வாகன உரசலின் சிரத்தையற்று
தார்ச்சாலையின் மத்தியில்
அழகுப்பதுமையாய் வீற்றிருக்கும்
வெள்ளாட்டுத் தாயொன்று…
குறும்பாட்டு ருசியில்
ஓவ்வொன்றாய்
தன்குட்டிகளை இழந்த விரக்தி..
அவ்வசிரத்தையின் இறுமாப்பு
வலிமையை காட்டினாலும்
இப்புவியில் கால்பாவாத
இன்னுமொரு உயிரல்லவோ
அதனுடன் காத்துக் கிடக்கிறது.
- வீ.சுரேஷ்குமார் (