என் கதவுகளை உடைத்து
உன்னை நோக்கி
என்னில் அடைத்து வைத்திருக்கும்
உன் சித்திர கலவைகள் சிதறுகிறதே
சேகரித்தாயா?
என் வறண்ட பாலைவனத்தில்
உன் காதல் நீருக்காய்
அலைபாய்ந்த என் ஆசைகளை
பிச்சைக்கார குரலின் நிராகரிப்பாய்
நீ தூக்கி ஏறிந்த நிமிடங்களை
என் கடிகாரத்தில் நான்
காணவேயில்லை.
கண்டாயா?
என்
இதயம் முழுவதும் உன் பெயர் நிரப்பியிருந்தும்
இது ஒரு விபத்தென்றே என்னால்
பொய் சொல்ல முடிகிறது
என்ன செய்வது....
எரிந்த நிலையிலும் என்னால் உன்னை
வெறுக்க முடியவில்லை!
- பாஷா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரிய மாடலும், திராவிட மாடலும்!
- தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!
- சாமியார் ராம்தேவா? சாவர்க்கர் ராம்தேவா?
- அரபு இலக்கியத்தின் உயிர்நாடி, ‘ஆயுதங்களாகும் பாலஸ்தீனக் கவிதைகள்’
- பங்கு பிரிக்கும் சண்டை! சந்தி சிரிக்கும் பாஜக!
- தேறா ஆணையம்!
- அழைக்கிறார் புரட்சிக்கவிஞர்
- திராவிடக் கவிஞர் பாரதிதாசன்
- மார்க்கட்டு நிலவரம்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 25, 2024 இதழ் மின்னூல் வடிவில்...