
கணப்பொழுதில் நீண்டுவிட்டது
வெயிலின் கொடு நாவு
வெளியெங்கும்
பரவியிருக்கும் வெறுமை
முகத்திலறையும் பூதம்!
இரத்தம் வெளிறி
உறைந்துக் கிடக்கின்றன
இரவு பகல்கள்
பொருள் பிரிக்க..
சக்தி இழக்கிறது வாழ்க்கை!
காலடித்தடங்களில்
ஞாபகத்துணுக்குகள்
சிந்தியபடி மனம்.
நீ ஊருக்குப் போயிருக்கிறாய்!
- இப்னு ஹம்துன்