salma 560

எனக்குத் தெரியாது

இது நான் தானாவென

மர்வானாவை புகைத்து

உள் நுழையும் வரை

ஆணின் விலா எலும்பிலிருந்து

படைக்கப்பட்ட

எனதுடலில் சிறகொன்று முளைக்குமென

எனக்கே தெரியாது

தொண்டைக்குள் வாளின் கூர்மையோடு

இறங்கும் புளிப்பேறிய வைனின் சுவையில்

எனதுடல் ஒரு பருந்தென

நள்ளிரவின் சுடர் இருளை

முழு நிர்வாணத்தினால் கிழித்து

எறிய முடியுமென

 மூளையில் பதுங்கியிருந்த

பைசாசுகளின் சுமையை

சில முத்தங்களால்

இறக்கி வைப்பேனென

யாரோ சொன்னது போலன்றி

எனது இந்த உடல்

நிலத்தின்  அழுக்காலானது

கலைந்து திரியும்

மேகத்தையும் போல

தீவிரமானது

இன்றிரவு

முதல் முறையாக

நானறியாத

எனதுடலை

என்னோடு

அழைத்து

வருகிறேன்

அறிந்துகொள்ளச் செய்த

மர்வானாவிற்கு

நன்றி!

Pin It