
வைக்கோல் போரில்
கழுவப்பட்டேன் வாய்க்கால் நீரில்
வளர்க்கப்பட்டேன் வயக்காட்டின் வரப்பில்
கூலிக்கு மார் அடித்தது போக
ஒரு கருங்காலிக்கு பாய்விரித்த பாவம்
என் பிறப்புக்கு வித்திட்டாள் தாயும்
பழி சொல்லுக்கு ஆளானாள் நாளும்
நெற்பயிரை தொட்டதுண்டு
போரடித்து அரிசி கண்டதுண்டு
ஆனால் அது வெந்ததைத்தான்
தினம் உண்டதில்லை
ஒருவேளை கஞ்சிக்கு தன்
உடல் பொருள் ஆவி அனைத்தும்
இழந்து நின்றாள் என் தாய்
என் பொருட்டு அதுவும்
ஆறாய் வேர்வை கொட்ட
போராய் துணிகள் துவைத்து
ஓடாய் ஒதுங்கி நிற்பாள்
பழந்துணிகள் கேட்டு பெற
மாற்று சேலை கொடுத்தாலும்
வாங்க மறுப்பாள் பதிலுக்கு
மேல்சட்டை கால்சட்டை
கேட்டு நிற்பாள் எனக்கு
பாடுபட்டு எனை வளர்த்து
பள்ளிக்கு போ என்றாள் அன்போடு
போகமாட்டேன் - உன் உடன் உழைத்து
உயர்த்திடுவேன் உனக்கு ஓய்வளித்து
படிப்புக்கு மட்டும் இல்லை மகனே
ஒருவேளை சத்துணவு கிடைக்கும் உனக்கு
என்றுரைத்து விக்கி நின்றாள்- என்
உடல் விரைத்து கல்லாய் போனேன்
தாயே எனை பேணி வளர்க்க
முயற்சித்தாயே
உனை பிணி வளர்க்க
எனை பிரிந்தாயே
தாயே உன் முயற்சி
தோற்றதம்மா
உன் வாரிசு நான் என
வேலையில் இறங்கிவிட்டேனம்மா
இருப்பினும் தாயே
உயர்வேன் ஒருநாள்
என் உழைப்பின் பலனால்
உன் லட்சிய கனவாய்
இருப்பேன் பலநாள்.........
- சுரேஷ் (