
நமக்கான
நாற்காலிகள் காத்திருக்கின்றன
எதோ ஓர் கடலின் அலைகள் -
நம்
வருகை எதிர் நோக்கி நிலம் தொடுகிறது
தனக்கான வேக விளிம்பைத்தாண்டி-
நம்
சந்திப்பின் காலம் நோக்கி - விரைகின்றன
கடிகார முட்கள்
இனி எப்போதுமே நாம் சந்திக்க -
போவதில்லையெனும் உண்மையறியாமல்
- நா.செந்தில்