வளையாத கலைச்செருக்கும்
முற்றாது கொண்டவளே!
முத்தமிழே! உத்தமியே!
கற்றாரும் மற்(று)ஆரும்
காமுற்ற களஞ்சியமே!
சற்றேனும் சரிவற்ற
சரித்திரத்தின் சாட்சியமே!
எம்மழையும் தாராத
ஈரமிகு தீம்புனலே!
செம்மையொடு கோலோச்சும்
திருத்தமிழர்ப் பாமடலே!
எம்“மொழி”யும் வாழ்த்தவரும்
“எம்”மொழியே! செந்தமிழாம்
“செம்மொழியே”! உனக்கென்றன்
சிரம்தாழ்ந்த நல்வணக்கம்!!
- தொ.சூசைமிக்கேல் (