நினைவுகள் பாய்மரம் விரிக்க ....
நங்௯ரமிட்டது தொலைந்து போன கனவுகள்
முன்னும் பின்னுமாய்
ஊஞ்சலாடியபடி
உள் வாங்குது எண்ண அலைகள் ....
அது ஒரு நிலாக்காலம் .....
உன் மூச்சை சுவாசித்த காலம் ....
கடிகார முள்ளாய் சேர்ந்தும் பிரிந்தும்
பகா பதமாய் தனித்து பொருள்படாமல்
இருந்த வசந்த காலம் .....
பயணங்கள் பட்டயம் எழுதிவிட்டு
பதுவிசாய் பதுங்க
மீண்டும்....
பழையன கழியாமல் ....
புதியன சேர்ந்தபடி!!!