கீற்றில் தேட...

Manநீளும் இரவுகளின்
ஒவ்வொரு
வினாடியின் முடிவிலும்
உன் பெயர் ஒலிக்கும்

காணும் கனவுகளின்
ஒவ்வொரு
காட்சியின் நடுவிலும்
உன் முகம் தெறிக்கும்

விரையும் காலங்களின்
ஒவ்வொரு
பொழுதின் இடையிலும்
உன் நினைவுகள் தொடரும்

தொலைவாகிப்போனபின்பு
நீளும் பிரிவுகளாய்
இன்னும் நீ...!

மறுபடி மறுபடி
உயிர்த்தெழுந்து...
இன்றும்...
நான் என் காதலுடன்
நாளை
உன் வருகைக்காக.... 

த.சரீஷ், பாரீஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)