
நின்று, நடந்து
நெகிழ்ந்த நிமிடங்களை விட்டு
நெடும் தூரமாய்
நாம் பிரிகிறோம்.
கல்லறை அமைதியில்
கண்ணீர் கட்டும்
கணப் பொழுதுகளில்
நெஞ்சு பிளக்கும் வேதனையில்
நம் சவங்களை புதைத்து
நாம் பிரிகிறோம்.
தங்கைகளுக்கு அக்காவென்றோ
குடும்பபாரம் சுமக்கப்போகும்
தந்தையிழந்த தனயனென்றோ
அடுக்கி வைத்து காரணங்களால்
இடைவெளி நிரப்பி
நாம் பிரிகிறோம்.
பிறிதொரு நாள்.
நினைவுகளை நெஞ்சில் புதைத்து
நெருப்பில் நீ புகையாய் விண்ணுக்கும்,
கடைசி மூச்சில்
கண்களில் உன் முகம் தேக்கி
நான் புதையுண்டு மண்ணுக்கும்,
நாம் பிரிகிறோம்.
- பாஷா (