தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கறி - 250 கிராம்
வெங்காயம் - 250 கிராம்
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
பட்டை - 1 தேக்கரண்டி
கிராம்பு தூள் - 1 தேக்கரண்டி
தயிர் - 150 கிராம்
இஞ்சி பூண்டு
விழுது - 1 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஆட்டுக்கறியை நன்றாக கழுவி, குக்கரில் போட்டு அதனுடன் தயிர், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். கடாயை அடுப்பில் ஏற்றி, வெண்ணெய் போட்டு உருகச் செய்ய வேண்டும். அதனுடன் பட்டை, கிராம்பு தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகுத் தூள், சீரகத் தூள், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், வேக வைத்த கறியை இதில் கொட்டி, நன்றாகக் கிளறி மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து இதைப் பரிமாறலாம்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: மிலிட்டரி ஹோட்டல்