பிரிவு அல்லாது காலத்தின் கருணை
சத்தங்களால் காயப்பட்டும்
மெதுவாக படர்கிறது யாருமறியாத

வாழ்க்கையை புறம் தள்ளி
புன்னகையும் விசாரிப்புகளும்
தொலைகிறது
சோகங்களை விழுங்கிக்கொண்டு
பரிச்சயமாகிறது இறப்பின் ஒத்திகை
மலர்வளையங்கள் போதிக்கின்றன
ஆத்மார்த்தங்களை
இறந்தவனின் முன் காலம்
நிதர்சனமாகிறது
மரணம் நினைவுகூறுகிறது
மற்றுமொரு மரணத்தை.
- அறிவுநிதி