விடுகதை
இது
சில சமயம்
கடல்நீர்
சில சமயம்
கானல் நீர்
இதன் விரல்
நுனியில்தான்
மனிதர்கள்
பொம்மைகள்.....
கனவு, ஆசை,
காதல், பாசம்,
உறவு பரிவு
என்றெல்லாம்
ஏராளம் ஏராளமமாய்
இதன் பிடியில் முகமூடிகள்
விளையாடு களமாய்,
நாடக மேடையாய்,
களியாட்ட அறையாய்
எப்படியோ
பாவித்தாக வேண்டும் இதை
கருவறையில்
விழித்த பின்
நிஜங்களின் ராஜ்ஜியமாய்...
கல்லறையில்
உறங்குமுன்
போலிகளின் நாட்டியமாய்
இரு முகங்கள் இதற்கு.
ஆயினும்,
சூன்யத்தின் மறுபெயர்தான்
வாழ்க்கை என்பதை
எப்போதுமே உணர்வதில்லை நாம்!
சாகும் பொழுதைத்தவிர......
- நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை