
ஒவ்வொரு
வினாடியின் முடிவிலும்
உன் பெயர் ஒலிக்கும்
காணும் கனவுகளின்
ஒவ்வொரு
காட்சியின் நடுவிலும்
உன் முகம் தெறிக்கும்
விரையும் காலங்களின்
ஒவ்வொரு
பொழுதின் இடையிலும்
உன் நினைவுகள் தொடரும்
தொலைவாகிப்போனபின்பு
நீளும் பிரிவுகளாய்
இன்னும் நீ...!
மறுபடி மறுபடி
உயிர்த்தெழுந்து...
இன்றும்...
நான் என் காதலுடன்
நாளை
உன் வருகைக்காக....
- த.சரீஷ், பாரீஸ் (