
கால் நனைத்து
அலையில் நிற்பதா
தலை நனைத்து
மூழ்கி குளிப்பதா
இடைவெளிகளின் மவுனம்
இம்சையானது
சொல்
கடலா நீ நதியா
நதியென்றால் பரிசலாக
கடலென்றால் பாய்மரமாக
இயலுமெதுவும் என்னால்
பூடகமான நீர்த்திடலே
எதுவாயினும்
முகத்துவாரத்தை கண்டுபிடி
முக்கியமாய்.
- அன்பாதவன், மும்பை