உணவு
உடை
உறையுள்
அப்புறம் நீ
என் அத்தியாவசிய தேவைகள்
*********************
உன்
கையை குத்திய
ரோஜா முள்ளை
சபிக்க மனமில்லை
சமயம் கிடைக்கும் போதெல்லாம்
தடவிக்கொடுப்பேன்
உன் கை தொட்ட சுகம்...
*********************
உன் பெயர் தெரியாவிட்டாலென்ன
நான்
பூக்களையெல்லாம்
பெயர் தெரிந்தா ரசிக்கிறேன்?
*********************
உன்னைப்போலத்தான்
உண்மையைச் சொன்னால்
எனக்கும் என்னைப் பிடிப்பதில்லை
*********************
உனக்குளிருக்கும்
நானும்
எனக்குளிருக்கும்
நீயும்
காதலிக்கிறோம்
நமக்குத் தெரியாமல்
- ரிஷி சேது (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரிய மாடலும், திராவிட மாடலும்!
- தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!
- சாமியார் ராம்தேவா? சாவர்க்கர் ராம்தேவா?
- அரபு இலக்கியத்தின் உயிர்நாடி, ‘ஆயுதங்களாகும் பாலஸ்தீனக் கவிதைகள்’
- பங்கு பிரிக்கும் சண்டை! சந்தி சிரிக்கும் பாஜக!
- தேறா ஆணையம்!
- அழைக்கிறார் புரட்சிக்கவிஞர்
- திராவிடக் கவிஞர் பாரதிதாசன்
- மார்க்கட்டு நிலவரம்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 25, 2024 இதழ் மின்னூல் வடிவில்...