இராமசாமியோ எந்த அணையும் 100 ஆண்டுகளுக்கு மேல் பாதுகாப்பானது அல்ல என்கிறார். இந்த பார்ப்பான்தான் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் தேசிய நீர்க் கொள்கையை வடிவமைத்தவராம். தமிழர்களின் ஒட்டு மொத்த ஆற்று நீர் உரிமை இழப்புகளுக்கு இவர்தான் காரணம் என்பது தெளிவாகிவிட்டது.

அதேபோல 1979 ஆம் ஆண்டு “முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைத்து எஞ்சியுள்ள நீரை இடுக்கி அணைக்குத் திருப்பி அங்கு மின்சாரம் தயாரிக்கலாம்” என்ற கருத்தை முதன்முதலில் ஒரு அறிக்கையாக தயாரித்து கேரள அரசுக்குக் கொடுத்து மோதலுக்கு முன்முயற்சி எடுத்தவர் எம்.கே.பரமேசுவரன் நாயர் ஆவார். அவரும் அண்மையில் பத்திரிகையாளர்களிடம் “அணை உடைந்தாலும் அந்த நீரை இடுக்கி அணை முழுமையாகத் தாங்கிக் கொள்ளும். அணை பற்றி யாரும் பயப்பட வேண்டியதில்லை” எனறு கூறியுள்ளார்.

பிறப்பால் மலையாளிகளான மலையாள தேசிய இனத்தைச் சேர்ந்த கே.சி.தாமஸ், எம்.கே. பரமேசுவரன் நாயர், அட்வகேட் ஜெனரல் கே.பி. தண்டபாணி ஆகிய நீர் மேலாண்மை வல்லுநர்களும், சட்ட வல்லுநர்களும் முல்லைப் பெரியாறு அணை பற்றி அச்சப்படத் தேவையில்லை என்று நேர்மையுடன் அறிவிக்கின்றனர்.

ஆனால், தமிழ்நாட்டில், தமிழர்களின் உழைப்பால் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் ‘இந்து’ ராம் (இப்போது ‘இந்து’ ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்), கேரளாவின் இராமசாமி அய்யர் போன்ற தமிழ் தேசிய இனத்திலோ, மலையாள தேசிய இனத்திலோ இந்தியத் துணைக் கண்டத்தின் எந்த தேசிய இனத்திலோ சேர்க்க முடியாத - எந்த தேசிய இனத்துக்கும் உண்மையாக, நேர்மையாக இருந்திராத - வரலாற்றுக் காலம் முதல் இன்று வரை பல நூற்றாண்டுகளாக துரோகக் கும்பலாகவும், சுரண்டல் கூட்டமாகவும், ஆதிக்க இனமாகவும், இந்தியர் என்ற இல்லாத தேசிய இனத்துக்கு அடையாளமாகவும் வாழ்ந்து வரும் பார்ப்பனக் கும்பலானது - அறிவும், மனிதாபிமானமும், நேர்மையும் இன்றி “இந்த அணை கட்டியிருக்கவே கூடாத அணை, இந்த அணை நீர் இல்லாமல் வாழ தமிழர்கள் பழகிக் கொள்ள வேண்டும்” என்று நெஞ்சை நிமிர்த்தி நேர்காணல் அளிக்கிறது, அச் சிட்டுப் பரப்புகிறது என்றால், அதைத் தமிழர்களும் அனுமதிக்கிறோம் என்றால் தமிழர்களைவிட, திராவிடர்களைவிட சொரணையற்ற இனம் ஒன்று உலகில் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. இராமசாமி அய்யர் எழுதிய கட்டுரையை தமிழ்நாட்டில் ‘இந்து’ பார்ப்பன ஏடும், அவர்களே நடத்தும் ‘பிரன்ட்லைன்’இதழும் வெளியிடுகிறது.

இதுபோன்ற நிலையை எண்ணித்தான் பெரியார் அன்றே சொன்னார், “பந்தயம் வேண்டுமானாலும் கட்டுவேன். மத்திய அரசாங்கப் பிடியில் இருந்து திராவிட நாடு (தமிழ்நாடு) தனியாகப் பிரியாவிடில், சுதந்திரம் இல்லை. சோறு இல்லை. மான வாழ்வு இல்லை. இது உறுதி, உறுதி, உறுதி. - ‘விடுதலை’ 25.2.1949

- அதிஅசுரன்,  ‘கீற்று’ இணையத்தளத்திலிருந்து 

Pin It