தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கிலோ
தேங்காய் - 1
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
மிளகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 7
நல்லெண்ணைய் - 100 மி.லி.
கடுகு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிய துண்டு
உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை:
பொல பொலவென்று சாதத்தை வடித்து ஆற வைக்க வேண்டும். வாணலியில் கொஞ்சம் எண்ணைய் விட்டு, அதில் துறுவிய தேங்காயைப் போட்டு பொன் நிறத்திற்கு வறுத்துக் கொள்ளவும். பெருங்காயத்தை வறுத்து தூள் செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து அதில் கடுகைப் போடவும்.
கடுகு வெடித்ததும் அதில் மிளகு மற்றும் உளுந்து பருப்பை போட்டு, பருப்பு செந்நிறத்திற்கு வந்ததும் அதில் கறிவேப்பிலையைப் போட்டு பொரியும் தருணத்தில் இறக்கவும். வாணலியில் இருப்பதை ஆற வைத்த சாதத்தின் மேல் கொட்டவும். தேங்காய், பெருங்காயப் பொடி ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு கிளறவும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடுப்பி ஹோட்டல்