Roadஇயங்குதல் என்பது
நகர்தல் மட்டுமா.?

சோர்ந்த மனசோடு
ஊர்கின்றார் சிலர்

புணி நிமித்தமாக
நடக்கின்றார் சிலர்

வெற்றிக் களிப்போடு
விரைந்து செல்கின்றார் சிலர்

தேவையின் போது
நடந்தோடுகின்றார் சிலர்.

அவசரம் கருதி
வேகமாகவும்
ஓடுகின்றார் சிலர்

ஊர்திகளிலிலும்
இப்படியான இயங்குதலுண்டு.

தாங்கிய தழும்புகள் சிரிக்க
ஏதுமறியாதது போல
அதிர்வுகளற்று
அப்படியே கிடக்கின்றன
சாலைகள்.


இ.இசாக், துபாய் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It