
இருக்கிறாள்
தன்னை யாரும் கவனிக்கக் கூடுமென
வண்ணாத்திப் பூச்சியை
எட்டிப்பிடிக்க
மேலே உயரும் கைகள்
ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள
இசை பிறக்கிறது
ஆமோதிப்பதாய்
நீளும் நாவினில்
உதிக்கும் நீர் குமிழிகள்
உடைந்து சிதறுகிறது
கண் சிமிட்டலுடன்
புதிதாய் மனிதன் கடந்து செல்கிறான்
உலகம் சுற்றும் மருண்ட விழிகளுடன்
மீண்டு வருகிறாள்
இம்முறை
கால்களும் உயர்ந்த வண்ணமாய்
வண்ணாத்திப் பூச்சியை எட்டிப்பிடிக்க
- பாண்டித்துரை