மடல்களின் காலைவேளை
ஏக்கங்களின் சமுத்திரம்சாம்பல் வழிய விரிந்தது வானமாய்
‘என் வேட்கைப்பேராற்றின்
சில கணச்சரிவில் வெடித்துச் சிதறும்
சிறு குமிழி
உன் ஆணவம்’ என்றாள்
பனிநீரில் நின்றவாறு
சாதகத்திற்கு வந்தவள் முன்
குளிர் விறைத்து நின்றது
- குட்டி ரேவதி
ஏக்கங்களின் சமுத்திரம்