உன்னை வரையும் பாக்கியம்
என் விரல்களில் காத்திருக்கின்றன.
என் உடலெங்கும்
நீயான ஓவியம்
ஓட்டப்பட்டள்ளது!
மௌனம்
உன் மொழியான போதும்
விழிகள் உரையாடிக்கொண்டே இருக்கிறது.
எனதான சொற்களை
உன்னில் நிரப்புகிறேன்.
நீ வெளிப்படுத்தாத புன்னகை - சில
ஸ்தம்பிப்புகளை திறந்துகொண்டு
என் இதழ்ஆரம் நிகழ்கிறது.
நீ வினோதங்கள் ஆகிறாய்,
நான் புன்னகையாகிறேன்
கண்முன் - ஒரு
பயணத்தை ஒப்படைக்கிறாய்.
அதைமேற்கொள்ள
பூக்களையும் பரிசளிக்கிறாய்
உன்னை தாங்கிக்கொள்ள
கரம் ஏந்துகிறேன்
நீ நழுவி
எனக்குள் விழுந்து கொண்டே இருக்கிறாய்
யாரும் அறியாத ரகசியமாய்!

அறிவுநிதி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It