ஒரு முடிவு பேரிரைச்சலாகிறது
பிரிவு அல்லாது காலத்தின் கருணை
சத்தங்களால் காயப்பட்டும்
மெதுவாக படர்கிறது யாருமறியாத
Deathமௌனம்
வாழ்க்கையை புறம் தள்ளி
புன்னகையும் விசாரிப்புகளும்
தொலைகிறது
சோகங்களை விழுங்கிக்கொண்டு
பரிச்சயமாகிறது இறப்பின் ஒத்திகை
மலர்வளையங்கள் போதிக்கின்றன
ஆத்மார்த்தங்களை
இறந்தவனின் முன் காலம்
நிதர்சனமாகிறது
மரணம் நினைவுகூறுகிறது
மற்றுமொரு மரணத்தை.


அறிவுநிதி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It