கீற்றில் தேட...

Church father


சிறப்பு பிரார்த்தனையொன்றிற்கு
தலைமையேற்ற போதகர்
ஒலிவாங்கியின் உதவியால்
நள்ளிரவைத் தாண்டியும்
மறுமை நாளின்
சிறப்பைத்
தெளிவாக சொல்லிக்கொண்டிருந்தார்
பகலெல்லாம்
உறங்கப்போகிற உற்சாகத்தில்.

மறுநாள்
காலை
பணிக்குப் போகவேண்டுமென்கிற
கவலை
என்னைப்போல எத்தனை பேருக்கோ?

இ.இசாக் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)