எதிரில் பயணிக்கும் பயணியை
பயணிக்க விடா வண்ணம்
தக்க வைக்கிறது எதிர்காற்று .
எனையெங்கோ இடம்புரியா
இடத்தில் வேரூன்ற
அடித்துச் செல்கிறது
கூடவே பயணிக்கும் காற்று...
இதற்கும் சேர்த்தே
விடைபெற்று விட்டேன்
வாசல் தாண்டும் பொழுது...
****
வேலி...
குளத்தில் பூத்திருக்கிறது
பேரழகு அல்லி.
சுற்றியிருக்கும்
நாணலைப் பற்றி யாருக்கு
என்ன தெரியும் ...
- நல முத்துகருப்பசாமி