ஒரு
புன்னகை
கடந்துபோகிறது

நிமிர்ந்து நடக்கும்
நதியைப்போல...

சட்டென்று
பின்தொடர்ந்து
முழிக்கிறது மனசு
வாகனங்களின்
தெருவில் மாட்டிக்கொண்ட
ஒரு
குழந்தையைப்போல,

யாரும்
கண்டுகொள்ளாத
குழந்தையின் கண்ணீர்
எனக்குள் நுழையும்
ஒரு
நதியின் கவிதையென

வாகனங்களின்
இரைச்சலையும் மீறி
என்
காதுகளை அடைகிறது.
புல்லாங்குழலின்
சங்கீதம்

த.அகிலன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It